Showing posts with label Child abuse. Show all posts


சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 77 வயது சோமசுந்தரம் சிறையில் அடைக்கப்பட்டார். காரணம், மூன்று சிறுமிகளுக்கு ஆபாசப் படத்தை டி.வி-யில் போட்டுக் காட்டி, பிறகு பாலியல் பலாத்காரம் செய்தார் சோமசுந்தரம்.
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவனான பரத்ராஜ் செய்த சின்ன தவறுக்காக அந்த மாணவனை மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து சிறுநீரைக் குடிக்கச் சொல்லி சித்ரவதை செய்திருக்கிறார்கள்!

கோவை பள்ளி ஒன்றில் இரட்டைச் சடை போடாமல் பள்ளிக்குச் சென்ற ஐந்தாம் வகுப்புமாணவியின் தலைமுடியை வெட்டிவிட்டு, முட்டி போடச் சொன்னார் உடற்கல்வி ஆசிரியை.

தி.மு.க-வின் பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் கொத்தடிமையாக இருந்தவர் சிறுமி சத்யா. ஆறு மாதங்களுக்கு முன் பூப்பெய்திய சத்யா தொடர் வல்லுறவு காரணமாக எட்டு நாட்கள் சுய நினைவு இல்லாமல் இருந்து வலியும் வேதனையும் மிகுந்து இறந்திருக்கிறார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காப்பாற்ற சத்யாவின் உடலில் இருந்த விந்தணுக்களை அகற்றி காயங்களை மறைக்கச் சில மருத்துவர்கள் முயன்றிருக்கின்றனர்.
கடந்த சில வாரங்களில் மட்டும் பத்திரிகைகளில் பதிவான குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் செய்திகள் இவை!

இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவிகிதம் குழந்தைகள்தான். அதாவது சுமார் 44 கோடி குழந்தைகள் இருக்கிறார் கள். குழந்தைகள் தினம் கொண்டாடும் தேசத்தில், இன்று மிக மோசமாக சிதைக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான்!

இந்தியாவில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகளில் முக்கியமானவை... வகுப்பறை வன்முறை, பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர் வன்முறை, குழந்தைகளைக் கடத்திக் குற்றவாளிகளாக் கும் வன்முறை.


வகுப்பறை வன்முறைகள்
வலி உண்டாக்கக் கூடிய அல்லது காயப்படுத்தும் உள்நோக்கத்துடன் குழந் தைகளிடம் பேசுவதும் தண்டிப்பதும் வகுப்பறை வன்முறைதான். வகுப்பறைக்கு உள்ளேயோ, வெளியேயோ தனி நபராகவோ அல்லது சில பேர் இணைந்தோ உடல்,மன ரீதியாகக் குழந்தைகளைத் துன்புறுத்துவது தான் பல பள்ளிகளில் நடக்கிறது. ''கல்வி உரிமைச் சட்டப்படி வகுப்பறையில் எந்தக் குழந்தையையும் முட்டாள், மக்கு என்றெல்லாம் திட்டக் கூடாது. அப்பா, அம்மாவின் தொழில்குறித்து இழிவாகப் பேசக் கூடாது. சான்றிதழ்களில் மட்டுமே சாதி குறிப்பிடப்பட வேண்டும். வகுப்புஅறையில் எந்த மாணவனிடமும் 'நீ என்ன சாதி?’ என்று கேட்கக் கூடாது. பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்று எந்த மாணவனையும் அவமானப்படுத்தக் கூடாது. எட்டாம் வகுப்பு வரை ஒரு மாணவனை ஃபெயில் ஆக்கக் கூடாது என்றால், ஃபெயில் ஆகாத அளவுக்கு மாணவனைப் படிப்பில் முன்னேற்ற வேண்டும் என்று அர்த்தம்.           

அதைவிடுத்துக் கண்டுகொள்ளாமல் இருப்பதல்ல, ஓர் ஆசிரியரின் பொறுப்பு. ஆனால், நம் சமூகத்தில் உள்ள நிலைமை என்ன?

சமூகத்தில் நம்மில் பலர் நினைப்பதுபோல ஆசிரியர் பணி ஒன்றும் அத்தனை சுலபமானது அல்ல. கிட்டத்தட்ட எதிர்காலச் சமூகத்தையே கட்டமைக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. கிராமப்புறங்களில் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்குக் குழந்தைத் திருமணம் நடந்தால், அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும்கூட அந்த மாணவி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் உண்டு. இத்தனை பொறுப்புகளை அரசியல் சட்டமே கட்டாயமாக்கி இருக்கிறது. தன் கடமையில் இருந்து மீறுவது, மன உளைச்சலை ஏற்படுத்துவது,  அத்துமீறுவது என ஆசிரியர் செயல்பட்டால் 17(ஆ) சட்டப்படி ஆசிரியரை சஸ்பெண்ட் அல்லது பணிநீக்கம் செய்யலாம். ஆனால், நிஜத்தில் நடப்பது என்ன? பல வன்முறை களை ஆசிரியர்கள்தான் நடத்துகின்றனர்'' என்கிறார் எழுத்தாளரும் கல்வியாளருமான 'ஆயிஷா’ நடராஜன்.

ஆசிரியர்கள் செய்யும் தவறுகளை மாவட்டக் கல்வி அதிகாரி, கூடுதல் கல்வி அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் போன்றவர்களிடம் சொல்லலாம். மெட்ரிக் பள்ளி என்றால் மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் புகார் தெரிவிக்கலாம். இப்படி அளிக்கப்படும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 48 மணி நேரத்தில் விசாரணை செய்ய வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர் வன்முறை
அரசு பல உத்தரவாதங்களைத் தந்தாலும் 66 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்தபாடில்லை. குழந்தை உழைப்பு சம்பந்தப்பட்ட வீட்டுக்கு அவமானம் இல்லை; ஒரு நாட்டுக்கே அவமானம்.

''எந்தக் கொள்கையானாலும் திட்டமா னாலும் அதில் குழந்தைகளைக் கவனத்தில் கொள்ளாமல் உருவாக்கப்படுமானால் அவை அரைகுறையாக இருக்குமே தவிர, முழுமையானதாக இருக்காது. குழந்தைகள் எப்படித் தொழிலாளர்கள் ஆகிறார்கள்? 'ஸ்லம்லஸ் சென்னை’, 'விஷன் 2020’ என்று கவர்ச்சிகரமான திட்டங்களைச் சொல்லி மக்களை அப்புறப்படுத்தும்போது குழந்தை கள் படிப்பதை நிறுத்திவிட்டுத் தொழிலாளர் களாகின்றனர். நெல் விளையும் பூமியை பிளாட் போட்டு விற்பதால் சென்னை, திருப்பூர், பெங்களூரு எனத் திசையெங்கும் செல்பவர்கள் குழந்தைகளோடு அல்லல் படுகிறார்கள். பிழைப்புக்காகக் குழந்தை களும் வேலை செய்ய வேண்டிய கட்டா யம் ஏற்படுகிறது'' என்கிறார் குழந்தை உழைப்பு எதிர்ப்புப் பிரசார இயக்கத் தலைவர் தேவநேயன்.

''குழந்தைத் தொழிலாளர்களைத் தடைசெய்வதற்கான சட்டங்கள் சரியாகச் செயல்படுத்தாததால்தான் அனைத்துப் பணி இடங்களிலும் குழந்தைகளைக் கடுமையான பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தொழிலா ளர் துறை நடத்திய ஆய்வில் 1.07 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட் டது. ஆனால், இதன் விளைவு என்ன? குழந்தைத் தொழிலாளர்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், கூலிரீதியாகவும் அவர்கள் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள்'' என்கிறார் தேவநேயன்.
பாலியல் வன்முறைகள்
இந்தியாவில் உள்ள ஐந்தில் மூன்று குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றன என்றால், நீங்கள் அதிர்ச்சி அடையலாம். ஆனால், அதுதான் உண்மை.
''தனக்குப் பிரியமானவர் தன் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளுவதையோ, தலையில் தட்டிக் கொடுப்பதையோ, மடியில் அமர்த்திக்கொண்டு கதை சொல்வதையோ எல்லாக் குழந்தைகளுமே விரும்புவார்கள். இந்த விருப்பத்தைத்தான் குழந்தைகளுக்குப் பிரியமானவர்களே அவர்களை வேட்டையாடப் பயன்படுத்திக்கொள்கின்றனர்'' என்கிறார் வாழ்வியல் பயிற்சியாளர் ஷெரின்.  

''பாலியல் கொடுமைக்கு உள்ளான குழந்தைகள் அந்தக் கசப்பான அனுபவத்தை மனதின் ஆழத்தில் புதைத்து மறக்கவே முயல்வார்கள். அழிக்க முடியாத அருவ ருக்கத்தக்க கறை தங்கள் மீது படிந்து விட்டதாகவே அவர்கள் உணர்வார்கள். இதனால் பெற்றோரின் அன்பை இழந்து விடுவோமோ என்று ஏகமாகப் பயப்படுவார்கள். அதேசமயம், தான் பாலியல் கொடுமைக்குஆளாக் கப்பட்டதை வெளியே சொன்னால், அதை மற்ற வர்கள் நம்புவார்களா என்ற குழப்பமும் அவர் களை அலைக்கழிக்கும். ஏனெனில், குழந்தை களுக்கு எப்போதுமே அன்பும் அரவணைப்பும் தேவைப்படும்.

இத்தகைய சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன? குழந்தையின் முழு நம்பிக்கைக்கு நாம் பாத்திரமாக வேண்டும். நடந்ததைச் சொல்வதில் தவறே இல்லை என்று குழந்தையிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டும். குழந்தை சொல்வதை முழுவதும் நம்ப வேண்டும். நடந்தவற்றுக்கு குழந்தை எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதை ஆணித்தரமாகக் கூற வேண்டும். இவை போக, பல தடுப்பு நடவடிக்கைகளும் தேவை. குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே தற்காப்பு விவரங்களையும் அவர்களது உடலைத் தொடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதையும் மனதில் பதியவைக்க வேண்டும். வன்மத்தோடு யார் நெருங்கினாலும் சத்தம் போடுவது,  கத்துவது, ஹேர்பின்னால் குத்துவது என்று தன் எதிர்ப்பைத் தைரியமாக வெளிப்படுத்தப் பழக்க வேண்டும்.  

இதில் கல்வி நிலையங்களுக்கும் பெரும் பொறுப்பு உண்டு. ஆனால், இப்போது எல்லாம் அந்த சரணாலயங்களிலேயே குழந்தைகள் வேட்டையாடப்படும் கொடூரத்தை எங்கு சென்று சொல்வது?'' என்கிறார் ஷெரின் காட்டமாக.
குழந்தைகள் கடத்தல், வன்முறைகள்
தனி மனித விரோதத்திலும், பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பணத்துக்காகவும் குழந்தைகள் கடத்தப்படுவது அடுத்த அதிர்ச்சி. இதுகுறித்து வழக்கறிஞர் அஜிதா பேசுகிறார்: ''ஆயுத வியாபாரம், போதைப்பொருள் கடத்தல், குழந்தைக் கடத்தல்  என்ற மூன்று குற்றங்களும் உலக அளவிலான பெரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இந்தியா, பர்மா, வங்க தேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் குழந்தைகள் அதிகம் கடத்தப்படுகின்றனர். இப்படிக் கடத்தப்படும் குழந்தைகளைச் சூதாட வைத்தல், பிச்சை எடுக்கவைத்தல், பாலியல் தொழிலுக்கு உட்படுத்தல் என்று பல்வேறு குற்றங்கள் செய்து வியாபாரப் பொருளாக்கிவிடுகின் றனர். வசதியானவர்களின் பிள்ளை களைவிட அதிகம் கேள்வி கேட்காத, வறுமை நிலையில் உள்ள குழந்தை களே கடத்தப்படுகின்றனர். கல்வி யிலும் பொருளாதார நிலையிலும் மாற்றம் உண்டாவது மட்டுமே இந் நிலையில் மாற்றத்தை உண்டாக்கும். 18 வயதுக்கு உட்பட்ட 63 சதவிகிதக் குழந்தைகளுக்குத் திருமணம் நடப்பதால் சிறு வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது, அடிப்பது, மிதிப்பது என்று 53 சதவிகிதம் குடும்ப வன்முறைகள் நடக்கின்றன.

தற்போது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த முழுமையான சட்டம் நடைமுறையில் இல்லை. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புச் சட்டம் நகல் வடிவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அது முழு வடிவம் பெற்றால் குழந்தைகள் மீது வன்முறை நிகழ்த்துபவர்களுக் குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். தற்போது பாலியல் வன்முறை செய்யும் நபருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்யும் நபருக்கு மரணதண்டனை வரைக்கும் தண்டனைகள் தரப்படுகின்றன. ஆனால், இதில் பல சட்டச் சிக்கல்கள் இருப் பதால் பல குற்றவாளிகள் எளிதாகத் தப்பித்துக்கொள்கின்றனர். எனவே, 'என் நாட்டில் வாழும் எந்த ஒரு குழந்தையும் எந்த விதத்திலும் பாதிக் கப்படாது’ என்பதை அரசியல் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் சட்டங்கள் முழுமையாக வேலை செய்யும்!'' என்கிறார் அஜிதா தீர்க்கமாக.
குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் சாரதா சீனிவாசன் குழந்தைகளுக்குத் தர வேண்டிய பயிற்சிகள் குறித்துப் பேசுகிறார்:

''குழந்தைகள் தங்களுக்கு என்ன நடந்தாலும் அதைத் தாயிடமோ, தந்தையிடமோ வெளிப்படையாகச் சொல்லும் சூழல் வீட்டில் வேண்டும். தொடக்கப் பள்ளிகளிலேயே உடல் அங்கங்கள்குறித்த தெளிவை ஏற் படுத்த வேண்டும். உடலமைப்பை வரைந்து காட்டி அந்த இடங்களில் யாராவது தவறாகத் தொட்டால் உதவி என்று கத்தச் சொல்லலாம். அந்த இடத்தைவிட்டு ஓடிவரச் சொல்லிக் கொடுக்கலாம்.  
நீச்சல் குளத்துக்குக் குழந்தைகள் சென்றால் அதிக கவனம் செலுத்த வேண்டும். கோச், டிரைவர் உள்ளிட்ட அத்தனை பேரும் எப்படிப் பழகுகிறார்கள் என்பதைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். குழந்தையுடன் பெற்றோர் அவசியம் சென்று வர வேண்டும்.

காரில் டிரைவரை நம்பி குழந்தையை அனுப்பக் கூடாது. அம்மாவோ, அப்பாவோ குழந்தையைப் பள்ளியில் விட்டு வர வேண்டும். ஆட்டோ, வேனில் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புபவர்கள் டிரைவருடைய செல்போன் எண், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

பள்ளியிலோ, வெளியிலோ குழந்தைகளைக் குழுவாகச் செல்ல அறிவுறுத்த வேண்டும். தனியாகச் செல்ல அனுமதிக்கக் கூடாது'' என்கிறார்:
இவை எல்லாம் எங்கோ தூர தேசத்தில், முகம் அறியாக் குழந்தைகளுக்கு நிகழும் கொடுமைகள் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு அருகில்... ஏன் உங்கள் வீட்டிலேயே இருக்கும் குழந்தையும் இந்தக் கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம். இப்படியான சூழ்நிலைகளைக் குழந்தைகளுக்குப் புரியவைத்து, அவர்களை அதை எதிர்கொள்ளப் பழக்குவது பெற்றோரின் மிக முக்கியமான கடமை. ஏனெனில், பெரும்பாலான குற்றங்களில் சம்பந்தப்பட்டு இருப்பவர்கள் குழந்தைகளின் மிக நெருங்கிய உறவினர்தான். எனவே, குழந்தைகள் வன்முறை குறித்த விழிப்பு உணர்வு பெற்றோர்களுக்குத்தான் இப்போதைய அதிஅவசியத் தேவை!


-க.நாகப்பன்
ஓவியங்கள் : பாலமுருகன்

நன்றி: ஆனந்த விகடன்.1.08.10



உங்கள் வீட்டில் யாராவது யாருக்கும் தெரியாமல் போனில் திருட்டுதனமாக பேசுகிறார்களா?... இல்லை அவர்களின் நடவடிக்கைகளில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறதா? இந்த கட்டுரையை தவறாமல் படிங்க:

ஒரு வருடத்திற்கு முன்னால் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த 17 வயது அனுவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

தன்னுடைய போனுக்கு வந்த  ராங்க் காலை நீங்க யாருங்க என பேச்சி விட்டு ராங்க் கால் என சொல்லிவிட்டு போனை துண்டித்து விட்டார். அதற்கு அடுத்த நாளும் அந்த கால் இவர் துண்டித்து விடுகிறார்.. ஒரு கட்டத்தில் எதிர் முனையில் பேசிய நபர் நைசாக பேசி… அந்த பெண்ணை காதலிப்பதாக சொல்லியிருக்கிறார். காதல் கண்ணை மறக்கும் என்பதுபோல் பெற்றவர்களின் கண்ணீரை மறைந்து விட்டு ராஜுடன் போனில் பேசினார்.

ஒரு கட்டத்தில் உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை எனும் நிலைக்கு தள்ளப்பட்ட அனு, வீட்டில் இருப்பது கஸ்டமாக இருக்கிறது நீ வந்து என்னை பொண்ணு கேளு என சொல்ல, எங்க வீட்டில் ஒரே கொஞ்சம் பிரச்சனையா இருக்கு, வேணா நீ வந்துடு நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு காப்பாத்துறேன் என்னை நம்பி வா என அழைக்க, காதலன் பேச்சில் மயங்கிய அனு வீட்டை விட்டு வந்து விடுகிறார்…..
  1. ·         காதலியாக இருந்து விபச்சாரியாக மாற்றப்பட்ட  அனு அனுபவித்த கொடுமை……..
  2. ·     இப்படியே பல பெண்களை சீரழித்த 9 பேரை கைது செய்ததன் பின்னனியில் வெளிச்சம் ….
  3. ·         செல்போனால் சீரழியும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை காப்பாற்ற என்ன செய்ய போகிறோம்


தொடர்ந்து பார்க்க: புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியான பதிவை..


நன்றி; புதிய தலைமுறை மற்றும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் நடந்தது என்ன குழுவினருக்கும்

                                                    -வெளிச்சம் நந்தினி

தேசிய நெடுஞ்சாலையில் பெண்களை நிறுத்திவைத்து, ஜொள்ளர்களிடம் இருந்து பணத்தையும் நகையையும் அபேஸ் செய்யும் வழிப்பறிக் கொள்ளையர்களைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதே வழியில்தான் இப்போது பணம் பறிக்கின்றன, சில செல்போன் நிறுவனங்கள்! 
புதுப்புது ஐடியாக்களில் காசைக் கறப்பதில் செல்போன் நிறுவனங்களுக்கு இடையே பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. ஒரு நிறுவனம் ஏதாவது ஒரு புதிய திட்டத்தை அறிவித்தால், அடுத்த சில நாட்களிலே மற்ற நிறுவனங்களும் அதே திட்டத்தை, வேறு பெயரில் அறிமுகம் செய்துவிடும். அந்த வகையில் இப்போது இளைஞர்களைக் குறிவைத்துக் காசைக் கறக்கும் புதிய திட்டத்தின் பெயர், 'நட்பு வட்டம்.’

இந்தக் கட்டுரையைப் படிக்கும் உங்களுக்கு, இந்த நட்பு வட்டம் குறித்து ஏற்கெனவே எஸ்.எம்.எஸ். வந்து இருக்கலாம். அல்லது விரைவில் வரும். உங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து சம்பந்தமே இல்லாமல் எஸ்.எம்.எஸ். வரும். அந்தக் குறுந்தகவலை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். என்றாவது ஒரு நாள் ஆர்வக்கோளாறில் பதில் அனுப்பிவிட்டால், உடனே உங்களுக்கு 13 இலக்கங்கள்கொண்ட ஓர் அடையாள எண் வழங்குவார்கள். இந்த நேரத்தில் உங்கள் பில்லில் 30 ரூபாய் ஏறி இருக்கும். அதன்பிறகு, உங்களுக்கு ஏராளமான மிஸ்டு கால்கள் வரத் தொடங்கும். அந்த எண்களுக்கு நிச்சயமாக நீங்கள் டயல் செய்வீர்கள். அப்போது எதிர்முனையில் ஸ்வீட் வாய்ஸில் ஒரு பெண் கொஞ்சுவார்.
நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும், உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவதுமாதிரி மென்மையாகப் பதில் சொல்வார். நீங்கள் நாகரிகம் மறந்து ஆபாசமாகப் பேசினாலும் அவர் கண்டுகொள்ள மாட்டார். எதற்காகவும் கோபப்பட மாட்டார். நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் செக்ஸியாகப் பதில் வந்துகொண்டே இருக்கும். நீங்கள் உடனே சுதாரித்து உங்கள் செல்போன் இணைப்பைத் துண்டிக்கவில்லை என்றால், உங்கள் கணக்கில் பணம் எகிறிக்கொண்டே இருக்கும்.

வழக்கமாக ஏதாவது ஓர் எண்ணுக்கு நீங்கள் அழைத்தால், எதிர்முனையில் இணைப்பு கிடைத்த பிறகுதான் மீட்டர் ஓடும். ஆனால் இந்தத் திட்டத்தில் மட்டும், நீங்கள் டயல் செய்த உடனே மீட்டர் ஓடத் தொடங்கும். ஒரு நிமிடத்துக்கு இரண்டு ரூபாய் கட்டணம். எஸ்.எம்.எஸ். கொடுப் பதற்குக் கட்டணம் ஒரு ரூபாய். வெவ்வேறு எண்களில் இருந்து மிஸ்டு கால் வரும். எடுக்கவும் முடியாது, எடுக்காமல் இருக்கவும் முடியாது என்று தடுமாறி ஏமாறுபவர்கள் அதிகம்.

இந்த நட்பு வட்டார சீட்டிங் குறித்து ஏராளமான நபர்கள் ஏகப்பட்ட பணத்தைத் தொலைத்து, நமக்குப் புகார் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். களம் இறங்கினோம்.
வெளிநாடுகளில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த 'செக்ஸ் கால்’ என்பதைத்தான் 'நட்பு வட்டம்’ என்ற பெயரில் செல்போன் நிறுவனங்கள் இங்கு களம் இறக்கி உள்ளனவாம். நட்பு வட்டப் பெண்கள் பேசும் அத்தனையும் அதிர்ச்சி ரகம்!

காலர் 1 - மேலூர் அமுதா:

ஆரம்பத்தில் சாதாரணமாகப் பேசியவர், தனது பெயர் சசிகலா, வயது 22 என்று முதல் தூண்டிலைப் போட்டார். அடுத்தடுத்து இரண்டு நாட்கள் பேசியபோது, கொஞ்சம் கொஞ்சமாகப் புதுப்புதுத் தகவல்களைச் சொல்லி ஆர்வத்தைத் தூண்டினார். அதன் பிறகு நம்மைப் பற்றி அறிமுகம் செய்து உண்மையைக் கேட்டோம். மிகவும் தயக்கத்துக்குப் பிறகு பேசினார். ''என் நிஜப் பேர் அமுதா. எனக்கு 38 வயசாச்சு சார். ஏற்கெனவே கல்யாணம் ஆன ஒருத்தனுக்கு விஷயம் தெரியாமக் கழுத்தை நீட்டிட்டேன். ஒரு புள்ளையக் குடுத்துட்டுப் போயிட்டான். கிடைச்ச வேலைகளுக்குப் போய் என் புள்ளையையும், என்னோட அம்மாவையும் காப்பாத்திட்டு வந்தேன். அப்போ எனக்குத் தெரிஞ்சவங்கதான் இந்த ஸ்கீம்ல சேர்த்துவிட்டாங்க. தினமும் நெறைய போன் வருது. சின்னச் சின்னப் பசங்கல்லாம் நேரம் காலம் பாக்காமக் கூப்பிடுறாங்க. நேத்து ராத்திரி எட்டாம் வகுப்பு படிக்கிறேன்னு சொன்ன ஒரு பையன், 'ஏய்... எங்கிட்ட வர்றியா? அஞ்சாயிரம் ரூபா தர்றேன்’னு சொல்றான். இதெல்லாம் எம் புள்ளைங்க மாதிரி இருப்பாங்க. ஆனா ஏதேதோ பேசுறாங்க.....'' என்று கதறினார்.

''எங்களுக்கு மாசத்துக்கு 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்றாங்க. நிஜப் பேரையும் எங்க செல்போன் நம்பரையும் யாருகிட்டேயும் கொடுக்கக் கூடாது. எப்படிப் பேசுறதுன்னு சொல்லிக் கொடுப்பாங்க. மாசத்துக்கு 3,500 ரூபா சம்பளம் குடுக்குறாங்க. தமிழ்நாடு மட்டும் இல்லே சார்... பாம்பே, டெல்லியில இருந்து எல்லாம் பேசுறாங்க. நெறையப் பேரு பணம் அனுப்புறேன்னு அட்ரஸ் வாங்குறாங்க, ஆனா அதோட அவ்வளவுதான். எனக்கு இந்த நம்பர் குடுத்த மேடம்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன். 'கம்பெனி ரூல்ஸ் படி உன் அட்ரஸை யாருகிட்டயும் கொடுக்கக் கூடாது. இந்தத் தடவை மன்னிச்சுடுறேன்’னு சொல்லிட்டாங்க.  இப்போதான் பேங்க்ல அக்கவுன்ட் ஆரம்பிச்சிருக்கேன். இனிமே, மாசாமாசம் அதுல சம்பளம் போடுவாங்களாம்'' என்றார் அப்பாவியாக!

காலர் 2 - ஸ்ரீரங்கம் பிரியா:

தொடர்ந்து 10 நாட்கள் பேசிய பிறகும், இவரிடம் இருந்து உண்மையைப் பெற முடியவில்லை. அதன் பிறகு செல்போன் நிறுவனத்தில் இருந்து நாம் பேசுவதாகவும், செக் செய்வதற்காகத்தான் இத்தனை நாட்கள் பேசியதாகவும், மிகத் திறமையாக வாடிக்கையாளர்களைச் சமாளிப்பதாகச் சொல்லிப் பாராட்டினோம். ''மாதச் சம்பளம் 5,000 சரியாகக் கிடைக்கிறதா?'' என்று கேட்டதும், ''அய்யய்யோ... 3,500தான் தர்றாங்க'' என்று அலறினார். இரண்டு குழந்தைகளையும் சென்னையில் இருக்கும் அம்மா வீட்டில் விட்டுவிட்டு, கணவனுடன் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார். கணவனுக்குத் தெரிந்தேதான் இந்த நட்பு வட்டத்தில் பேசுகிறாராம் பிரியா. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மட்டும் படுசெக்ஸியாகப் பேசுவாராம். பணம் கிடைப்பதைவிட, இப்படிப் பேசுவது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு என்கிறார் பிரியா!

காலர் 3 - ரம்யா, கல்லூரி மாணவி:

முதலில் தன் பெயரை ரேவதி என்று கூறியவர், நீண்ட முயற்சிக்குப் பிறகு உண்மையைச் சொல்ல ஆரம்பித்தார். இவரது பேர் நட்பு வட்டத்தில் மிகப் பிரபலமாம். எந்த நேரமும் செல்போனும் கையுமாகவே அலைவதால் வீட்டிலும் ஏக அர்ச்சனை. இந்த வட்டத்தில் சேர்ந்ததில் இருந்து கல்லூரி வகுப்புகளை அதிகமாகப் புறக்கணித்து வருகிறாராம்.  ''காலர்ஸ்கிட்ட நான் சொல்றது எல்லாமே பொய்தாங்க. உங்ககிட்ட மட்டும்தான் என் பேரையும், மதுரையில இருக்கேன்னு உண்மையும் சொல்லி இருக்கேன். செக்ஸியாப் பேசுற துக்கு ஆரம்பத்துல ரொம்பத் தயக்கமா இருந்துச்சு. என் ஃபிரண்ட்தான் ட்ரெய்னிங் குடுத்தா. அவ ரொம்ப நல்லாப் பேசுவா. இப்போ அவளையே மிஞ்சுற அளவுக்கு நான் பேசப் பழகிட்டேன். இப்போ இது எனக்கு ஒரு போதை மாதிரி ஆயிடுச்சு'' என்று அப்பாவியாகச் சொல்கிறார்.
நட்பு வட்ட எண்களில் தொடர்பு கொண்டு இன்னும் நிறையப் பெண்களிடம் பேசினோம். அதில், பலர் பேசியதை அச்சில் ஏற்றவே முடியாது. அந்த அளவுக்கு படுக்கையறைப் பேச்சு. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள்தான் அதிக அளவில் இந்த நட்பு வட்டத்துக்குள் வருகிறார்கள்.

இதுபோன்ற ஆபாசப் பேச்சு வியாபாரத்துக்குத் தடை விதிக்க முடியாதா? சென்னை சைபர் கிரைம் கூடுதல் உதவி கமிஷனர் சுதாகரைச் சந்தித்தோம். ''வேல்யூ ஆடட் சர்வீஸ் என்ற பெயரில் செல்போன் நிறுவனங்கள் இதுபோன்ற பல சேவைகளைச் செய்துவருகின்றன. ஆனால், இந்த சேவை அதிர்ச்சியாக இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால், உடனே நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

சட்டப்படி இதைத் தடுக்க என்ன வழி? பதில் சொல்கிறார் வழக்கறிஞர் சுந்தர்ராஜன்.  ''இந்த சேவை குறித்து பலர் எங்களிடம் முறையிட்டு உள்ளனர். நிச்சயமாக இது தடை செய்யப்பட வேண்டிய சேவை. ஆனால், செல்போன் நிறுவனங்கள் எந்த மாதிரியான சேவைகள் எல்லாம் வழங்கலாம் என்று 'டிராய்’ விதிமுறை எதுவும் வகுக்கவில்லை. அதனால், இந்த சேவையில் பணத்தைத் தொலைத்தவர்கள் டிராய் மற்றும் போலீஸில் புகார் செய்ய வேண்டும். இதுபோலத்தான், மார்க்கெட்டிங் எஸ்.எம்.எஸ். சேவையும் இருந்தது. தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்த பிறகுதான், டிராய் தனது சாட்டையைச் சொடுக்கியது. ஒரு காலத்தில் வெளிநாட்டு தொலைபேசி எண்ணைக் கொடுத்து, 'செக்ஸ் கால்’ என்று நாளிதழ்களில் ஏராளமான விளம்பரங்கள் வரும். அதைப்போலத்தான், இந்த சேவையை செல்போன் நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. பாதிக்கப்பட்டவர்கள் டிராய்க்கு இ-மெயிலில் புகார் அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும்'' என்றார்.

கோடிகளில் கொழிக்கும் செல்போன் நிறுவனங் கள், சில கோடி ரூபாய் லாபத்துக்காக இப்படி இளைய தலைமுறையைச் சீரழிப்பது நியாயமா?

- தேவதத்தன்


பெண்குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வெளிச்சம் மாணவர்கள்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக  நாம் பல முயற்ச்சிகளை மேற்கொண்டோம்…(எடுத்துகாட்டு)… மேலும் கோவை மாநகரம் மற்றும் தமிழக மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்குள் கடந்த ஆண்டில் மட்டும் 26 பெண் குழந்தைகள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளனர். இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் மறக்காத சம்பவம் கோவையில் கொள்ளப்பட்ட அக்கா, தம்பி

கடத்தல், கற்பழிப்பு, பாலியல் சித்ரவதை வன்முறைகள் பெண்கள் மீது மட்டுமின்றி, ஏதுமறியா பெண் குழந்தைகள் மீதும் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான சம்பவங்கள் பெற்றோராலும், உறவினர்களாலும் மறைக்கப்படுகின்றன. வெளியில் தெரிந்தால் அவமானம் நேரிடும் எனக்கருதி சம்பவத்தை மூடி மறைப்பதால், சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர். பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகளுக்கு கொடூர மரணம் நேரிடும்போது மட்டுமே வெளிச்சத்துக்கு வருகின்றன. கடந்த ஆண்டில், கோவை நகரில் பள்ளிக்குச் செல்லவிருந்த 11 வயது பெண் குழந்தையும், உடன் 9 வயதான தம்பியும் கால் டாக்சி டிரைவரால் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு பின் கொடூரமாக கொல்லப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இத்துயர சம்பவத்தில் தொடர்புடைய கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், போலீஸ் "என்கவுன்டரில்' சுட்டுக்கொல்லப்பட்டான். இச்சம்பவத்துக்கு பிறகாவது, குழந்தைகளை பாலியல் சித்ரவதை செய்யும் நபர்கள் மத்தியில் அச்சம் ஏற்படுமென போலீசாரும், பொதுமக்களும் கருதினர். ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் கோவை மாநகராட்சி பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமி, தனது மாமாவால் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு பின் கொலை செய்யப்பட்டாள்.

இதுபோன்ற சம்பவங்கள் பெண் குழந்தைகளின் பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. உண்மையில், மேற்கண்ட சம்பவங்கள் கொலையில் முடிந்ததால்தான் விஷயம் வெளியுலகுக்கு தெரியவந்தது. வெளியுலகுக்கு தெரியாமலும் பல சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.கடந்த ஆண்டில், கோவை மாநகரில் 4 பெண் குழந்தைகள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகினர். ஈவு இரக்கமின்றி குழந்தைகளின் மீது பாலியல் வக்கிரத்தை காட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் உள்ளது. அதே போன்று, தமிழக மேற்கு மண்டலத்தில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக மொத்தம் 26 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில் கோவை மாவட்டத்தில் 2, ஈரோட்டில் 5, நீலகிரியில் 1, திருப்பூரில் 5, சேலத்தில் 2, நாமக்கல்லில் 3, தர்மபுரியில் 1 முறையே பெண் குழந்தைகள் பாலியல் சித்வதைக்கு உள்ளாகினர். தவிர, குழந்தைகள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 3 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு, தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி ஆகியோர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து வக்கீலும், கோவை பாரதியார் பல்கலை செனட் உறுப்பினருமான சண்முகம் கூறியதாவது:                     
சிவணான்டி ஐ.பி.எஸ் 
                                 பனிரெண்டு வயதுக்கு உட்பட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பெரும்பாலும் அறிமுகமான நபர்களாலேயே நடக்கின்றன; அறிமுகமில்லா நபர்களுடன் பெண் குழந்தைகள் செல்வதில்லை. கோவையில் பள்ளிக்குழந்தைகள் இருவர் காரில் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம், நன்கு அறிமுகமான டாக்சி டிரைவரால் நடந்தது. சவுரிபாளையத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர், அந்த சிறுமியின் மாமா முறை உறவினர்.ஏற்கனவே, தங்களுக்கு அறிமுகம் உள்ளதால் பெண் குழந்தைகள் தங்களுக்கு நேரிடப்போகும் ஆபத்தை உணராமல் உடன் சென்றுவிடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க பெண் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். "சாக்லெட் வாங்கித்தருகிறேன், விளையாட்டு பொருள் வாங்கித்தருகிறேன் என யாராவது அழைத்தால் உடன் செல்லக்கூடாது' என, அறிவுறுத்த வேண்டும். கூடுமானவரை பெண் குழந்தைகளை வீட்டில் தனியே விட்டுச் செல்வது; உறவினர் வீடுகளில் விட்டுச் செல்வது, போன்ற செயலை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், தங்களை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோரும் சொல்லித்தர வேண்டும். பாலியல் வன்முறைகளை போலீசாரால் தடுப்பதற்கான வாய்ப்பு மிக, மிக குறைவு; ஆனால், பெற்றோரும், குழந்தைகளும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தவிர்க்க முடியும். இவ்வாறு, வக்கீல் சண்முகம் தெரிவித்தார்.

நன்றி: தினமலர்

வெளிச்சம் வெளிக்கொண்டு வந்த மாணவி பிரச்சனை ஓர் இணைய தளத்தில்: http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=2270