Showing posts with label முல்லை பெரியாறு பிரச்சனை. Show all posts

         சமூக அவலங்களை தீர்ப்பதும் சமூகத்திற்காக வேலை செய்து என்பது சலுகைகளாலோ அல்லது நாற்காலிகள் மீது அமர்ந்து கொண்டு கனவு காண்பதால் சாத்தியபடும் என்று கனவுகண்டால் உங்கள் கற்பனையை தூக்கியெறியுங்கள்..
மனித உரிமைகள் தினமான 10.12.11 அன்று பாண்டிச்சேரி பல்கலை கழக சமூக பணித்துறை மாணவர்கள் ஒருங்கிணைத்த பெண்கள் உரிமை பற்றிய விழா  விழுப்புரம் மாவட்டம்  கொடுர் கிராமத்தில்  நடந்தது. விழாவின் சிறப்பு அழைப்பாளரான வெளிச்சம்  செரின் அவர்கள்  தனக்கு வழங்கப்பட்ட தலைப்புகளின் கீழ் பெண்கள் உரிமை,கிராம மக்களின் வாழ்நிலை, தாழ்த்தப்பட்டோர் உரிமைகள் ஆகிய தலைப்புகளில் மூன்று மணி நேரத்திற்கு மேல் உரையாற்றினார். செரின் அவர்கள் பேசி முடித்த பின் இறுதியாக பேசிய பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலானவர்கள் சமூகத்தை பற்றிய தங்களின் தவறான புரிதலை மாற்றிகொள்வதோடு இதுவரை கொண்டிருந்த தவறான புரிதலுக்கு வெட்கப்படுவதாகவும் நிகழ்ச்சியின் இறுதியில் பேசியவர்கள் இனி சமூகத்திற்கு வெறும் விளம்பரத்திற்காகவும்,சம்பளத்திற்காக மட்டும் பணியாற்றாமல் சமூகத்திற்கு உண்மையாக உழைப்போம் என மனமுவந்து பேசினார்கள்...

(வெளிச்சம் செரின் அவர்களின்  ஆங்கில உரையை தங்களுக்கு தமிழில் மொழிப்பெயர்த்து வழங்குவதில் மகிழ்கிறோம்..)
                                  
சமூக மாற்றம் குறித்து பேசுபவர்கள் முதலில் தன்னளவினான மாற்றத்திற்கு முதலில் தயாராகவேண்டும் அப்படி மாறலைன்னா இந்த தலைப்புகள் எல்லாம் வெறும் பேச்சாவேதான் இருக்கும் இங்கே நடக்கிற போராட்டங்களை போல் இங்கிருக்கிற சில தலைவர்கள்  ஊழலுக்கு எதிரா குரல் கொடுக்கிற இன்றைய காந்திகள் மாறி போராடுரவங்க பெரும்பாணமையான மக்களின்  பிரச்சனைகளை குறித்து பேச மறுப்பது காலகாலமாக இந்தியாவிலிருக்கிற இருக்கிற பிரச்சனை..

 குறிப்பா தன்னோட வீட்டுல தனக்கு பிரச்சனை வந்தா பிரச்சனையாகவும் பக்கத்து வீட்டுல பிரச்சனை வந்த நமக்கு ஏன் வம்புன்னு வீட்டுக்குள்ள போய் கதவடைத்து கொள்கிற நிலை சமீப காலமாகதான் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழர்களுக்கான பிரச்சனையானாலும், கூடங்குளப்பிரச்சனை,முல்லை பெரியாறு பிரச்சனையானாலும் மக்கள் தங்களுக்கான  பிரச்சனையாக இன்னும் உணரவில்லை அப்படி உணருவதை சிலர் விரும்பவில்லை,  தலைவர்களெல்லாம் தனக்கு பின்னால் ஒரு கூட்டம் வருனும் நினைக்கிறாங்களே தவிர மக்களிடம் போய் பிரச்சனைகளை விளக்கி  மக்களை உசுப்பி ஒரே குடையின் கீழ் நிறுத்தி போராட வைக்காதது தான் நமக்கு வேதனையளிக்கிறது..

கிராம வாழ்வு முறை மற்றும் சாதியம் குறித்து பேசியதாவது...

   இந்த நாட்டின்  பெரும்பாண்மையான  பகுதி கிராமங்களை கொண்டது விவசாயமே நவீன மயமாதலில் எல்லாம் தொலைத்துவிட்ட நாம் விவசாயத்தையும் இழந்துவிட்டோம் அதுபோல் நாம் இங்கு நிலங்களை போல உரிமைகளும் சிலரின் பாக்கெட்டுக்குள்  கிடக்கிறது

மனித உரிமைன்னா என்னான்னே தெரியாத நபர்கள் இன்னமும்  இருக்கிறார்கள்  ஆனால் அவர்களுக்கு எல்லா நடிகர்கள்  பத்தியும் தெரிந்திருக்கும்,  இன்னைக்கு கிராமத்தில  இருக்கிற சூழலே வேற   மக்கள் தங்களோட தினசரி வாழ்க்கைகே ரொம்ப கஸ்ட போது மற்ற பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பதோடு நிறுத்தி கொள்கிறார்கள். இது ஒரு பக்கம் நகரத்தில் வீடுகளாக பிரிந்து கிடப்பவர்கள் கிராமங்களில் சாதிகளாகவும் பிரிந்து கிடக்கிறார்கள். கல்வியிலும் சமூக பொருளதர சமத்துவம் கிடைக்காதவரை  அனைவரும் சமம் என்பது வார்த்தையாகவே தான் இருக்கும்.

அதனால் தான் சமூகத்திற்கு வேலை செய்பவர்களின் பணி இன்னும் கடுமையாக உள்ளது உண்மையான மாற்றத்தை கொண்டுவருவதுதான் நம் வேலை அதுவரை தூக்கமிருக்க கூடாது.

பெண்ணுரிமை குறித்து பேசியதாவது..

 சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு மிக அவசியம் ஆனால் இந்திய சூழலில் பெண்களை ஒரு ஜடப்பொருளாய் பார்க்கும் மனோ பாவம் நாகரீக சூழலிலும்  இன்னும் மாறவில்லை இன்னும் ஒருபடி மேலே சொல்ல போனால் படிக்கிற பசங்க  கூட பெண்களை வெறும் போதை பொருளாய் பார்க்கிற  மனநிலையில் இருப்பதுதான் கேவலத்துக்குறிய விசயம். ஒரு பொம்பல புள்ளையோட  ஓரப்பார்வைக்காக  கொலை  செய்யும் அளவிற்கு போதையில் கிடக்கிறார் என்றால் இவர்களின் எதிர்காலத்தை பற்றி நினைச்சா நெஞ்சம் பதறுகிறது..
இந்த சூழல் சின்ன வயசுல குடும்பத்துல  சண்டையின்னா அப்பா அம்மாவை அடிக்கறதை அப்பாவின் வீரமாகவே பார்த்து பழகுற பசங்களுக்கு தான் காதலிக்கும் பெண் அல்லது திருமணம் செய்து கொள்ளும் பொண்ணு வாய்திறக்காகமல் உடல் சுகத்தை மட்டும் தரும் வெறும் சதைக்கூடா பார்க்கிறத முதல்ல மாத்திக்கோங்க பொம்பளைங்களும் மனுசிங்கதாண்னு நினைங்க..

பழைய வரலாற்றின் கொஞ்சம் புரட்டினா சமூகமாற்றதுல பெண்களின் பங்கு நிறைய இருந்திருக்கு ஆனால் பெண்கள அடக்க ஒடுக்கமா ஊட்டுல சோறாக்க, அடுப்பூத விட்டுட்டு இப்ப எல்லாத்தையும் வெறும் வாந்தியெடுக்கிற இந்த படிப்பை படிக்க வச்சி எல்லா பொண்ணுகளுக்கு சுதந்திரம் கிடச்சிடுச்சுன்னு டிவியில பேசுறாங்க. இதுதான் சுதந்திரமா ஆணுக்கு கொடுக்கப்படுகிற உரிமைகள் இங்கு பெண்களுக்கு கொடுக்கப்படுகிறதா கொஞ்சம் யோசித்து பார்த்தால் தெரியும் இல்லவே இல்லை.  எல்லா வீட்டுயும் செல்போன் இருக்கு ஆனா டாய்லட் இருக்கான்னு பார்த்தா இல்லை ஒரு கிராமத்து பொண்ணு டாய்லெட்  போகனும்னா எப்படா பொழுது போகும்னு காத்திருக்கனும் இந்த கொடுமை  எல்லா சாதி பொண்ணுக்கும் உண்டு பெண்களுக்கான உரிமைகளை பறிப்பதில் எல்லா  சாதி ஆண்களும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். இதில் பெண்களுக்கு தாங்கள் பாதிக்கபடுவதே தெரியாமலிருப்பதுதான் வேதனைக்குறியது அதற்காக எல்லாத்தையும் தூக்கி மிதிங்க பெண்களேன்னு சொல்லும் அளவுக்கு நான் கேவலமானவள் அல்ல..

வலிகளை உணர்ந்தவர்களால் மட்டுமே  வழிகாட்ட முடியும் வலியை உணர்ந்த, அடுத்த சமூகத்தை படைக்கிற ஆற்றல் பெற்ற பெண்ணினம் இப்படியே கிடப்பதுதான் வலிக்கிறது.. ஆக இந்த சமூகத்திற்கு வேலை செய்ய துடிக்கிற அல்லது சமுத்திற்காக உழைக்க படிக்கிற நீங்கள் ஒரு சாதாரண என்.ஜி.ஓ வாதிகளாக யாரிடமோ பணம் வாங்கிகிட்டு வேலை செய்கிற நபர்களாய் மட்டுமில்லாமல் பெண்களை தன்னளவில் உண்மையாகவே மதிக்கிற,சமூகத்தில் சாதியை கடந்து மனிதர்களை நேசிக்கிற நபர்களாக மாறாமல் விளம்பரத்துக்காக, நான் இதெல்லாம் பண்ணினேன்னு போஸ் கொடுத்து போட்டா எடுத்துக்கலாம் அது எல்லாம் வெறும் படமாதான் இருக்கும்...

இழந்த உரிமைகளை இலவசமாகவோ அல்லது சலுகையாகவோ பெறமுடியாது போராடிதான் பெறமுடியும்  ஆம் ஒட்டு மொத்த சமூக மாற்றமென்பது தனிமனித மாற்றத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது..

உரை தொகுப்பு
வெளிச்சம் மாணவர்கள்

மக்களுக்காக உழைக்க நீங்கள் ரெடியா நாம் இணையலாமே...  விண்ணப்பம்






தமிழர்களின் போராட்டங்கள் ஏன் பரவலாக்கபடுவதில்லை..  

கடந்த 10 ம் தேதி வெளிச்சம் அமைப்பின் தலைவர் செரினை தொடர்பு கொண்டார் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புகுழுவின் போராட்ட இயக்க தலைவர் உதயகுமாரன் அவர்கள். சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடக்கிறது ஆனால் இங்கு உண்ணாநிலையில் பங்கு பெற்று போராடுவதற்கு யாருமில்லை என்று வருத்தப்பட்டார் வலிகளை உணர்ந்ததோடு செரின் அவர்கள் தலைமையில் 30க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டோம் . அங்கு வந்த தலைவர்கள் வைகோ,  தொல். திருமாவளன், ராமதாஸ்   ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அவர்கள் பேசியதிலிருந்தும் உள்வாங்கியதிலிருந்தும் எங்கள் மனசுக்கு பட்டதை பதிவு செய்ய நினைத்ததின் விளைவுதான் இந்த பதிவு

 கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் தமிழருக்கான வாழ்வுரிமைப்பிரச்சனை அதிகமாகி கொண்டே இருக்கிறது ஆனால் அதை தட்டிக்கேட்க வேண்டிய மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்த்து கொண்டே இருப்பது வேதனையாக இருக்கிறது குறிப்பாக கூடங்குளத்தின் அணு உலைகெதிராக மக்கள் போராடும் போது முல்லை பெரியாறு பிரச்சனையை தேவையில்லாமல் தூசுதட்டிய செயலை என்ன வென்று சொல்லுவது  ஆனால் போராடும் நபர்களுக்கு ஆதரவு தரவேண்டாம் ஆனால் உதாசினப்படுத்தாமல் இருங்கள்..
இது ஒருபக்கமிருக்கட்டும் கூடங்குளங்குளமாயிருந்தாலும் முல்லை பெரியார் போராட்டமாயிருந்தாலும் எங்களை போன்ற மாணவர்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது இன்றைய இந்த பிரச்சனைகள் இன்றுள்ள பிரச்சனைகள் இல்லை எதிர்காலத்தை பாதிக்கும் என்கிறார்கள் அப்போ எங்களுக்கு எதிர்காலமே கேள்விகுறிதானா?.... 


இதை பேசிக்கொண்டிருக்கும் போது  படிக்கற வயசுல வேலையை பாருங்கப்பான்னும் சொல்லுவதும், நீ சின்ன பையன் பெரியவனான உங்களுக்கு வலி வருத்தம் தெரியும் நம்மை அலட்சிய படுத்தி நாம் செல்ல வருவதை  இதை காது கொடுத்து கேட்பதையே கேவலமாக நினைக்கிறார்கள் எங்களை விட மூத்தவர்கள்.         நாளுவருசமா  மின்தடைகளால் தவித்துக் கொண்டிருந்த போது தமிழகம் மின்சார உற்பத்திக்காக கட்டி முடிக்கப்பட்டு துவங்கும் நிலையில் உள்ள கூடங்குளம் அணு மின நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்களே ஏன்னு யோசிச்சதுண்டா..

பொறியியல், அறிவியல் மோகத்தில் தனது பிள்ளைகளை படிக்க வைக்கும் மோகத்திலிருக்கும் தமிழகத்தில் தனது வாழ்வாதாரங்களையும், தனது சந்ததிகளையும் தொலைக்கக் கூடியது என தெரிந்ததும்  அது எப்பேறுபட்ட அறிவியலாயினும்
தூக்கி எறியத்  தயாராகியிருப்பது மிக சரியனதுதான்.

1986ம் ஆண்டு உருசியாவிலுள்ள செர்னோ எனும் இடத்தில் அணு உலை வெடித்தில் ஏற்ப்பட்ட கதிரியக்கத்தால்  1986 தொடங்கி 2004ஆம் ஆண்டு வரை மட்டும் 9,85,000
மக்களைக் இறந்துள்ளதை கண்டு உலகமே நடுநடுங்கிக் கிடந்த நிலையில்
1988ம் ஆண்டு உருசியாவிடம் கூடங்குளத்தில் உருசியாவின் அணு உலையைக் கட்ட இந்தியா ஒப்பந்தம் போட்டது எந்தவித்தில் நியாயம்.

கேட்டால் அணுத்துறை அறிஞர்களும் இந்திய உருசிய அரசியல்வாதிகளும், "செர்னோபில் அணு உலையிலிருந்த இருந்த குறைபாடுகளைக் கண்டறிந்து கூடங்குளம் அணு உலையில் அவ்வாறு  ஏற்படாதவாறு கட்டியிருக்கிறோம் என்று சொல்லும் போது நமக்கு பயமாகதான் இருக்கிறது,
"
இப்போதுள்ள நிலையில்  ஆலையானாலும், எந்திரங்களானாலும் ஆபத்துகள் நிறைந்தே கிடக்கின்றன இதுக்காக அணு உலையை விட்டுவிடவேண்டுமா? -என்று சில அரசியல், அறிவியல் துறைகள்  கேள்வி எழுப்புகின்றன "ஒரு தடவை வெடித்தால் -நூறு தலைமுறை அழியும் என எண்ணுபோது மனசுக்குள் ஏதோ வலியுடன் கூடிய பயம் தானாக வருகிறது.

இது ஒரு பக்கமிருக்க கூடங்குளம் அணு உலை துவங்கப்பட்ட 1086 முதல் 2007ஆம் ஆண்டு வரைக்கும் ஆன செலவு மட்டுமே 17,000 கோடி ரூபாய் இதை ஏன் மூடி மறைக்கிறது அரசுகள். இதுமட்டுமில்லாமல் கூடங்குளத்துக்கு பிறகு இந்திய அரசு அமெரிக்காவிடம் 25 ஆண்டுகளில் 20 இலட்சம் கோடிகள் செலவில் .20 உலைகளை கட்டுவதற்கு  நீண்டகால ஒப்பந்தங்களை  இந்தியா போட்டிருக்கிறது தாம்  அதாவது, கூடங்குளத்தில் 2000 மெகாவாட் மின்னுற்பத்திக்கு உலை கட்டப்பட்டிருப்பதுபோல் அமெரிக்காவொடு திட்டமிடப்பட்டுள் அணு உலைகளிலில்  20,000 மெகாவாட்டிற்கு திட்டமிடப்பட்டுள்ளதாம் . ஓவ்வொரு ஆயிரம் மெகாவாட் மின்னளவிற்கும் ஒரு இலட்சம் கோடிகளாம்.

 "எமது வாழ்க்கையையும் எமது சந்ததியையும் காவு கொடுக்கக் கூடிய ஒரு அறிவியலை
எமது நிலத்திலே எங்கள் பணத்திலே விதைக்கும் முன்னர், எம்மை ஒரு வார்த்தையேனும் கேட்டீர்களா?"  

கூடங்குளத்திலே உலை கட்டினால் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. இந்த இத்தனை வருடங்களில் பத்தே பத்து பேரை தேடித்தான் விளம்பரங்கள் தமிழ்நாட்டில் வந்துள்ளன என்று கூடங்குளம் போராட்ட குழு தலைவர் உதயகுமார் பேசினார்  அந்வர்களுக்கு கூட  உருசிய மொழி தெரிந்திருக்க வேண்டுமாம் மாணவர்களான எங்களின் எதிர்காலமென்ன..

மிக அதிகமாக அணு உலைகளை நிறுவிவரும் சீன நாடு, புகுசிமா விபத்திற்குப் பின்னர்
7 உலைகளை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறார்களாம் உலகில் பல்வேறு நாடுகளும் அணு மின் உலைகளை மறு பரிசீலனை செய்து வரும் நிலையில் நாமும் அப்படி செய்ய வேண்டியது கட்டாயம்.

கட்டிவிட்டோம் என்ன செய்வதுன்னு வருத்தப்படுபவர்கள்  என்ன செய்யலாமென யோசிக்கலாம்.

அதை விடுத்து புத்தி பேதலித்த வண்ணம் கணக்கு டீச்சர பிடிக்கலைன்னா  கணக்கே வராதுங்கற சின்னபிள்ளைகள் தனமா ? கூடங்குளத்திலும் முல்லை பெரியாறுக்காக தேனி பகுதியிலும் மக்கள் போராட்டம் நட த்துவதை தொலைக்காட்சியில் பார்த்துகொண்டு இது நமக்கான பிரச்சனை என உணராமல் கிருஸ்தவர்கள் போராட்டம் பண்ணுறாங்க இந்துக்கள் ஆதரிப்போம்னு பேசுறதும்  மாத்தி சண்டை போடுறதுல புண்ணியமில்லை. அதுவும் பாதிப்புகள்  வந்தா மதம் பார்த்து வராது.. ஒட்டு மொத்தமா அழிஞ்சிடுவோம்..

விடியலுக்காக விண்ணை நம்பியிருப்பதை விட  முடியுமென உன்னை நம்பு..
எதிர்காலம் நம்முடையதுதான் மாணவர்களே!
கடுகளவேணும் போராட தயாரவோம்..

தொகுப்பு
வெளிச்சம் மாரி

நன்றி: அணு ஆராய்ச்சியாளர்  ஜெயபாலன் அவர்களின் வலைதளம்