Archive for April 2010


(வெளிச்சத்தின் கல்வி பயணத்தில் மேலும் ஓர் வெற்றி செய்தி)

ஏழை மாணவர்களின் வாழ்வை மாற்றிட கண்ணீரையும்,வலிகளை மட்டுமே சுமக்கிறது என்பது வெளிச்சத்தினை நன்கு அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும் கூடவே மாணவர்களின் வாழ்கையை வசந்தமாக்குவது தான் வெளிச்சத்தின் லட்சியம் என எண்ணி வலிகளையெல்லாம் தாங்கிக்கொண்டு வெளிச்சம் பயணிப்பதை நீங்கள் அறிவீர்...மேலும் முதல்தலைமுறை மாணவர்களின் வாழ்வை மாற்ற வெளிச்சம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அற்புதமானவை என்பதை உங்களிடம் நிரூபிக்க கடமை பட்டுள்ளோம்..அதற்காகவே சில வெளிச்சத்தின் இடைவிடாத போராட்டங்களை இங்கு பதிவு செய்கிறோம்...

2004 ம் ஆண்டு முதல் வெளிச்சத்தின் கல்விகாண பணிகளின் அறுவடையாய் செந்தில் இன்று ஜூனியர் சைண்டிஸ்ட் என்பதையும் பதிவுசெய்கிறோம்.


2008 ம் ஆண்டு 30 மாணவர்கள் கல்லூரியை விட்டு ரோட்டில் நின்றதை வெளிச்சம் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் செய்தி வெளியானது அதன் மூலம் அந்த மானவர்களின் கல்விக்கு உதவியது...
அதன்பிறகு 2009 ம் ஆண்டு 50 மாணவர்கள் கல்விக்கட்டாணம் செலுத்தமுடியாமல் படிப்பை இழக்க இருந்த சூழலில் வெளிச்சம் நிதி உதவிக்காக காத்திருக்கும் முதல்தலைமுறை ஏழை மாணவர்கள் என்கிற செய்தியை வெளியிட்ட தினமனி நாளிதழின் பேருதவியால் சில மாணவர்கள் படிப்புக்கு வழி பிறந்தது..இப்படியே மாணவர்களின் எண்ணிக்கை150 தொட்டபோது முதன் முதலாக வெளிச்சத்தின் முழு தகவலும் 16.1.09 அவள் விகடன் இதழ் கல்வி இல்லை என்பதும் ஊனம்தான் என செய்தி வெளியிட்டது என்பது மகிழ்ச்சிக்குறிய விசயம்...

அதன் பிறகு வெளிச்சம் தரும் மனுசி என குமுதம் நாளிதளிலும் செய்தியானது..ஒன்று இரண்டாகி இன்று 486 மாணவர்களின் கல்விக்கு வெளிச்சம் வழிகாட்டுகிறது..

அதிகமாகிபோன மாணவர்களின் கல்வியை காப்பாற்ற வெளிச்சம் மாணவர்களால் முதல் தலைமுறை மாணவர்களின் படிப்பை பாதுகாக்க திரைப்பட நடிகர் ஜெயம் ரவி அவர்களோடு சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது அதற்கும் பலன் கிடைக்க வில்லை..ஆனால் கல்லூரிகள் கல்விக்கட்டணம் செலுத்தமுடியாததால் மாணவர்களை படிக்க விடாமல் கல்லூரியை விட்டு வெளியே அனுப்ப இருக்கிற சூழலில் வேறு வழியில்லாமல் 40 வெளிச்சம் மாணவர்கள் சென்னை போலீஸ் கமிஸ்னரிடம் தமிழகம் முழுக்க உண்டியல் குழுக்கிட அனுமதி வாங்கினோம்..அதன் படி சென்னை முழுக்க உண்டியல் ஏந்தினோம்..இச்செய்தி தமிழக அரசியல்,டெக்கான் குரேனிக்கல்,என்.டி,டிவி யிலும் செய்தியானது..வெளிச்சம் டிசம்பர் மாதம் முழுக்க ஏந்திய உண்டியல் செய்தி முதல்வரின் காதுகளில் விழுந்ததோ என்னவோ..ஜனவரி -6 ம் தேதி முதல்தலைமுறை ஏழை மாணவர்களின் கல்வியை அரசே ஏற்க்கும் என்று அறிவித்தார்கள்..அதனை தொடர்ந்து முதல்வருக்கு நன்றி தெரிவித்த முதல் அமைப்பு வெளிச்சம் தான்...

ஆனாலும் வெளிச்சம் பணி வேறு வழியில் தேடியது..அதன்படி தேவைப்பட்டது முதல்தலைமுறை ஏழை மாணவர்களின் கல்வியை அரசே ஏற்க்கும் அறிவிப்பில் அனைத்துக்கட்டனங்களையும் அரசே ஏற்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தது அச்செய்தி தினமனியில் ஜனவரி 17 அன்று செய்தியானது...ஆனால் 91 மாணவர்கள் கல்லூரியை விட்டு அனுப்பப்படுகிற சூழலில் வெளிச்சம் மாணவர்கள் அரியலூரிலும்,24 அன்று சென்னையில் பல்வேறு இடங்களில் (தலைமை செயலகம், முதல்வர் வீடு உட்பட)இந்த போஸ்டர் வெளிச்சம் மாணவர்களால் ஒட்டப்பட்டது..போஸ்டரில் வங்கி கடன் முழுவதுமாக கிடைக்காததாலும்,வறுமையால் கல்லூரிக்கட்டணம் செலுத்த முடியாததாலும் கல்லூரிப்படிப்பை இழக்க இருக்கிற முதல் தலைமுறை ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் என போஸ்ட்டரில் போட்டிருந்தோம்..22ம் தேதி உயர்கல்வி மானிய கோரிக்கை விவாத நாள் என்பதால் இச்செய்திவிவாதிக்க படவேண்டும் என நாம் திட்டமிட்டோம் போஸ்ட்டரில் உள்ள செய்திகளையே மனுவாக கொடுத்திருந்தோம்..

இந்த தொடர் முயற்சிகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பில் அடுத்த வருடம் கல்லூரியில் சேருகிற மாணவர்கள் மட்டும் தான் பயனடைவார்கள் என தமிழக அரசால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.போராட்டங்களும்,தொடர்முயற்சிகளும் தோற்றதாக இல்லை என்பது வரலாறு...அதன்படி கல்விக்கான தொடர்பயணத்தில் வெளிச்சம் வெற்றி பெற்றுள்ளது என மகிழும் இந்த சமயத்தில் இன்னுமொரு விசயத்திற்க்காக கோரிக்கை வைக்கிறது.... அதன் கீழ் முதல் தலைமுறை மாணவர்களின் கல்வியை அரசே ஏற்கும் அரசாணையில் அடுத்த வருடம் கல்லூரியில் சேருகிற மாணவர்களுக்கு மட்டும் தான் இந்த விதிகள் பொருந்தும் ஆனால் இப்போது படித்து கொண்டிருக்கும் மாணவர்களின் வாழ்கை என்னாவது...
முதல்வரைய்யா! உங்களின் பேனா இப்போது பட்டினி கிடைப்பவனுக்கும்(கல்லூரிப்படிப்பை இழக்க இருகிற மாணவர்களுக்கும்) சேர்த்தே விதி செய்யட்டுமே...
கோரிக்கைகளோடு..
வெளிச்சம் மாணவர்கள்

(பத்திரிக்கை செய்திகளையும் புகைப்படங்களையும் http://velichamedu.wordpress.com இந்த இணைய தளத்தின் பத்திரிக்கை துளிகள் பக்கத்தில் காணலாம்)



புதுடில்லி 29-04-2010:
நாடு முழுவதும் அங்கீகாரம் பெறாத 200 கல்வி நிறுவனங்களும், 21 போலி பல்கலைக்கழகங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் நேற்று லோக்சபாவில் கூறியதாவது:
அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (ஏ.ஐ.சி.டி.இ.,) விதிமுறைகளின்படிதான் நாட்டி<<லுள்ள தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெறாமல் 201 கல்வி நிறுவனங்கள் நாடு முழுவதும் இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றில் மகாராஷ்டிராவில் 74, டில்லியில் 24, கர்நாடகாவில் 22, தமிழகத்தில் 19, உத்தரபிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 13 நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஏ.ஐ.சி.டி.இ.,யின் ஒழுங்குமுறை நடைமுறைகளை மீறி செயல்படுகின்றன.

இவற்றில், ஐதராபாத்தில் உள்ள ஐ.எஸ்.பி., டில்லி, குர்கான் மற்றும் சண்டிகரில் இயங்கி வரும் ஐ.சி.எப்.ஏ.ஐ., பிசினஸ் ஸ்கூல், டில்லியில் உள்ள ஐ.ஐ.பி.எம்., கே.ஆர்.மங்களம் குளோபல் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், குர்கானிலுள்ள ஜே.கே.பிசினஸ் ஸ்கூல், பெங்களூரிலுள்ள எம்.பி.பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் பாரதிய வித்யா பவன், சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும்.

பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) நடத்திய ஆய்வில் 21 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கிது தெரியவந்திருக்கிறது கண்டறிந்துள்ளது. இவற்றில் எட்டு பல்கலைகள் உ.பி.,யிலும், ஏழு டில்லியிலும் உள்ளன. யு.ஜி.சி.,மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., அமைப்புகள் இவை குறித்து எச்சரிக்கை அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றன.

இதுபோன்ற போலி கல்வி நிறுவனங்களைத் தடுப்பதற்காக, புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும். சட்ட நிபுணர்கள் ஆலோசனையின் பேரில் போலி நிறுவனங்களுக்குத் தகுந்த தண்டனை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

திருச்சி:கல்விக் கடன் வழங்காத வங்கிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடருங்கள் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சவுண்டையா கூறினார்.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் சவுண்டையா பதிலளித்து பேசியதாவது: முசிறி திருத்தியமலை பாலப்பட்டி ராஜேந்திரன் என்ற விவசாயி பெயரில் வங்கியில் பணத்தை பெற்றுக் கொண்டு டிராக்டர் வழங்காமல் இருப்பது கிரிமினல் குற்றமாகும். உடனடியாக சம்பந்தப்பட்ட டீலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்திற்கும் தற்போது ஆட்கள் வருவது குறைந்துள்ளது.

கடந்தாண்டில் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே இந்தாண்டு பணிக்கு வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் வாரத்திற்கு ரூ.2.5 கோடி சம்பளம் கொடுத்த இடத்தில் தற்போது ரூ.ஒன்றரை கோடியை தாண்ட முடியவில்லை. இதற்கு காரணம் என்னவென்றும் தெரியவில்லை.ஏரி, ஓடைகளில் இருந்து வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்கு மாட்டு வண்டியில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். டிராக்டரில் எடுத்துச் செல்ல வேண்டுமென்றால் விஏஓ, ஆர்ஐ உள்ளிட்ட அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

லால்குடி தாலுகா அலுவலகத்தில் கம்ப்யூட்டரில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிற. அதுவரை கம்ப்யூட்டர் பட்டா, சிட்டாவில் ஏதாவது தவறுகள் இருந்தால் தாசில்தார் அல்லது ஆர்.டி.ஓ. விடம் விண்ணப்பித்து சரி செய்து கொள்ளலாம். துவரம் பருப்பை பதுக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.முத்தரசநல்லூரில் காவிரியின் குறுக்கே கதவணை கட்டுவதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் மூலம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான ஆய்வுகளுக்கு கூட அரசு பணம் ஒதுக்கியுள்ளது. அதனால் கண்டிப்பாக முத்தரசநல்லூரில் கதவணை அமைக்கப்படும். உய்யக்கொண்டான் கால்வாயில் பெட்டவாய்த்தலை சர்க்கரை ஆலை கழிவு நீர் திறந்துவிடுவது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மாதிரி எடுத்து சோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.தனியார் வங்கி ஒன்று கல்விக்கடன் தராமல் இழுத்தடித்து வருவதாக விவசாயி ஒருவர் புகார் கூறினார்.

கல்விக்கடன் வழங்காத அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு பலமுறை அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அரசு நிர்வாகத்திற்கு கட்டுப்படாதவர்கள் போல நடந்து கொள்கின்றனர். இதுகுறித்து கடந்த வாரம் திருச்சி வந்திருந்த ஐகோர்ட் நீதிபதி கூறுகையில், கல்விக் கடன் வழங்காமல் இழுத்தடித்த வங்கிக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறினார். அதனால் இனிமேல் அனைத்து தகுதிகளும் இருந்தும் கல்விக்கடன் கிடைக்காத நபர்கள் கடன் வழங்காத வங்கிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடருங்கள்.

நானே வக்கீல்கள் குறித்த விவரங்களை தருகிறேன்: சிறப்பு பட்டா மாறுதல் முகாம்:தொட்டியம் தாலுகாவில் உள்ள பட்டா மாற்றம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க தொட்டியத்தில் அடுத்த வாரம் டி.ஆர்.ஓ தலைமையில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடத்தப்படும். அதனால் அப்பகுதியில் பட்டா மாற்றுவதில் பிரச்னை உள்ளவர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறலாம். போசம்பட்டி ஊராட்சியில் தெருவிளக்குகளை சீரமைக்க மின்வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பொன்னுசாமி பேசுகையில், தமிழகத்திலேயே முதன் முறையாக வனவிலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3 விவசாயிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் புதூர்பாளையம், எம்.கே.புதூர் ஆகிய ஊர்களில் உள்ள விதைப்பண்ணைகள் கடந்தாண்டு லாபகரமாக செயல்பட்டுள்ளன என்றார்.

மாவட்ட வன அலுவலர் மணி பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆயிரம் குரங்குகளுக்கு மேல் பிடிக்கப்பட்டு பச்சமலை பகுதியில் விடப்பட்டுள்ளது. இந்தாண்டும் குரங்குகள் பிடிக்கப்பட உள்ளது. மேலும் கடந்த ஆண்டு வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க புலிவலம், மருங்காபுரி உள்ளிட்ட பகுதிகளில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சோலார் மின் வேலிகள் போடப்பட்டுள்ளது. இந்தாண்டும் தேவையான பகுதிகளில் சோலார் மின் வேலிகள் அமைக்கப்படும் என்றார்.

தவிக்க விட்ட அதிகாரி:தொட்டியம் வட்டார தோட்டக்கலைத்துறை மூலம் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 23 பேர் 3 நாள் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த 20ம் தேதி ஒகேனக்கல் சென்ற இவர்களை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தங்கராஜ், 'அருவியில் குளித்து விட்டு வாருங்கள். ஊருக்குச் செல்லலாம்' என்று கூறியுள்ளார். விவசாயிகள் குளித்து விட்டு திரும்பி வந்த பார்த்தபோது தங்கராஜ் வரவில்லை. சில மணி நேரம் கழித்து தங்கராஜும், அவரது நண்பரும் குடிபோதையில் வந்துள்ளனர். இதனால் பஸ்சில் வந்த விவசாயிகள் சிலருக்கும், தங்கராஜுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், விவசாயிகளை கண்டபடி திட்டிவிட்டு அங்கிருந்து பஸ்சை எடுத்து வந்துவிட்டார். உதவி தோட்டக்கலை அலுவலர்களும் விவசாயிகளுடன் இருந்து விட்டனர். பின்னர் விவசாயிகள் இரவு முழுவதும் அங்கு தங்கியிருந்து மறுநாள் காலையில் பஸ் பிடித்து ஊருக்கு வந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட கலெக்டர், இதுகுறித்து தோட்டக்கலைத்துறை இயக்குனருக்கு தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தோட்டக்கலை அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

நன்றி தினமலர்..
http://www.dinamalar.com/district_main.asp?ncat=Tiruchirapalli

ஏப்ரல் 23,2010,00:00 IST

சென்னை : குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில், 'குடும்பத்தில் முதல் பட்டதாரி' என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டக் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், தொழிற்கல்வி படிப்பை ஊக்குவிக்க சாதி பாகுபாடின்றி, வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்' என, ஜனவரியில் சட்டசபை கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை செயலர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: வரும் 2010-11ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும். கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக் கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும். கவுன்சிலிங் முறையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். முந்தைய ஆண்டுகளில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.

தங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும். சான்றிதழ்களை சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர்/அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

'குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை' என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப் படும். உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெற வேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

40 சதவீதம் பேர் பயனடைவர்: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பொறியியல் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப் பங்களில், மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியா என்ற விவரமும் கேட்கப்பட்டது. அதன்படி, 40 சதவீத மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலிலும் 40 சதவீத மாணவர்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது. இதர தொழிற்கல்வி படிப்புகளிலும் இதே நிலையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டம் ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் சேருபவர்களில் 40 சதவீதம் பேர் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருப்பர் என்றும், தமிழக அரசின் இச்சலுகை மூலம் ஆண்டுதோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற விவரம் ஆவணங்களுடன் கேட்கப்படுவதால், இந்த எண்ணிக்கை சற்று குறையவும் வாய்ப்புள்ளது.
நன்றி தினமலர் http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7302







வெளிச்சம் மாணவர்களால் இந்த போஸ்ட்டர் தமிழக சட்டசபையில் உயர்கல்வி மானிய கோரிக்கை நாளான 22.4.10. சென்னையின் பல்வேறு இடங்களில் (தலைமை செயலகம், முதல்வர் வீடு உட்பட) ஒட்டப்பட்டப்படிருந்தது..மேலும் வெளிச்சம் இயக்குநர் அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து மாணவர்களின் கோரிக்கைகளாக மனுவாக கொடுத்திருந்தோம் (மனுவினை பின்புறம் இணைக்கிறோம்)..அதன் படி வரகூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சந்திரகாசி,கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் திருமதி லதா,ஆகியோர் உயர்கல்வி மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்தில் கேள்வி எழுப்பினர்....


வெளிச்சம் மாணவர்களால் சென்னை ரயில் மற்றும் ஆட்டோக்களில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்..முதல் தலை முறை ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள்....

ஏப்ரல் 12,2010,05:40 IST

அனைத்து விதமான கல்விக் கடன்களுக்கும் செலுத்தப்படும் வட்டிக்கு வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது இன்ஜினியரிங்கில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிப்பவர்கள், மருத்துவம் படிப்பவர்கள், மேலாண்மை கல்வி பயில்வோர், கணிதம், புள்ளியியல் உட்பட அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு பயில்வோருக்கு வழங்கப்படும் கல்விக் கடனுக்கான வட்டிக்கு, வரித் தள்ளுபடி சலுகை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் வருமானவரிச் சட்டம் பிரிவு 80இ-யில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தொழில் கல்விக்கான கடன் உட்பட அனைத்து விதமான கல்விக் கடன்களுக்கான வட்டிக்கும் வரித்தள்ளுபடி சலுகை அளிக்கப்படும். இதனால், வரும் கல்வி ஆண்டு முதல், பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிக்க விரும்புவோர் கல்விக் கடன் பெற்றால், அதற்காக செலுத்தப்படும் வட்டிக்கு வரித்தள்ளுபடி சலுகை பெறலாம். இத்தகவலை மத்திய நிதியமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மத்திய அரசின் இச்சலுகையால் நிறைய மாணவர்கள் பலன் அடைவர்.


நன்றி தினமலர்



முதல் தலைமுறை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள்..

கல்லூரிக்கட்டணம் செலுத்தமுடியாமல் தங்களது கல்வியை இழக்க இருக்கும் முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி பறிபோக இருக்கும் மாணவர்களுக்காக அரியலூர் மாவட்டம் முழுவதும் அரியலூர் மாவட்ட வெளிச்சம் மாணவர்களால் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது..அந்த சுவரொட்டி உங்களின் பார்வைக்கு சம்ர்ப்பிக்கிறோம்...

வெளிச்சம்
edu.velicham@gmail.com
velicham.students@gmail.com

சென்னை: கல்வி கடன் வழங்காமல் அலைகழித்ததால், மாணவரின் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அவர் கோரிய கடன் தொகையையும் வழங்க உத்தரவிட்டது.

கோவையில் உள்ள `பார்க் ஸ்கூல்' என்ற கல்வி நிறுவனத்தில் தினேஷ் என்ற மாணவர், `ஏரோநாட்டிக்கல்' பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

தினேஷ் கல்வி பயில்வதற்காக பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சேலம் ஆத்தூர் கிளையில் அவரது தந்தை கஜேந்திரன் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் கடன் தரவேண்டும் என்றும், இதற்காக 3.36 ஏக்கர் நிலத்தை சொத்து ஜாமீனாக கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல், இந்த சொத்துக்கான உத்தரவாதத்தை கஜேந்திரனின் நண்பர் ஒருவரும் அளித்திருந்தார்.

ஆனால் கடன் விண்ணப்பத்தை வங்கி நிராகரித்து விட்டது. அதைத் தொடர்ந்து, தனது விண்ணப்பம் நிராகரிப்பட்ட காரணத்தை அறிவதற்காக வங்கிக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கஜேந்திரன் விண்ணப்பம் செய்தார்.

ஆனால், அதற்கு வங்கி பதில் அளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து கஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், தினேஷ் படிக்கும் `ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்' படிப்பு, மத்திய அரசின் ஒப்புதல் பெறவில்லை என்பதால் எங்களுக்கு கல்வி கடன் மறுக்கப்படுகிறது.

ஆனால், இந்த கல்லூரி கொடுத்துள்ள சான்றிதழில் இந்த படிப்பு மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இதே கல்விக்கு 2 மாணவர்களுக்கு இந்த வங்கியின் சிவகங்கை மற்றும் சென்னை வண்ணாரப்பேட்டை கிளைகள் கடன் வழங்கியுள்ளன. எனவே, தினேசுக்கும் வங்கி கடன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்த `பாங்க் ஆப் இந்தியா', மத்திய அரசின் கல்வி கடன் பட்டியலில் இந்த படிப்பு இடம் பெறவில்லை என்பதால் அவருக்கு கடன் வழங்க முடியாது எனக் கூறியது.

இந்த வழக்கை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் அதற்கான விதிமுறைகள் அடிப்படையில் கல்வி கடன் வழங்க வேண்டும்.

எல்லா படிப்புகளுக்கும் கடன் வழங்க வேண்டும் என்பது அந்த விதிமுறையில் உள்ளது. ஆனால், தினேஷ் விஷயத்தில் வங்கி பாரபட்சம் காட்டியுள்ளது.

எனவே, இன்னும் 2 வாரத்துக்குள் தினேசுக்கு இந்த வங்கி கல்வி கடன் வழங்க வேண்டும். முறைப்படி விண்ணப்பம் செய்தும், உயர்நீதிமன்றம் வரை மாணவரை அலைகழித்ததால், மாணவரின் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரத்தை இன்னும் 2 வாரத்துக்குள் ஆத்தூர் வங்கிக் கிளை வங்கி வழங்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

நன்றி தட்ஸ்தமிழ்

வெள்ளிக்கிழமை, மார்ச் 12, 2010, 14:28[IST]

Source:
http://thatstamil.oneindia.in/news/2010/03/12/hc-impose-fine-on-bank-refusing-edu.html



வியாபார நோக்கத்தில்தான் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அமைக்கப்படுகின்றன என்று நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறினார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெங்கட்ராமன் லண்டனில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு வேதியியலில் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. இந்நிலையில் லண்டனிலுள்ள இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: கேம்பிரிட்ஜ் போன்ற தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் பல்கலைக்கழகங்களை அமைப்பதில்லை. ஆனால் வேறு சில பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் பல்கலைக்கழக வளாகங்களை அமைப்பது வியாபார நோக்கத்தில்தான்.அப்படி பல்கலைக்கழகங்கள் சிங்கப்பூரிலோ அல்லது மற்ற இடங்களிலோ அமைத்தாலும், அதன் அசல் தன்மையை புதிய பல்கலைக்கழகத்தில் கொண்டு வர முடிவதில்லை.
பல்கலைக்கழகத்தின் கலாசார மூலத்தை புதிய பல்கலைக்கழகங்களில் கொண்டு வர முடிவதில்லை.
ஆனால் அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அமையும்போது இந்தியாவிலுள்ள கல்வியாளர்கள், பேராசிரியர்களின் சம்பளம் கணிசமாக உயரும்.இந்தியாவில் ஏராளமான நல்ல விஞ்ஞானிகள் உள்ளனர். அவர்களின் படைப்புகளும் உலகத் தரத்தில் இருக்கின்றன. சர்வதேச அளவில் அவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்தியாவுக்கு இன்னும் முன்மாதிரியான நபர்கள் தேவை. அப்படி ஒரு நாள் வரும்போது இந்திய விஞ்ஞானிகள் அங்கீகரிக்கப்படுவார்கள்.
வேதியியலில் நான் செய்த சாதனைக்காக இந்திய அரசு எனக்கு பத்ம விபூஷன் விருதை வழங்கி கெüரவித்துள்ளதை நான் பெருமையாக நினைக்கிறேன். அந்த விருதை பெறுவதற்காகக் காத்திருக்கிறேன்.
இந்திய நாட்டின் 2-வது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் பெறுவதில் பூரிப்படைகிறேன்.
நோபல் பரிசு பெற்றதால் எனது வாழ்க்கை முறை மாறிவிடவில்லை. நோபல் பரிசு பெறுவதற்கு முன்னர் என்னை சிலருக்கு மட்டுமே தெரியும்.
அதே நேரத்தில் விருது பெற்ற பின்னர் பலர் என்னை அடையாளம் தெரிந்து கொண்டுள்ளனர்.இந்தியர்களுக்கு என்னிடமிருந்தோ அல்லது எவரிடமிருந்தோ எந்த அறிவுரையும் தேவையில்லை. நான் விஞ்ஞானிகள் குடும்பத்தில் பிறந்தவன்.
2002-ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு ஆண்டுதோறும் செல்கிறேன். 2 அல்லது 3 வாரங்கள் இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு கல்வி நிலையங்களுக்குச் சென்று பாடம் எடுக்கிறேன். பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்துக்கும் (ஐஐஎஸ்சி) சென்று பாடம் நடத்துகிறேன் என்றார் அவர்.

First Published: 31 Mar 2010 12:17:00 AM IST நன்றி:தினமணி