Showing posts with label 10th Result. Show all posts


சேலம் ஆத்தூருக்கு அருகிலுள்ள  தலைவாசலுக்கு பக்கத்திலுள்ள  சதாசிவபுரம், சாத்தாப்பாடி  கிராமத்துக்குள் மப்டி வேசத்தில் நுழைந்த போலீஸார் ஊரை விட்டு திரும்பும் போது, போலீஸார் அதிர்ச்சியில் கிளம்பியுள்ளனர். நூறு மில்லி, ஐம்பது மில்லி என்ற அளவுகளில் பாலிதீன் பைகளில் கட்டப்பட்ட ஐந்து லிட்டர் அளவுள்ள கள்ளச் சாராயத்தோடு பள்ளிக்கூட்ட மாணவர்களையும்  அள்ளிச்சென்றதுதான்  அதிர்ச்சியான செய்தி..
சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் காவல் நிலைய எல்லையிலுள்ள கிராமங்கள் மிகவும் பிந்தங்கிய பகுதியாகவே காணப்படுகிறது. இங்குள்ள பல கிராமங்கள் நகரங்களில் இருந்து வெகு தூரத்திலிருப்பதால், பலகிராமங்களில் கள்ள சாராயம் சாதரணமாக விற்கப்படுவது வழக்கம்.

அவ்வபோது மதுவிலக்கு ஒழிப்பு பிரிவு காவலர்கள், சாதாரண உடையில் சென்று கிராமங்களில் சோதனை நடத்தி சாராயம் விற்பவர்களை கைது செய்துவருவது வழக்கம்.

நேற்று ஞாயிற்று கிழமை காலை, அப்படிதான் மப்டி போலீஸார் தலைவாசல் பகுதியிலுள்ள சதாசிவபுரம், சாத்தாப்பாடி ரோந்து சென்றபோது. போலீஸாரை பார்த்து சதாசிவபுரம் கிராமத்தின் எல்லையிலிருக்கும் முள் புதரில் இருந்து இரண்டு மாணவர்கள் எழுந்து ஓடியபோது போலீஸார் சந்தேகத்துடன் அவர்களை துரத்தி பிடித்தபோது, அவர்களிடம் நூறு மில்லி, ஐம்பது மில்லி என்ற அளவுகளில் பாலிதீன் பைகளில் கட்டப்பட்ட ஐந்து லிட்டர் அளவுள்ள கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்ததோடு அவர்களிடம் விசாரணை செய்தபோது, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி ரிசல்டுக்குகாக காத்திருக்கும் ராஜவேல் என்பவரின் மகன் ராஜசேகரும், ஆறாம் வகுப்பு முடித்து ஏழாம் வகுப்பிற்கு செல்லும் மாணவன் தனபாலும் சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இந்த இருவருக்கும் தினமும் நூறு ரூபாய் பணம் கொடுப்பதாக ஆசைகாட்டி, மாணவர்களை சாராயம் விற்க ஏற்பாடு செய்த 22 வயதான அருள் என்கிற கள்ளச்சாராய வியாபாரி என்பாது தெரிந்தது.
ஊரெல்லாம் டாஸ்மார்க் கடையை திறந்து வைத்து அப்பனை எல்லாம் குடிகாரர்களாக்கிய அரசாங்கம்..
எங்களை இன்னும் என்ன செய்ய போகிறது
-வெளிச்சம் அகஸ்தியா.


ள்ளிக் கூடத்தில் குழந்தைகளை அடிக்கக் கூடாது’ என்று அரசு உத்தரவு போட்டு பல வருடங்கள் ஆன பிறகும், சில பள்ளிகளில் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சென்னை வேளச்சேரியில் இருக்கும் சிவசக்தி மெட்ரிகுலேசன் பள்ளி. இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் களை பள்ளியின் துணை முதல்வரான ஜான்சி, பிரம்பு கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட அடி கொடுத்திருக்கிறார் என்பதுதான் பிரச்னை.

தங்கள் அடையாளங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு நம்மிடம் பேசிய மாண வர்கள், ''சயின்ஸ் சப்ஜெக்ட் சம்பந்தமா எல்லோரும் பிராக்டிகல் அப்சர்வேஷன் எழுதணும். பப்ளிக் எக்ஸாம் வர்றதால, எல்லோரையும் அப்சர்வேஷன் முடிச்சு வைக்கச் சொன்னாங்க. அப்சர்வேஷன் நோட்ல ஒரு வார்த்தை தப்பா இருந்தாக்கூட, புதுசா எழுதணும்னு சொன்னாங்க.
அதனால ஒவ்வொருத்தரும் நான்கு முறையாவது அப்சர்வேஷன் எழுத வேண்டியதாயிடுச்சு. நல்லாத் தான் எழுதி இருந்தோம். அதிலும் தப்பு கண்டுபிடிச்சு திரும்பவும் எழுதச் சொன்னாங்க. தினமும் ரிவிஷன் டெஸ்ட் நடக்குது. ஸ்கூல் முடிச்சு வீட்டுக்குப் போகவே இரவு 7.30 மணி ஆயிடுது. அதனால இரவெல்லாம் உட்கார்ந்து எழுதினாக்கூட முடிக்க முடியலை. அதுக்குத்தான் ஜான்ஸி மிஸ் பிரம்பால, ரத்தம் வர்ற வரைக்கும் அடி பின்னிட்ட்டாங்க.

வீட்டுக்குப் போனதும் காய்ச்சல் வந்துடுச்சி. டாக்டர் உடம்புல இருக்குற காயத்தைப் பார்த்துட்டு வீட்டுல சொல்லிட்டார். சில பசங்களுக்கு எலும்பு வீங்கிடுச்சி. பலருக்கு உடம்பு முழுக்க ரத்தக் கட்டு. எங்க பெயரையோ போட்டோவையோ போட்டீங் கன்னா நாங்க மறுபடியும் ஸ்கூலுக்குப் போகவே முடியாது'' என்று மிரண்டபடி சொன்னார்கள்.

குற்றம் சாட்டப்படும் பள்ளியின் துணை முதல்வர் ஜான்சியிடம் பேசினோம். ''நாங்களும் மனுஷங்கதானே.. குழந்தைகளை ரத்தம் வரும் அளவுக்கு அடிப்போமோ? தேவை இல்லாம இந்தப் பிரச்னையை பெருசாக்கிட்டாங்க. நாங்க பதில் சொல்ல வேண்டியது பெற்றோருக்குத்தான்! அவர் களிடம் சொல்லிட்டோம். வேற யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை'' என்று முடித்துக்கொண்டார்.

'அன்பினால் சாதிக்க முடியாததை அடியினால் சாதிக்க முடியும்...’ என்று ஆசிரியர்களே நம்புவது எத்தனை அறிவீனம். இவர்களுக்குப் பாடம் நடத்தப் போவது யார்..


நன்றி.ஜூனியர் விகடன்