மாணவர்களின் கவனம் படிப்பிலிருந்து சிதறினால் வருங்காலம் எல்லோருக்கு பாழாய் போகுமென உணர்ந்த வெளிச்சம் மாணவர்கள் கடந்த 7 வருடமாக பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு பலவிதமான பயிற்சிகளை வழங்கி வருவதை தாங்கள் அறிவீர்கள். குறிப்பாக மற்றவர்களுக்கு வழிக்காட்டும் நபர்களை உருவாக்குவதுதான் வெளிச்சத்தின் நோக்கம், இந்த பணியில் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பக்கம் உள்ள திருவத்திபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பினை எடுக்க SJSRY திட்டத்தின் கீழ் இசைவளித்தோம்…
அம்மா அப்பா படுற கஸ்டத்தை அவங்க கூட சொல்லலையேக்கா-பாரதி |
மாணவர்கள் தரப்பில் யாருமே வரவே இல்லை மாணவிகளுக்கு முன்னால் வந்து சொல்ல வெட்கப்பட்டனர்.. பல மாணவர்கள் சிரிச்சாங்க, ஆனால் ஒரு மாணவன் மட்டும் எதையும் பேசாம மொவுனமாக இருந்தான்.. மொல்ல பேச எழுந்தான் பாரதி… மெல்ல மவுனம் கலைத்து அவன் பேச, நம் கண்களிலும் நீர் வழிந்தது.. இந்த பள்ளிகூடத்திலேயே நான் தான் வால்பையன், கிளாஸ்ல எங்க பிரச்சனை நடந்தாலும் நான் தான் காரணமா இருப்பேன், இங்க வர்றதுக்கு முன்னால விளையாட்டு பீரியடாச்சே என்னடா பேசறாங்களாம், அதுள்லாம காலையில எங்க கிளாஸ்ல காலையில பிரச்சனை விசாரிச்ச ஹெட்மாஸ்டர் என்னைய திட்டினார் (தலைமை ஆசிரியரும் கூட்டத்தில் இருந்தார்) "கட்" அடிச்சிடலானு நினைச்சேன் என்றவன் படிப்பதற்கு அவன் படும்பாடுகளை விவரித்தான்.. எனக்கு தெரியாத சரக்கு (டாஸ்மார்க் அயிட்டம் தாங்க) பேரே இல்லை.. ஏன்னா எங்கப்பா அம்மா சென்னையில வேலை செய்யிறாங்க நான் பாட்டி வீட்டுல இருக்கிறேன் எங்க மாமாஎன்ன சரக்கு வாங்கிட்டு வரசொல்லுவார் போகலைன்னா அடிப்பார்.. அதனாலேயே நான் படிக்காமல் சுத்திக்கிட்டு இருந்தேன்.. இன்னைக்கு தான் எங்கம்மா அப்பா படுற கஸ்டங்களை உணர்ந்திருக்கேன் என்றவன்.. அவங்க கஸ்டங்களை இதுவரை எங்களுக்கு யாரு சொன்னதில்லையேக்கா என்றான் கண்ணீருடன்… இந்த நிகழ்ச்சிக்கு மொத்த்தில் மாணவர்களின் மனசாட்சியை கேள்வி கேட்கும் நிகழ்ச்சியாக இருந்தது.
குறிப்பு: மாணவர்களின் பெயர், இந்த கட்டுரைகள் பல மாணவர்களின் நலன் கருதி வெளியிடப்படுகிறது.. தவறுகளை சுட்டிகாட்டுங்கள்…
நிகழ்ச்சியின் தொகுப்பை பார்க்க:
| ||
சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…
நன்று .. அன்பும் பொறுமையும் தான் மிக முக்கியம் இன்றைய இளைய தலை முறைக்கு .. பின் பேசுதல் .. பேசுதல் என்பதில் பெரும் பங்கு ஆசிரியருக்கும் பிறருக்கும் ...பெற்றோர் கூறுவதை விட பிறர் கூறும் போது கேட்பார்கள் .. காலை முதல் மாலை வரை பெரும்பாணமி நேரம் செலவு செய்வது பள்ளியில் அங்கு ஆசிரியர் அன்புடன் பொறுமையாக கூறினால் கண்டிப்பாக கேட்பார். வீட்டில் கூட போம்மா என சொல்லி கடைக்கு போக மறுக்கும் பிள்ளை அடுத்த வீடு அக்கா ஆன்டி சொன்ன உடனே ஓடி போய் உதவி செய்வாங்க .. பிறர் பாராட்டுதல் பிறரிடம் நல பெயர் வாங்குதல் என்பது இயல்பாகவே அமைந்து விட்ட குணம் .. இது போன்ற நிகழ்சிகளில் எடுத்து சொல்லும் போது புரிய வாய்ப்பு அதிகம் .. வாழ்த்துகள் வளரட்டும் உங்கள் பணி..