Showing posts with label செக்ஸ். Show all posts



வா
ழ்வை மேம்படுத்த உதவும் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆக்கபூர்வமாக அன்றி அழிவுப்பாதைக்குப் பயன் படுத்தி​னால் என்னவாகும் என்பதற்கு மறுபடி ஓர் உதாரணம். இந்தமுறை பரிதாப இலக்கு ஒரு மாணவி! 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது தென்னம்பட்டி கிராமம். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறாள் ஒன்பது வயதான பார்வதி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). அதே ஊரில் உள்ள மற்றொரு அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறான் ரவி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). .  கடந்த 21-ம் தேதி, பார்வதியை பலாத்காரம் செய்ததாக ரவி கைது செய்யப்பட... அதிர்ந்து நிற்கிறது திண்டுக்கல் வட்டாரம்!

மருத்துவப் பரிசோதனைக்காக வடமதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மலங்க, மலங்க விழித்தபடி காத்திருந்த சிறுமி பார்வதியிடம் பேசினோம்.

''அண்ணே... நான் நாலாப்பு படிக்கிறேன். அன்னிக்கி ஆய் உக்கார்றதுக்காக அந்தப் பக்கமா போனேன். அப்ப அந்த அண்ணா வந்துச்சு. ' உன்னை கூப்புட்டு வரச்சொன்னாங்க’ன்னு கூப்புட்டுச்சு. நான் வர மாட்டேன்னுட்டேன். உடனே, என்னை அடிச்சு இழுத்துட்டுப் போச்சு. நான் அழுதுகிட்டே சத்தம் போட்டேன்.. உடனே அந்த அண்ணன் கர்ச்சீப்பை எடுத்து என் வாயில் வெச்சு அமுக்கிடுச்சு. 'நான் சொல்றபடி கேக்கலைன்னா கொன்னுடுவேன்'னு கழுத்தைப் பிடிச்சு அமுக்கிச்சு. அப்புறம் என் துணிகளை...'' (அதற்கு மேல் சொல்வதற்கு அந்தக் குழந்தைக்கும் தெளிவில்லை... கேட்க நமக்கும் தெம்பில்லை) என்றபடி அழத் தொடங்கினாள் பார்வதி.
அந்தச் சிறுமியே  தொடர்ந்தாள்.

''கர்ச்சீப் கீழே விழுந்ததும் நான் கத்துனதைக் கேட்டு விறகு வெட்ட வந்தவங்க ஓடி வந்தாங்க. உடனேஅந்த அண்ணா டவுசரை தலையில மாட்டிக்கிட்டு ஓடிடுச்சு. நான் வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொன்னேன்'' என்றபடியே நினைவுகள் தந்த நடுக்கத்தோடு தன் தாயாரை அணைத்துக் கொண்டாள்.
சிறுமியின் தாய் ஈஸ்வரி, ''நாங்க அன்னாடு கூலிக்குப் போனாதாங்க கஞ்சி. எங்களுக்கு ரெண்டு பொட்டப் புள்ளைங்க. இவதான் மூத்தவ. டவுனுபள்ளிக்கூடத்துல படிக்க வெக்க வசதியில்லாம உள்ளூர்ல படிக்க வெச்சோம். நாலாப்பு படிக்கிற பிள்ளையை இப்படி செஞ்சிப் புட்டானே... இவ தலையெழுத்து... எந்த தப்பும் பண்ணாம இந்த வயசுலயே போலீஸ், கோர்ட்னு அலைஞ்சு இன்னும் அவமானப்பட வேண்டியதாப் போச்சு'' என்றபடி தலையில் அடித்துக் கொண்டு கதறினார்.

இந்த வழக்கு தொடர்பாக நம்மிடம் பேசிய வடமதுரை அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கீதா, ''இந்த பிரச்னைக்குக் காரணமான அந்தப் பையன் இப்ப சீர்திருத்தப் பள்ளிக்குப் போயிட்டான். இதுக்கெல்லாம் காரணமே செல்போன்தான். அந்த ஊர்ல இருக்குற சில பசங்களோட செல்போன்ல ஆபாசப் படங்களை பார்ப்பானாம். அன்னிக்கும் அப்படி ஒரு படத்தைப் பாத்துட்டு இருந்தப்பதான், இந்தப் பிள்ளையைப் பார்த்திருக்கான். உணர்ச்சி வேகத்தில் இப்படிக் கேவலமா நடந்துக்கிட்டான். விசாரணை செய்றப்ப இதைத்தான் சொல்லிச் சொல்லி அழறான். 'இனிமே அசிங்கமான படத்தைப் பாக்க மாட்டேன். இப்படி நடந்துக்க மாட்டேன்'னு கதறி குமிச்சான். அவனைப் பெத்தவங்களும் தப்பு செஞ்சவன் தண்டனையை அனுபவிக்கட்டும்னு கோபத்தில் போயிட்டாங்க. எத்தனை பேருக்கு எவ்வளவு அவமானம், வேதனை பாருங்க'' என்றார்.

அறியாத வயதிலேயே இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடத் தூண்டுவது குறித்து மனநல மருத்துவர் அன்னராஜிடம் கேட்டோம். ''இன்டர்நெட்டில்  கொட்டிக்கிடக்கும் குப்பைகள்தான் முக்கியக் காரணம். அவற்றையும் மொபைல் போன்கள் மூலம் பரிமாறிக் கொள்ளும் அசிங்கங்களையும் பார்க்கும்போது, வயது வித்தியாசம் இல்லாமல் வக்கிர எண்ணங்கள் தூண்டப்படுவது இயற்கைதான்.  
வயதில், வலிமையில் குறைந்த பெண்ணாக இருப்பதால் வெளியே சொல்ல மாட்டாள் என்ற தைரியத்தில் இந்தத் தவறை செய்து இருக்கிறான் அந்தப் பையன். அந்தப் பெண் குழந்தைக்கு உடனடியாக உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்கா விட்டால் வாழ்க்கை முழுவதும் கூட இந்தப் பாதிப்பு மனதைவிட்டு அகலாது.

அந்தப் பையனுக்கும் உளவியல் சிகிச்சை அவசியம். இல்லா விட்டால் எதிர்காலத்தில் குற்ற உணர்வும், சீர்திருத்தப் பள்ளியின் சூழலும் அவனை மிகப்பெரிய குற்றவாளியாக மாற்றிவிடும் வாய்ப்பு உண்டு. பொதுவாகவே செல்போன், இன்டர்நெட் போன்றவற்றைப் பயன்படுத்தும் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகவும் கவனத்துடன் இருந்தாக வேண்டும். பள்ளிகளிலும் உளவியல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்பு உணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால், கட்டவிழ்ந்து கிடக்கும் அறிவியல் வளர்ச்சியால் இளம் சமுதாயத்துக்கு கெடுதலே அதிகம் மிஞ்சும்'' என்றார்.
வரங்களே சாபங்களாக மாறாதிருக்க, கூடுதல் கவனம் தேவைதானே!

- ஆர்.குமரேசன்
படங்கள்: வி.சிவக்குமார்


நன்றி: ஜூனியர் விகடன். 29 ஜூலை 2012



உங்கள் வீட்டில் யாராவது யாருக்கும் தெரியாமல் போனில் திருட்டுதனமாக பேசுகிறார்களா?... இல்லை அவர்களின் நடவடிக்கைகளில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறதா? இந்த கட்டுரையை தவறாமல் படிங்க:

ஒரு வருடத்திற்கு முன்னால் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த 17 வயது அனுவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

தன்னுடைய போனுக்கு வந்த  ராங்க் காலை நீங்க யாருங்க என பேச்சி விட்டு ராங்க் கால் என சொல்லிவிட்டு போனை துண்டித்து விட்டார். அதற்கு அடுத்த நாளும் அந்த கால் இவர் துண்டித்து விடுகிறார்.. ஒரு கட்டத்தில் எதிர் முனையில் பேசிய நபர் நைசாக பேசி… அந்த பெண்ணை காதலிப்பதாக சொல்லியிருக்கிறார். காதல் கண்ணை மறக்கும் என்பதுபோல் பெற்றவர்களின் கண்ணீரை மறைந்து விட்டு ராஜுடன் போனில் பேசினார்.

ஒரு கட்டத்தில் உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை எனும் நிலைக்கு தள்ளப்பட்ட அனு, வீட்டில் இருப்பது கஸ்டமாக இருக்கிறது நீ வந்து என்னை பொண்ணு கேளு என சொல்ல, எங்க வீட்டில் ஒரே கொஞ்சம் பிரச்சனையா இருக்கு, வேணா நீ வந்துடு நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு காப்பாத்துறேன் என்னை நம்பி வா என அழைக்க, காதலன் பேச்சில் மயங்கிய அனு வீட்டை விட்டு வந்து விடுகிறார்…..
  1. ·         காதலியாக இருந்து விபச்சாரியாக மாற்றப்பட்ட  அனு அனுபவித்த கொடுமை……..
  2. ·     இப்படியே பல பெண்களை சீரழித்த 9 பேரை கைது செய்ததன் பின்னனியில் வெளிச்சம் ….
  3. ·         செல்போனால் சீரழியும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை காப்பாற்ற என்ன செய்ய போகிறோம்


தொடர்ந்து பார்க்க: புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியான பதிவை..


நன்றி; புதிய தலைமுறை மற்றும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் நடந்தது என்ன குழுவினருக்கும்

                                                    -வெளிச்சம் நந்தினி

கோகுலம் கதிர் மாத இதழ் மே மாத இதழில் வெளியான பாலியல் கல்வி கிடைக்காததால் பாழாகும் மாணவர்கள் எனும் தலைப்பில் வெளியான கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்..
தமிழகத்தில் உள்ள மாணவர்கள் படும் பாட்டை விளக்கிய கட்டுரையில் பட்டணத்து மாணவர்களை விட கிராமத்து மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. குறிப்பாக பல மாணவிகளை ஆசிரியர்களும், பெற்றெடுத்த அப்பாவுமே கற்பழித்த கொடுமை அரங்கேறியுள்ளது எனும் கொடுமையை வெளிக்கொண்டு வந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறோம்..

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
நீங்களும் மற்றவர்களுக்கு உதவ நினைக்கிறீர்களா?

  இங்கே கிளிக் செய்யுங்கள்: ...........................................................................


Deterioration of sexual education for students
 (Our President Velicham Sherin interview on  GOKULAM KATHIR monthly magazine)

Gokulam Monthly Magazine, published in the May issue of sexual education for radiation because of the deterioration of the students are entitled to your view, published in the article ..
The deterioration of the students explained in this article, this problem than urban students, rural students is said to suffer the most. Spoiled, especially by teachers, students, dad raped daughter to uncover a great many have read the article ..
With thanks
Velicham Students  
If you like Join with Us : Just Click ...........................................................................


''தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கை ஒன்று, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 'இந்திய அளவில் கடந்த ஆண்டில் மட்டும் 7,379 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மனஉளைச்ச லால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும்’ சொல்கிறது அந்த அறிக்கை. 

2011-ம் ஆண்டு இணையதளப் பயன்பாடு குறித்துச் செய்யப்பட்ட ஆய்வில், உலக அளவில் இந்தியாவும் மாநில அளவில் தமிழகமும் முதலிடத்தில் உள்ளன. மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் மாணவர்களால் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை செக்ஸ் என்பது தான்'' இதுபோன்ற அதிர்ச்சிகளை அடுக்கிக் கொண்டே போகிறார்  'வெளிச்சம்’ என்ற அமைப்பை நடத்திவரும் ஷெரின். 'மாணவர்களே காதலியுங்கள்’ என்ற வித்தியாசமான புத்தகம் மூலம் இளைய தலைமுறையினரின் கவனத்தை ஈர்த்திருக்கும் அவரிடம் பேசினோம்.
''படிப்பைவிட, பாலியல் பிரச்னைதான் பெரும்பாலான மாணவர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்தின் பல பள்ளிக்கூடங்களில் நடந்த மருத்துவப் பரிசோதனையில், 320 மாணவிகள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. முகமே தெரியாத ஒருவரை விரும்பும் காதல், புத்தகத்தோடு கர்ப்பத்தையும் சுமக்கும் மாணவிகள், காதல் என்றால் என்னவென்று புரியாமல், அதில் தோல்வி கண்டு தற்கொலைக்கு ஆளாகும் மாணவிகள் என்று தினமும் பல சம்பவங்கள் நம்மைச் சுற்றி நடந்துகொண்டே இருக்கின்றன.

புரிதல் இல்லாத குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காகவும் வசதி இல்லாத குழந்தைகளைப் படிக்க வைக்கவும் ஹெல்ப் லைன் ஆரம்பித்தோம். அதில் 90 சதவிகிதம் மாணவர்கள் காதல் சந்தேகங்களைத்தான் தயங்கித் தயங்கிக் கேட்கிறார்கள். 'எனக்கும் என் காதலிக்கும் சண்டை. நான் ஐ-பாட் கேட்டும் தரவில்லை என்றதால் காதலியைக் கைகழுவி விட்டேன்’ என்று கேஷ§வலாகச் சொல்கிறார்கள்.

ஒரு மாணவி தன் மாமாவுடன் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத சென்னைக்குச் சென்றாள். ரூம் எடுத்துத் தங்கி தேர்வுக்குப் புறப்பட்டாள். தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி டி.வி. பார்க்க உட்கார, அதில் ஆபாசப் படம் ஓடுகிறது. 'என்ன மாமா அசிங்கமா இருக்கு’ என்று வாயைத் திறக்கும்முன் இழுத்து அணைத்த மாமா, பாலியல் தொந்தரவு செய்கிறார். தப்பித்து வீடு வருகிறார் மாணவி. அம்மாவிடம் நடந்ததைச் சொல்ல நினைப்பதற்குள், 'இப்போதான் மாமா போன் செஞ்சார். பஸ் ஏத்திவிட்டேன். பத்திரமா வந்தாளான்னு அக்கறையா விசாரிச்சார். உன்மேல மாமாவுக்குத்தான் எத்தனை அக்கறை’ என்று தன் அண்ணனை மெச்சுகிறாள் அந்தத் தாய். தனக்கு நேர்ந்த கொடுமையை அம்மாவிடம் சொல்ல முடியாமல்... அப்பா விடமும் பேச முடியாமல் தனக்குள் புழுங்கித் தவிக்கிறாள். இது ஒரு சாம்பிள்தான்... இப்படி நிறையவே நடக்கின்றன.
காதல், செக்ஸ் பற்றிப் பேசக்கூடாது என்று பெற்றோர் நினைக்கின்றனர். அதைப்பற்றி விவாதிக்கவே கூடாது என்று கல்விநிறுவனங்கள் கருதுகின்றன. பாலியல் கல்வி தரமறுக்கும் சமூகத்தில்தான் அந்தரங்க ரகசியங்களைச் சொல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பகிரங்கமாக ஒளிபரப் பாகின்றன. அப்பாவும் அம்மாவும் கற்றுத்தராத சாட்டிங், காதல் பாடங்களை மாணவர்கள் ஊடகங்கள் மூலமாக தாங்களாகவே கற்றுக்கொள்கிறார்கள். 'அவன் நல்லவன் என்று நம்பி ஏமாந்துவிட்டேன். நான் சாகப்போகிறேன்’ என்று, தற்கொலைக்கு முயற்சி செய்த ஏராளமான மாண விகளை எனக்குத் தெரியும்.
இந்தச் சூழலில் சிக்கிய மாணவிகள், தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். தானாகவோ, நண்பர்கள் மூலமோ பெற்றோரிடம் நடந்ததைச் சொல்லவேண்டும். பாலியல் தொந்தரவை நினை த்து வலிகளோடு, மனஅழுத் தத்தில் வாழ்வதைவிட அநீதியை எடுத்துச் சொல் வதில் தவறில்லை. அத னால் மாணவ-மாண விகளுக்கு பாலியல் குறி த்த புரிதல் தேவையாக இரு க்கிறது. பிரச்னைகளை எப்படிக் கையாள்வது என்பதையும் அவர்களுக்குச் சொல்லித்தரவேண்டும்.

பள்ளிகளில் நீதிவகுப்புகள் எடுத்தால் மட்டும் போதாது. பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்ற சுயஆராய்ச்சியை வளர்த்தெடுக்கவேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா போன்றவற்றில் சித்தி ரிக்கப்படும் பாலியல் தூண்டல்களையும், பழிக்குப்பழி வாங்கும் உணர்வுகள் பற்றியும் விவாதத்துக்கு உட்படுத்தினால் அதைப் பின்பற்ற மாட்டார்கள். மாணவர்களுக்கு பாலின ஈர்ப்பு, ஹார்மோன்கள் செயல்பாடு, தொடுதல், நட்பு, காதல் பற்றி புரிகிற மாதிரி பக்குவமாக விளக்கவேண்டும். காதல் என்பது ஒரு ஆண், பெண்ணைக் காதலிப்பது மட்டுமல்ல. தேசம், மொழி மீது செலுத்தும் அன்பும் காதல்தான் என் பதை மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

'உன்னை நீயே காதலி, உன் திறமை களைக் கண்டுகொள்வாய். அறிவைக் காதலி, புத்தகங்களில் இடம் பெறுவாய். பெற்றோரைக் காதலி, பாசத்தைக் உணர்வாய் இயற்கையைக் காதலி, தலைமுறை உன்னை வணங்கும். தேசத்தைக் காதலி, வரலாறு உன்னைப் போற்றும்... என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். பெற்றோரும் ஆசிரி யர்களும் கல்வியைத்தாண்டி கவனம் செலு த்தினால் பிள்ளைகள் வாழ்வு பாழாகாது'' என்கிறார் அக்கறையுடன்.

பெற்றோர்களும், ஆசிரியர்களும் முதலில் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்!

-க.நாகப்பன் படம்: வீ.நாகமணி 

நன்றி: ஜூனியர் விகடன்.17.3.12





ல்விக்கும், கல்விக் கண் திறக்கும் ஆசிரியர்களுக்கும் உரிய மதிப்பு அளிக்காத வரையில், எந்தவொரு சமூகமும் முழுமை பெற்றதாக மாற வாய்ப்பே இல்லை! அப்படி இருக்க, 'கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டில்' அடுத்தடுத்து அரங்கேறி வரும் அவலங்களைப் பார்க்கும்போது, தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் குறித்து அச்சம் மேலிடுகிறது.

 பள்ளி ஆசிரியை மீது வகுப்பறையிலேயே கத்தியைப் பாய்ச்சிக் கொன்ற மாணவன்; உடன் பழகிய பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அவளைச் சூறையாடிய மாணவர்கள்; 'பஸ் தினம்' என்ற பெயரில் அரசுப் பேருந்துகளின் மீது கல்லெறிந்து நாசமாக்கி, பொதுமக்களையும் போலீஸாரையும் காயப்படுத்திய மாணவர் கூட்டம்... இவை எல்லாமே, அடுத்தடுத்து வெளியான செய்திகள். இதே நாட்களில்தான், படிப்பின் மீது கொண்ட விரக்தி, பயம் காரணமாக மாணவன் ஒருவன் தன்னைத்தானே மாய்த்துக்கொண்ட தகவலும் வெளியாகி இருக்கிறது.

'இங்கேதான் தவறு' என்று இடம்சுட்டிப் பொருள் விளக்க முடியாத அளவுக்கு கல்வித் தாயின் உடலெங்கும் புரையோடிப்போய் இருக்கின்றன கண்மூடித்தனமான காயங்கள். ஒழுக்கம் என்பது கற்பவர்களுக்கு மட்டுமல்ல... கற்பிக்கும் ஆசான்களுக்கும் அதிஅவசியம் என்பதுதான் காலம் காலமாக இருந்துவந்த நிலைமை. ஆனால், அரசாங்கம் தொடங்கி, கல்விக்கூடங்கள் வரையில் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கு வைத்திருக்கும் அளவுகோல்களில் எதுவுமே ஒழுக்கம் சார்ந்ததாக இல்லை. அவையும்கூட, மதிப்பெண் சார்ந்தவையாகவும், தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் சாமர்த்தியம் சார்ந்தவையாகவும்  மாறிப்போயிருக்கின்றன!

இன்னொரு பக்கம், புகழ்பெற்ற பல தனியார் கல்வி நிலையங்களில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மட்டுமல்ல... அவர்களுக்கு அங்கே அளிக்கப்படும் மரியாதையும்கூட ரொம்பவே சிறுத்துப்போய் இருக்கிறது!

மாணவனின் வாழ்க்கை என்பது அவன் வாங்கும் மதிப்பெண்களில் மட்டும் ஊசலாடும் விதமாகக் கல்விமுறையை வைத்திருப்பதால், ஓரிரண்டு மதிப்பெண்கள் குறைந்தாலும்கூட, அவன் வாழ்க்கையே அறுந்து பாதாளத்தில் வீழ்ந்துவிட்டதுபோல பெற்றோர் காட்டும் பதற்றம், அப்படியே மாணவர்களையும் தொற்றிக்கொள்கிறது.

'பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் வெற்றி காட்டாவிட்டால், எங்கள் கல்வி நிலையத்தின் வியாபாரம் கெட்டுவிடும்' என்று வெளிப்படையாகச் சொல்லியே மாணவர்களை வெளியேற்றும் சீர்கெட்ட கல்விமுறைதானே, ஒரு பாவமும் அறியாத அந்த ஆசிரியை உயிரை இன்று விலையாகக் கேட்டுவிட்டது? கல்விக்குக் கொட்டிக் கொடுப்பதைக் குடும்பத்தின் கௌரவமாகவும்... கை நிறைய குழந்தையின் செலவுக்குக் கொடுப்பதைத் தங்கள் குற்ற உணர்வுக்கான வடிகாலாகவும் நினைக்கிற பெற்றோரும் அல்லவா இந்தப் பாவத்தின் பங்குதாரர்கள்?

தேர்வில் தோற்றாலும் வாழ்க்கையில் ஜெயித்த நடைமுறை புத்திசாலிகளையும் ஒழுக்கச் சீலர்களையும் உழைப்பாளிகளையும் குழந்தைகளுக்கு உதாரணம் காட்டத் தவறுவது கல்விக்கூடங்கள் மட்டுமா... பெற்றோரும்தானே? பொய் சொல்லாத அரிச்சந்திரனைப் பற்றியோ, தர்மம் தவறாத தருமரைப் பற்றியோ, அகிம்சையே உருவான மகாத்மா காந்தியைப் பற்றியோ நினைப்பதற்காவது இவர்களுக்கு நேரம் இருந்தால்தானே, குழந்தைகளோடு வாய்விட்டுப் பகிர்ந்துகொள்வதற்கு!
'நீதி போதனை' வகுப்புகளை முற்றிலுமாக இழுத்து மூடிவிட்ட நாம், மதிப்பெண் குவிக்கும் சூத்திரங்களை மட்டுமே வாழ்க்கையின் சாத்திரங்களாக இன்னும் எத்தனை நாளைக்கு வைத்திருக்கப்போகிறோம்? புத்தியைத் தீட்ட வேண்டிய தெய்வீகப் பட்டறையில் கத்தியைத் தீட்டியது அந்த மாணவனின் தவறல்ல... முழுக்க முழுக்க இன்றைய கல்விமுறையின் குற்றம்தான் என்பதை எப்போது ஒப்புக்கொள்ளப்போகிறோம்?

அரசாங்கம், கல்விக்கூடங்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய அனைவரின் நோக்கும் போக்கும் ஒரே நாளில் நேராகிவிடும் என்று எதிர்பார்ப்பது பேராசைதான். ஆனால், இதில் ஏதேனும் ஒன்றில் இருந்துதான் இன்னொன்று தொடங்க வேண்டும். அதற்கு இன்றில் இருந்தாவது நம் பார்வையைச் சீராக்கி, நேராக்கிக்கொள்ள மாட்டோமா?

நன்றி: ஆனந்த விகடன்.22.2.12


வெளிச்சம் மாணவர்கள் வலைபூ வாசகர்களே!

நாங்கள் கடந்த 7 வருடமாக ஏழைகளுக்கான கல்விப்பணியோடு தமிழகத்தின் பல்வேறு பள்ளி- கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கான பாலியல் மற்றும் உளவியல் தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்தி மாற்றத்தை ஏற்படுத்தி வருவதை வலைபூ வழியாக தாங்கள் அறிவீர்கள் ஆனால் கீழே நீங்கள் படிக்க போகும்  சம்பவம் எமது 7 ஆண்டு வேலைக்கு சவால் இந்த மண்ணில் சீரழிந்து போகும் மாணவனையும் எமக்கான அவமானம்...

இந்த சம்பவம் எம் தூக்கத்தை கலைத்தது, வலியால் துடித்து போனோம், பெற்றோர்கள் ஆசிரியர்கள் எப்படி இருக்க்கூடாது என்பதற்கு இந்த சம்பவம் 
ஒரு பாடம்..


    வயசுக் கோளாறு, பெற்றோர் - ஆசிரியர்கள் கவனிப்பு இன்மை காரணமாக டீன் ஏஜ் மாணவ, மாணவிகள் நடத்திய 'மன்மதலீலை’யால் ஓர் உயிர் பலியாக, பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியை அடுத்த பாதிரிவேடு கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் ப்ளஸ் டூ மாணவர்கள் ஐந்து பேரும், ப்ளஸ் ஒன் மாணவிகள் இருவரும் நட்போடு பழகி இருக்கிறார்கள். இந்த நட்பு அளவுக்கு மீறி, 'விபரீத’ எல்லைக்குள் நுழைந்திருக்கிறது. கடந்த 17-ம் தேதி சனிக்கிழமை பள்ளி விடுமுறை. ஸ்பெஷல் கிளாஸ் என்று பொய் சொல்லிவிட்டு பள்ளிக்கு வந்த ஏழு பேரும், எசகுபிசகான பாடம் படித்திருக்கிறார்கள். அதனை அவர்களில் ஒரு மாணவன் செல் போனில் படம் பிடித்தும் வைத்துள்ளான். பேச்சுவாக்கில், அந்தப் படங்களை சில மாணவர்களிடம் காட்டி இருக்கிறான். அது மற்றவர்களுக்கும் பரவிப் பரவி, இன்டர்நெட் வரை படம் போயேவிட்டது.


உடனே, தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவி கள் அத்தனை பேரையும் பள்ளியை விட்டு நீக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் சிக்கியவர்களில் செதில்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திலகவதியும் ஒருவர். அவர், 21-ம் தேதியன்று தனது வீட்டில் பிணமாக தொங்கினார். 'ஆபாசப் பட விவகாரத்தால்தான் மனமுடைந்து திலகவதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமாக ஐந்து மாணவர்களையும் கைது செய்ய வேண்டும்’ என்று, மாணவியின் பெற்றோரோடு சேர்ந்துகொண்டு, ஏரியாவாசிகளும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அதனால், தற்கொலைக்குத்தூண்டியதாக ஐந்து மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த பாதிரிவேடு போலீஸார், கங்கா, சுமன், கார்த்திக் என்ற மூன்று மாண வர்களைக் கைது செய்தார்கள். தங்கராசு மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும்  தலைமறைவாகி விட்டார்கள். இந்த நிலையில், வடக்கு மண்டல ஐ.ஜி-யான சைலேந்திரபாபு ஸ்பாட்டுக்கே வந்து விசாரணை நடத்த, திலகவதி மரணத்தில் திகில் திருப்பம்.

'திலகவதியை அவரது சித்தப்பா ஹரி கொலை செய்து விட்டார்’ என்று அறிவித்திருக்கும் பாதிரிவேடு போலீஸாரிடம் விசாரித்தோம். ''திலகவதியின் மரணம் பற்றி தகவல் அறிந்து நாங்கள் ஸ்பாட்டுக்குச் சென்றபோது, அவரது பிணம் கீழே இறக்கி வைக்கப்பட்டு இருந்தது. அப்போதே எங்களுக்கு சந்தேகம். ஸ்பாட்டுக்கு வந்து விசாரணை நடத்திய ஐ.ஜி. சைலேந்திரபாபு, 'இது தற்கொலையாகத் தெரியவில்லை. நன்றாக விசாரியுங்கள்’ என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றார். அதனையடுத்து திலகவதியின் உறவினர்களிடம் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. குமார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த.... உண்மை வெளிவந்தது.

'குடும்பத்துக்கே பெரிய அவ மானத்தை ஏற்படுத்தி விட்டார் திலகவதி என்று, அண்ணி பத்மாவதி அழுதார். அதனால், இந்தக் களங்கத்தைத் துடைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. சம்பவத்தன்று அண்ணன் வீட்டுக்குச் சென்று திலகவதியிடம் விசாரித்தேன். ஏதேதோ சொல்லி மழுப்பினார். ஆத்திரத்தில் ஓங்கி அடித்தேன். மயங்கி விழுந்து விட்டார். வீட்டில் இருந்த புடவையால், கழுத்தை இறுக்கிக் கொலை செய்தேன். பின்னர், மின் விசிறியில் பிணத்தை தொங்கவிட்டுவிட்டு கிளம்பி வந்துவிட்டேன்’ என்று வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார் ஹரி. இந்தக்
கொலைக்கு உடந்தையாக இருந்த காரணத்தால் திலகவதியின் அம்மா பத்மாவதியையும் கைது செய்திருக்கிறோம்'' என்று சொன்னார்கள்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜி டம் பேசினோம். ''இந்த ஐந்து மாணவர்களும் செய்த அடாவடி  அதிகம். நான் இந்தப் பள்ளிக்கு வந்தே நான்கு மாதங்கள்தான் ஆகிறது. இந்த ஐந்து மாணவர்களையும் பலமுறை பள்ளியை விட்டு துரத்தி இருக்கிறேன். பின்னர், மன்னிப்புக் கடிதம் கொடுத்து சேர்ந்து விடுவார்கள். சரி... இன்னும் நாலு மாசத்துல ப்ளஸ் டூ முடிச்சுட்டுப் போயிடுவாங்க... வாழ்க்கையைக் கெடுக்க வேண்டாம் என்று நினைத்துதான் விட்டு வைத்தேன். ஆனால், அதற்குள் இப்படி நடந்து விட்டது'' என்றார் வருத்தமாக.

முதன்மைக் கல்வி அலுவலர் மோகன் குமாரை சந்தித்தோம். ''குறிப்பிட்ட ஐந்து மாணவர்களும் கடந்த ஆண்டும் இதேபோன்று ஒரு பாலியல் புகாரில் சிக்கினார்கள். அப்போதே டி.சி. கொடுத்தோம். பின்னர், மாணவர்களின் பெற்றோர் மன்னிப்புக் கேட்டதால் மீண்டும் பள்ளியில் சேர்த்தோம். திருந்தி விடுவார்கள் என்று நினைத்தோம், ஆனால், இந்த அளவுக்குக் கெட்டுப் போய், தீராத அவமானத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். மாணவர்கள் செய்யும் தவறுகளை ஆசிரியர்கள் சுட்டிக் காட்டிய பிறகும், பெற்றோர் பொறுப்பு இல்லாமல் இருந்திருக்கிறார்கள். இனி, பள்ளிகளில்  கண் காணிப்பை தீவிரப்படுத்துவோம்'' என்றார்.

இந்த விவகாரம், பருவ வயதில் குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் பாடம்!



நன்றி: ஜூனியர் விகடன் - 28.12.11
_____________________________________________________________________________________________
Summary :


Thiruvallur District, Taluka kummitippunti,patirivetu to the government secondary schoolstudents in five, girls are getting together with friends. This friendship is overloaded, sex goes up, a few days ago, a special class that parents lied to me, the school hall to go where the students at ease sexually,The scenes recorded on mobile phone by students and that sex videos publishing on the Internet, the problem was issue leakage on parents, in this matter knowing  the student  THILAGAVATHI.S Uncle Hari, Harry killed her in rage,So he and other students were arrested by police


 21.09.11  அன்று ஜெயா தொலைக்காட்சியின்  காலைமலர் நிகழ்ச்சியில்  வெளிச்சம் அமைப்பின் இயக்குனர்   வெளிச்சம் செரின் அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பானது.. நிகழ்ச்சியில்  பேசிய செரின் அவர்கள்  மாணவர்கள் உளவியல் மற்றும் செக்ஸ் சார்ந்த     பிரச்சனைகளை பற்றி  பேசினார்.. குறிப்பாக 
  • ஏன் படிக்கும் வயதில் பிள்ளைகளுக்கு  காதல் வருகிறது
  • பெற்றவர்களை ஏன் பிள்ளைகள் வெறுக்கிறார்கள்    
  • மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி அவசியமா?   

 1போன்ற மாணவர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியை  பார்த்த  நிறைய நண்பர்கள் நம்மை தொடர்பு கொண்டு வாழ்த்தினர்.  நிறைய பேர் பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்கள்.  ஒரு நண்பர் பதிவேற்றியிருக்கிறார் என  தகவல் கிடைத்தது அவருக்கு நன்றி சொல்லி கொள்கிறோம்..

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்





Tomorrow (21.09.11) Velicham sherin interview telecast in Jaya tv - Kalai malar Program. this program discussed about psycho- social problems and sex affair of the students


எப்படா  சூரியன் மறையும்னு தவங்கிடக்கிற  பெண்களை பட்டணம் முதல் பட்டிகாடு வரை பரவலாக காணமுடிகிறது… காரணங்கள் பல  அல்ல ஒன்றே...அது சீரியல்கள் என்கின்றனர் பெண்கள்..

 திண்டிவனம் நகராட்சியில் பெண்களுக்கான பயிற்சியில் சிறப்பு பயிற்சியாளராக வெளிச்சம் செரீன் மற்றும் வெளிச்சம் மாணவர்களை  அழைத்திருந்தனர் நகராட்சி நிர்வாகம்..

தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு குறித்து பேச தொடங்கினார் செரின் அவர்கள்..  பெண்கள் தான் சமூகத்தை பிரசவிக்கிற மொத்த பங்களிப்பை பெற்றுள்ளார்கள். சமூகத்தை சரியாக  வளர்த்தெடுக்கிற பக்குவம் ஒவ்வொரு பெண்மனிக்கும் உண்டு. ஏனெனில்  ஒரு தாய் குழந்தையை வளர்த்தெடுப்பதில் இருந்து  கடைசி காலம் வரை பெண்கள்தான்  ஆனால் பெண்கள்  இப்போது

     குழந்தைகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை  உணர்ந்திருக்கிறார்களா என்றால் இல்லை என்று தோன்றுகிறது…
          
 கலை நிகழ்ச்சிகளில் வெளிச்சம் மாணவர்கள்

குழந்தைகள் மீதான தமது பொறுப்பை தட்டி கழிக்கும் பாங்கு பெண்களுக்கு வளர்ந்திருக்கிறது, அல்லது வளர்த்திருக்கிறது இந்த சீரியல்கள். இதன் காரணமாக, பிள்ளைகளோடு பேசுவதில்லை, பிள்ளைகளை வேண்டுமென்றே டியூசன்களுக்கு அனுப்பிவிட்டு  தொடங்குகிறது சீரியல் வாழ்க்கை.. படிக்க தெரியாத  பெண்கள் தான் குழந்தைகளை டியூசனுக்கு  அனுப்புவதற்க்கு எழுத படிக்க தெரியாததால் சொல்லிகொடுக்க தெரியவில்லை என்பதை சீரியல் பார்க்க  காரணமாக சொல்கிறார்கள் என்றால்,..படித்த பெண்களும் இதே காரணத்தை சொல்வதுதான் வியப்பாக இருக்கிறது.


      இதனால்  குழந்தைகள் எல்லா வகையிலும்  சீரழிந்து போவதை காண முடிகிறது.. குறிப்பாக போன வருடம் தஞ்சாவூர் பக்கம் குடிக்க பணம் தரலைன்னு தாயை கொன்ற 5  வகுப்பு மாணவனை பற்றி படிக்கும் போது மனசுக்குள்ள படபடன்னு ஓடுகிறது..கோலங்கள் நாடகத்தோட கடைசி எபிசோட பார்க்க முடியாததல் தீக்குளிச்ச மதுரை மீனா (10 வயசு) மாணவியை மறந்துட்டீங்களா..என சொல்லும் போது தாய்மார்கள்  சிலர் அழுவதை பார்க்க முடிந்தது.. பெண்பிள்ளைகளை வளர்ப்பதை தென்னம்பிள்ளையை வளர்ப்பதை போல கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். கொஞ்சம் தவிறினால்  இழப்பு நமக்குதான்…. உங்க மகள் அதிகமா சாப்பிடாம  கொஞ்சமா சாப்பிடுவதை பார்த்து இனி கண்டிப்பீங்களா இல்லை, அவ அதிகமா சாப்பிடமாட்டா ன்னு சொல்லி அவ எதிர்காலத்தை நாசமாக்க போறீங்கிளா?.. இனி இந்தியாவில் பிறக்க போகும் பிள்ளைகள் 100%  இரும்பு சத்து குறையா தான்  பிள்ளைகள் பிறக்கும்னு புள்ளிவிவரம் சொல்லுது என்ன செய்ய போறீங்க…என செரின் சொல்லும் போது இனி “மக” சாப்பிடலைன்னா செத்தா” என ஒரு தாய் சொல்ல, எல்லோர் முகத்திலும் புன்னகை..

கொஞ்சம் சிரிக்க விட்டு உங்க பிள்ளையை அடிப்பதை முதலில் நிறுத்துங்கள்… அவர்களுக்கு எப்படி சொன்னால்  புரியுமோ அப்படி சொல்லுங்கள் அதை கண்டுபிடிங்கள்… ஏனெனில்  குழந்தைகள் எல்லோருக்கும் முதல் எதிரி யாருன்னா அப்பா அம்மாதான்னு சொல்லுறாங்க. உங்க பிள்லை நீங்க சொன்னா கேட்காம யார் சொல்லி கேட்பாங்க…என பேச எல்லோர் முகத்திலும் பயம் தெரிந்தது..மெல்ல பேசி முடிக்க  சரவெடியைவிட அதிகமாய் கரவோசை எழ அமர்ந்தார் செரின்.. அதனை தொடர்ந்து வெளிச்சம் மாணவர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது..

 நிகழ்ச்சி குறித்து பேசிய பெண்மனி ஒருவர்:

           ஒரு தாயாய் நான் எனக்கான கடமையை இதுவரை சரியாக செய்யவில்லை என உணர்கிறேன்., வீட்டுவேலை, குடிகார வீட்டுகாரங்கிட்ட படுற அவஸ்தை, என எங்க கஸ்டத்தை போக்குதுன்னுதான் சீரியல்களை  பார்க்குறோம். அதை மணிக்கணக்கா பார்த்து கொண்டிருப்பதால் பாலாகும் குடும்ப  உறவின் புனிதத்தை வெளிச்சம் வெளிச்சமிட்டுகாட்டியது… எங்களுக்கு கிடைத்தை போல் வெளிச்சம் பரவட்டும் என்றார்....
 நன்றி சொல்லும் பெண்கள்


பெண்குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வெளிச்சம் மாணவர்கள்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக  நாம் பல முயற்ச்சிகளை மேற்கொண்டோம்…(எடுத்துகாட்டு)… மேலும் கோவை மாநகரம் மற்றும் தமிழக மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்குள் கடந்த ஆண்டில் மட்டும் 26 பெண் குழந்தைகள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளனர். இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் மறக்காத சம்பவம் கோவையில் கொள்ளப்பட்ட அக்கா, தம்பி

கடத்தல், கற்பழிப்பு, பாலியல் சித்ரவதை வன்முறைகள் பெண்கள் மீது மட்டுமின்றி, ஏதுமறியா பெண் குழந்தைகள் மீதும் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான சம்பவங்கள் பெற்றோராலும், உறவினர்களாலும் மறைக்கப்படுகின்றன. வெளியில் தெரிந்தால் அவமானம் நேரிடும் எனக்கருதி சம்பவத்தை மூடி மறைப்பதால், சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர். பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகளுக்கு கொடூர மரணம் நேரிடும்போது மட்டுமே வெளிச்சத்துக்கு வருகின்றன. கடந்த ஆண்டில், கோவை நகரில் பள்ளிக்குச் செல்லவிருந்த 11 வயது பெண் குழந்தையும், உடன் 9 வயதான தம்பியும் கால் டாக்சி டிரைவரால் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு பின் கொடூரமாக கொல்லப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இத்துயர சம்பவத்தில் தொடர்புடைய கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், போலீஸ் "என்கவுன்டரில்' சுட்டுக்கொல்லப்பட்டான். இச்சம்பவத்துக்கு பிறகாவது, குழந்தைகளை பாலியல் சித்ரவதை செய்யும் நபர்கள் மத்தியில் அச்சம் ஏற்படுமென போலீசாரும், பொதுமக்களும் கருதினர். ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் கோவை மாநகராட்சி பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமி, தனது மாமாவால் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு பின் கொலை செய்யப்பட்டாள்.

இதுபோன்ற சம்பவங்கள் பெண் குழந்தைகளின் பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. உண்மையில், மேற்கண்ட சம்பவங்கள் கொலையில் முடிந்ததால்தான் விஷயம் வெளியுலகுக்கு தெரியவந்தது. வெளியுலகுக்கு தெரியாமலும் பல சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.கடந்த ஆண்டில், கோவை மாநகரில் 4 பெண் குழந்தைகள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகினர். ஈவு இரக்கமின்றி குழந்தைகளின் மீது பாலியல் வக்கிரத்தை காட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் உள்ளது. அதே போன்று, தமிழக மேற்கு மண்டலத்தில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக மொத்தம் 26 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில் கோவை மாவட்டத்தில் 2, ஈரோட்டில் 5, நீலகிரியில் 1, திருப்பூரில் 5, சேலத்தில் 2, நாமக்கல்லில் 3, தர்மபுரியில் 1 முறையே பெண் குழந்தைகள் பாலியல் சித்வதைக்கு உள்ளாகினர். தவிர, குழந்தைகள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 3 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு, தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி ஆகியோர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து வக்கீலும், கோவை பாரதியார் பல்கலை செனட் உறுப்பினருமான சண்முகம் கூறியதாவது:                     
சிவணான்டி ஐ.பி.எஸ் 
                                 பனிரெண்டு வயதுக்கு உட்பட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பெரும்பாலும் அறிமுகமான நபர்களாலேயே நடக்கின்றன; அறிமுகமில்லா நபர்களுடன் பெண் குழந்தைகள் செல்வதில்லை. கோவையில் பள்ளிக்குழந்தைகள் இருவர் காரில் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம், நன்கு அறிமுகமான டாக்சி டிரைவரால் நடந்தது. சவுரிபாளையத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர், அந்த சிறுமியின் மாமா முறை உறவினர்.ஏற்கனவே, தங்களுக்கு அறிமுகம் உள்ளதால் பெண் குழந்தைகள் தங்களுக்கு நேரிடப்போகும் ஆபத்தை உணராமல் உடன் சென்றுவிடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க பெண் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். "சாக்லெட் வாங்கித்தருகிறேன், விளையாட்டு பொருள் வாங்கித்தருகிறேன் என யாராவது அழைத்தால் உடன் செல்லக்கூடாது' என, அறிவுறுத்த வேண்டும். கூடுமானவரை பெண் குழந்தைகளை வீட்டில் தனியே விட்டுச் செல்வது; உறவினர் வீடுகளில் விட்டுச் செல்வது, போன்ற செயலை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், தங்களை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோரும் சொல்லித்தர வேண்டும். பாலியல் வன்முறைகளை போலீசாரால் தடுப்பதற்கான வாய்ப்பு மிக, மிக குறைவு; ஆனால், பெற்றோரும், குழந்தைகளும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தவிர்க்க முடியும். இவ்வாறு, வக்கீல் சண்முகம் தெரிவித்தார்.

நன்றி: தினமலர்

வெளிச்சம் வெளிக்கொண்டு வந்த மாணவி பிரச்சனை ஓர் இணைய தளத்தில்: http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=2270