Showing posts with label செக்ஸ் டார்ச்சர். Show all posts



உங்கள் வீட்டில் யாராவது யாருக்கும் தெரியாமல் போனில் திருட்டுதனமாக பேசுகிறார்களா?... இல்லை அவர்களின் நடவடிக்கைகளில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறதா? இந்த கட்டுரையை தவறாமல் படிங்க:

ஒரு வருடத்திற்கு முன்னால் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த 17 வயது அனுவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

தன்னுடைய போனுக்கு வந்த  ராங்க் காலை நீங்க யாருங்க என பேச்சி விட்டு ராங்க் கால் என சொல்லிவிட்டு போனை துண்டித்து விட்டார். அதற்கு அடுத்த நாளும் அந்த கால் இவர் துண்டித்து விடுகிறார்.. ஒரு கட்டத்தில் எதிர் முனையில் பேசிய நபர் நைசாக பேசி… அந்த பெண்ணை காதலிப்பதாக சொல்லியிருக்கிறார். காதல் கண்ணை மறக்கும் என்பதுபோல் பெற்றவர்களின் கண்ணீரை மறைந்து விட்டு ராஜுடன் போனில் பேசினார்.

ஒரு கட்டத்தில் உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை எனும் நிலைக்கு தள்ளப்பட்ட அனு, வீட்டில் இருப்பது கஸ்டமாக இருக்கிறது நீ வந்து என்னை பொண்ணு கேளு என சொல்ல, எங்க வீட்டில் ஒரே கொஞ்சம் பிரச்சனையா இருக்கு, வேணா நீ வந்துடு நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு காப்பாத்துறேன் என்னை நம்பி வா என அழைக்க, காதலன் பேச்சில் மயங்கிய அனு வீட்டை விட்டு வந்து விடுகிறார்…..
  1. ·         காதலியாக இருந்து விபச்சாரியாக மாற்றப்பட்ட  அனு அனுபவித்த கொடுமை……..
  2. ·     இப்படியே பல பெண்களை சீரழித்த 9 பேரை கைது செய்ததன் பின்னனியில் வெளிச்சம் ….
  3. ·         செல்போனால் சீரழியும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை காப்பாற்ற என்ன செய்ய போகிறோம்


தொடர்ந்து பார்க்க: புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியான பதிவை..


நன்றி; புதிய தலைமுறை மற்றும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் நடந்தது என்ன குழுவினருக்கும்

                                                    -வெளிச்சம் நந்தினி



 சமூகத்தை பக்குவப்படுத்துகிற பொறுப்பும் கடமையும் உள்ளவர்கள் தானே ஆசிரியர்கள், அந்த ஆசிரியர்களுக்காக தத்துவார்த்தமான புனிதத்தை  தற்போதைய ஆசிரியர்கள் மறந்து போனதற்கான காரணங்களை தேடினால் விடை தெரியா கணக்காகி கிடைக்கிறது...

ஒரு பக்கம் கல்வி காசாகிப்போன சூழல் இன்னொரு பக்கம் சமச்சீர்கல்விக்கு காத்து கிடந்தது போக காயங்களுக்கு ஒட்டு போடலாம் ஆனால் புத்தகங்களுக்கு பேண்டேஞ்  போட்ட அவலமும் இங்குதான் நடக்கிறது..

எந்தவிதமான லாப நோக்கமில்லாமல் சொல்லி கொடுத்த எங்கள் ஆசிரியர்களே எங்களுக்கு கடவுளாக காட்சியளித்தாகள்... அவர்கள் எங்களுக்கு ஒழுக்கத்தை ஒழுக்கமாய் சொல்லி கொடுத்ததார்கள் அதனால் எங்களை  பலருக்கு ஆசிரியர்களே ரோல் மாடலாக இருந்தார்கள் அது ஒரு கனாக்காலம்...


இப்ப எங்க உண்மையான ஆசிரியர்கள் இருக்கா...

இந்த கேள்வி எல்லோருடைய மனதிலும் எழவே செய்கிறது அதற்கு சில காரணங்கள் இருக்கச்  செய்கிறது...

கும்பகோணம் பள்ளி  தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகியபோது எத்தனை ஆசிரியர்கள் காயம் பட்டார்கள்... என  சொல்ல முடியுமா?  நீங்க சொல்லலாம் வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் 11 குழந்தைகளை மீட்ட பின்னர் உயிரிழந்த ஆசிரியை சுகந்தி யை இத்தனை வருடங்களாக சுகந்தி மட்டும் தான் விதிவிலக்கு  அதன்பிறகு எத்தனை வேன் விபத்துக்கள் எத்தனை பலிகள் தமிழகம் முழுக்க இவை யெல்லாம் கல்வி பிசினஸ் ஆனதன் அடையாளம்  ...

பள்ளிக்கூட பொண்ணுங்களை சில்மிசம் செய்த ஆசிரியர்கள், பிராக்டிக்கள் மார்க் போட முத்தம் கேட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் பிவிசி பைப்பால் அடிச்சதால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவனென படிக்க அனுப்பிய பிள்ளைகளை பாடையில் அனுப்பிய கொடுமைகள் இங்கேதான் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.....

 இதுமட்டுமல்லாமல்  ஆசிரியர்கள் அழககழகான விதவிதமான காஸ்டியூம்களில் புடவைகளில் காட்டும் அக்கறையை ஒரு மாணவனின் உண்மையான வளர்ச்சியில் காட்டியதுண்டா? அப்படி காட்டியிருந்தால் இளம்குற்றவாளிகள் குறைந்திருக்க கூடும்..ஆனால் இவர்கள் பாடத்தை மட்டுமே எடுக்கிறார்கள் நமக்கொன்ன ஒரு கேள்வி என்றால் வெறும் படிப்பாளிக்ள் இந்த நாட்டுக்கு தேவையா? அப்படி வெறும் படிப்பாளிகளை உருவாக்க இவங்க பள்ளிக்கூடம் நடத்துறாங்களா இல்லை தொழிற்சாலையா நடத்துறாங்களா......

மீண்டும் சொல்லுகிறோம் சமூகத்திற்கு நல்ல படிப்பாளிகளை அல்லாமல் படைப்பாளிகளை உருவாக்கிய ஆசிரியர்கள் இருந்ததால் தான் இந்த தேசம் இன்னும் இருக்கிறது...

நாம் விரும்புவது ஆரோக்கியமான தேசத்தை நல்ல எதிர்காலத்தை கட்டமைக்கிற ஆசிரியர்களைத்தான் .....

ஒவ்வொரு  நாளும் கிடைக்கும் படிப்பினைகளில்  நீங்களும்  எமக்கு ஆசிரியர்களே..

எம்மை வளர்த்தெடுக்க .
உழைக்கும் நீங்களும் எமக்கு ஆசிரியர்களே!
உங்களுக்கு 
எம் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்








பெண்குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வெளிச்சம் மாணவர்கள்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக  நாம் பல முயற்ச்சிகளை மேற்கொண்டோம்…(எடுத்துகாட்டு)… மேலும் கோவை மாநகரம் மற்றும் தமிழக மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்குள் கடந்த ஆண்டில் மட்டும் 26 பெண் குழந்தைகள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளனர். இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் மறக்காத சம்பவம் கோவையில் கொள்ளப்பட்ட அக்கா, தம்பி

கடத்தல், கற்பழிப்பு, பாலியல் சித்ரவதை வன்முறைகள் பெண்கள் மீது மட்டுமின்றி, ஏதுமறியா பெண் குழந்தைகள் மீதும் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான சம்பவங்கள் பெற்றோராலும், உறவினர்களாலும் மறைக்கப்படுகின்றன. வெளியில் தெரிந்தால் அவமானம் நேரிடும் எனக்கருதி சம்பவத்தை மூடி மறைப்பதால், சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர். பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகளுக்கு கொடூர மரணம் நேரிடும்போது மட்டுமே வெளிச்சத்துக்கு வருகின்றன. கடந்த ஆண்டில், கோவை நகரில் பள்ளிக்குச் செல்லவிருந்த 11 வயது பெண் குழந்தையும், உடன் 9 வயதான தம்பியும் கால் டாக்சி டிரைவரால் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு பின் கொடூரமாக கொல்லப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இத்துயர சம்பவத்தில் தொடர்புடைய கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், போலீஸ் "என்கவுன்டரில்' சுட்டுக்கொல்லப்பட்டான். இச்சம்பவத்துக்கு பிறகாவது, குழந்தைகளை பாலியல் சித்ரவதை செய்யும் நபர்கள் மத்தியில் அச்சம் ஏற்படுமென போலீசாரும், பொதுமக்களும் கருதினர். ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் கோவை மாநகராட்சி பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமி, தனது மாமாவால் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு பின் கொலை செய்யப்பட்டாள்.

இதுபோன்ற சம்பவங்கள் பெண் குழந்தைகளின் பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. உண்மையில், மேற்கண்ட சம்பவங்கள் கொலையில் முடிந்ததால்தான் விஷயம் வெளியுலகுக்கு தெரியவந்தது. வெளியுலகுக்கு தெரியாமலும் பல சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.கடந்த ஆண்டில், கோவை மாநகரில் 4 பெண் குழந்தைகள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகினர். ஈவு இரக்கமின்றி குழந்தைகளின் மீது பாலியல் வக்கிரத்தை காட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் உள்ளது. அதே போன்று, தமிழக மேற்கு மண்டலத்தில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக மொத்தம் 26 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில் கோவை மாவட்டத்தில் 2, ஈரோட்டில் 5, நீலகிரியில் 1, திருப்பூரில் 5, சேலத்தில் 2, நாமக்கல்லில் 3, தர்மபுரியில் 1 முறையே பெண் குழந்தைகள் பாலியல் சித்வதைக்கு உள்ளாகினர். தவிர, குழந்தைகள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 3 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு, தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி ஆகியோர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து வக்கீலும், கோவை பாரதியார் பல்கலை செனட் உறுப்பினருமான சண்முகம் கூறியதாவது:                     
சிவணான்டி ஐ.பி.எஸ் 
                                 பனிரெண்டு வயதுக்கு உட்பட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பெரும்பாலும் அறிமுகமான நபர்களாலேயே நடக்கின்றன; அறிமுகமில்லா நபர்களுடன் பெண் குழந்தைகள் செல்வதில்லை. கோவையில் பள்ளிக்குழந்தைகள் இருவர் காரில் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம், நன்கு அறிமுகமான டாக்சி டிரைவரால் நடந்தது. சவுரிபாளையத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர், அந்த சிறுமியின் மாமா முறை உறவினர்.ஏற்கனவே, தங்களுக்கு அறிமுகம் உள்ளதால் பெண் குழந்தைகள் தங்களுக்கு நேரிடப்போகும் ஆபத்தை உணராமல் உடன் சென்றுவிடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க பெண் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். "சாக்லெட் வாங்கித்தருகிறேன், விளையாட்டு பொருள் வாங்கித்தருகிறேன் என யாராவது அழைத்தால் உடன் செல்லக்கூடாது' என, அறிவுறுத்த வேண்டும். கூடுமானவரை பெண் குழந்தைகளை வீட்டில் தனியே விட்டுச் செல்வது; உறவினர் வீடுகளில் விட்டுச் செல்வது, போன்ற செயலை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், தங்களை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோரும் சொல்லித்தர வேண்டும். பாலியல் வன்முறைகளை போலீசாரால் தடுப்பதற்கான வாய்ப்பு மிக, மிக குறைவு; ஆனால், பெற்றோரும், குழந்தைகளும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தவிர்க்க முடியும். இவ்வாறு, வக்கீல் சண்முகம் தெரிவித்தார்.

நன்றி: தினமலர்

வெளிச்சம் வெளிக்கொண்டு வந்த மாணவி பிரச்சனை ஓர் இணைய தளத்தில்: http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=2270


மகளீர் தின  விழாவில்  "செக்ஸ் டார்ச்சர்க்கு '  ஆளான பெண்ணை காப்பாற்றிய வெளிச்சம்

3வது மனைவிக்கு "செக்ஸ் டார்ச்சர்': தலைமை ஆசிரியர் போலீசார் கைது

புனிதாவிற்கு ஏற்ப்பட்ட கொடுமையை பிறகு பதிவு செய்கிறோம்.. அதற்கு முன்பாக தினமலர் செய்தியை படியுங்கள்  


கொளத்தூர் : மூன்றாவது மனைவிக்கு "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.சென்னை கொளத்தூர் முத்தமிழ் நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகன் வரதராஜன்(49). இவர், திருவொற்றியூரில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். உடல் நலம் பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இதையடுத்து வரதராஜன், சேலத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி(35) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இரண்டே மாதங்களில் விஜயலட்சுமி விவாகரத்து பெற்று பிரிந்தார்.அதன்பின், வரதராஜன் மகன், மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடலூரைச் சேர்ந்த புனிதா(45) என்பவர் தனக்கு மணமகன் தேவை என பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்திருந்தார். அதைக் கண்ட வரதராஜன், அவரை தொடர்பு கொண்டார். அவர் சென்னை தி.நகரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வரதராஜன், கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் புனிதாவை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தனது குரூர விருப்பப்படி, புனிதாவுக்கு "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்தார். அவரை சந்தேகித்தார். பல நாள் இப்பிரச்னையை அவர் தாங்கிக் கொண்டார். நேற்று முன் தினம் வழக்கம் போல் அவர் "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்தார்.மேலும், புனிதாவை கண்மூடித்தனமாக தாக்கி, அறையில் தள்ளி கதவை பூட்டிவிட்டு, வெளியில் சென்று விட்டார். அறைக்குள் தவித்த புனிதா, மொபைல் போன் உதவியுடன் சென்னையில் உள்ள "வெளிச்சம்' என்ற பெண்கள் அமைப்பிற்கு தகவல் கொடுத்தார். அந்த அமைப்பினர் கொளத்தூருக்கு சென்று, புனிதாவை மீட்டனர். அவர்கள் உதவியுடன், புனிதா தனது கணவர் பற்றி, கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அவரைக் கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். 

நன்றி: தினமலர்





சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்

ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…