இளைஞனின் வாழ்வில் வெற்றிக்கு வித்திடுபவர்கள் நண்பர்களா? பெற்றோர்களா?

Posted by Unknown - -

மாக்கோலமல்ல... கனவு  

  வழக்கமாக மக்களோடு மாணவர்களோடு பேசி அதில் பெற்றுக்கொண்ட  அனுபவங்கள் பலருக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்களோடு எங்கள் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வதுண்டு..  இது அப்படிப்பட்ட நிகழ்வல்ல..

தஞ்சாவூர் பான் சேக்கர்ஸ் பெண்கள் அறிவியல் கல்லூரியில் இருந்து நம்மை தங்கள் கல்லூரியில் நடைபெற இருக்கும் இளைஞர் விழாவிற்கு வரும்படி  அழைக்க நாம் ஒத்துக்கொண்டோம்..
                  
     நமது சென்னை - தஞ்சை பயணத்தில் பாபநாசத்தில் நடந்த பேருந்துக்கடியில் சிக்கி மோட்டார்சைக்கிள்காரர் இறந்து போன விபத்தினை  கண்டு அங்கிருந்து நம்மால் போக முடியாமல் சிரமப்பட்டு பாதியில் நிற்க, அதனால் கல்லூரி விடுதிக்கு போக காலதாமதமானதால் பதட்டத்தோடு தொடர்ந்து விடுதி நிர்வாகத்தினர் நம்மை அழைத்தபடியே இருந்தார்கள்
உரையாற்றிய போது
                  நமக்கு முன்னதாகவே நிகழ்ச்சி தொடங்க  கேட்டுகொண்டோம்… அதன்படி நான் காணும் நாளைய இந்தியா என்கிற தலைப்பில் நடந்து முடிந்திருந்த கோலப்போட்டியில் மாணவிகள் வரைந்த அழகான கோலங்கள் நம்மை வரவேற்றன… என்ன அழகு? கோலங்களில் புரட்சி செய்ய முடியும் என்ற எண்ணங்களை வெளிப்படுத்த முடியும் என காண்பித்திருந்தனர்..  நாம் உள்ளே நுழைந்தோம் எல்லா கல்லூரி மாணவிகளை போல பயங்கர அலும்பல் பார்டிகளாக " ஓ" போட்டார்கள் உள்ளே நுழைந்தோம்
         
    உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சி காத்திருந்தது நமக்கு வெளிச்சம் மாணவர்கள் மட்டும் தான் சிறப்பு அழைப்பாளர்கள் என்றதும்.. வெளிச்சம் செரின் அவர்களை தவிர எல்லோரும் மாணவர்கள் என்பதால்  நமக்குள்ளும் படபடப்புவரவேற்புரை, பாடல்கள், பேச்சுப்போட்டி, ஊமை நாடகம் என  நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தது.
பட்டிமன்ற நடுவராக  

இன்றைய இளைய தலைமுறையினரின் வெற்றிக்கு வித்திடுபவர்கள் நண்பர்களா? பெற்றோர்களா? என்கிற பட்டிமன்றத்தின் நடுவராக  வெளிச்சம் செரின் அவர்களை திடீரென அறிவித்தார்கள்.. மேடைகளில் மட்டுமே பேசிய வெளிச்சம்  நிறுவனரை  முதல் முறையாக பட்டிமன்ற நடுவராக அறிவிக்கையில்   தீர்ப்பு தப்பா ஆகிவிட்டால்,
நாட்டாமை தீர்ப்பை மாத்துன்னு சொல்லுவாங்களே என பதட்டப்பட்டோம்..

 நண்பர்கள் தரப்பில் 
விழாவில் வெளிச்சம்
         எல்லோர் வாழ்விலும் நட்பு இருக்கும்  மனசுக்குள் இருக்கிற வேதனையை பெத்தவங்களை தாண்டி ஒருத்தங்ககிட்ட சொன்னா அதுதான் நட்பு. அதுமட்டுமில்லாம பெத்தவங்க  பெற்றதுக்காக பாசமாக இருக்கலாம்   ஆனால் எந்த உறவுமே இல்லாம உசுரையே கொடுக்குறானே அவன் தான் நண்பன். அதுமட்டுமில்லாமல் இங்கே இருக்கிறவங்கள்கிட்ட காசு இல்லாமல் தவிச்சி ஹாஸ்டல்ல இருந்து   அப்பா அம்மாகிட்ட வீட்டுக்கு போன் போட்டு  பணமில்லம்மாண்ணு சொல்லும்போது உன் பிரண்டுக்கிட்ட இருந்தா  வாங்கி கட்டும்மா நான் அடுத்த வாரம் அனுப்புறேன்னு சொல்லுறாங்களே அது தான் பிரண்ட்சிப்பு என சொல்லும்போது கரகோசம் மட்டுமில்லாமல் விசில் சத்தங்கள் நம் காதை பிளந்தன.  தொடர்ந்த மாணவிகள்  தோழா!   தோழா! தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கிறேன் எனும் பாடல் தொடங்கி முதல் மூழ்காத சிப்பே பிரண்சிப் தான் .. என பல பாடல்களால் எல்லார் வாழ்க்கையிலயும் காதலில்லாமல் இருப்பாங்க ஆனால் நட்பு இல்லாமல் இருப்பதில்லை.. எனக்கு ஒன்னுண்ணா எங்கம்மா அப்பாவை தாண்டி ஒருத்தன் முதல்ல துடிக்கின்றான்ணா அவன் தான் நண்பன்.. ஒருத்தருக்கு அவசரமா ரத்தம் வேணும்ணா அம்மா அப்பாவுக்கிட்ட சொன்னா ரத்தம் கொடுத்தா உடம்புக்கு என்னாகிடும்னு தடுப்பாங்க!  ஆனா நண்பர்களுக்கு சொல்லி பாருங்க வந்து நிற்பார்கள்.. நண்பன்னா தோள் மட்டுமில்ல உசுரையே கொடுப்பாங்க.. உன் நண்பனை பற்றி சொல் நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்தான் சொல்லுறாங்க ஆனா பெற்றோரை சொல்லுன்னு சொல்லை ஏன்னா  அவன் என் நண்பேன்டா! என திரைவசனம் சொல்லி எதிரணியினரை  திகைக்க வைத்தனர்..

பெற்றோர்களே தரப்பில்!
   
கருப்பாக இருந்ததற்கு கலங்கியிருக்கிறேன்
                 என்னம்மா மூழ்காத சிப்பே பிரண்ஸிப்பா எதுல பாட்டில் பார்ட்டிலையா... அவசரத்துக்கு காசு கேட்டா பிரண்டுக்கிட்ட வாங்கிக்க சொல்லுறோம் ஆனால் திருப்பி தரலைன்னா  ஓ பிரண்டு கடன் திருப்பி கொடுக்கிற வரைக்கும் மனசுக்குள்ள வலிக்கும் ஆனால் கொட்டிகொட்டி கொடுத்தும் எம்புள்ல படிக்குதுண்ணு ஊரெல்லாம் சொல்லுறாங்களே அவங்கதான்  பெத்தவங்க.. குரூப் ஸ்டடிண்ணு  நீங்க அடிக்கிற கும்மாலம் கூடாதுன்னா அம்மா, அப்பா தடுப்பாங்க தான் அதுக்காக அவங்க வில்லன்களா? சொல்லுங்க நடுவர் அவர்களே! என்றார்கள். எதிரணியினரை பார்த்து  நீங்க படிக்க வந்ததுனால தாண்டி பிரண்ட்..  அதுக்கு நாங்க வியர்வை சிந்தி  நாங்க உழைக்கனும் மாப்புள என்றனர்.. உங்களுக்கு மட்டும் தான் பாட்டு இருக்குதா…‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே முதல் ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்ணு எங்களுக்கும் பாடல்கள் இருக்கில்ல என்றனர்.. தீர்ப்பு சொல்லுங்க நடுவரே என  வெளிச்சம் செரின் அவர்களிடம்  ஒப்படைக்கபேச்சை  தொடங்கினார்.. தன்னுடைய பேச்சின் தொடக்கத்தில் வழக்கமான வார்த்தைகளை மாணவர்கள்  பக்கம் வீச அந்த பக்கம் அமைதி.. பெத்தவங்க கண்ணீருல வாழுற நாம  பெத்தவங்களுக்கு உண்மையா இருக்கிறோமாண்ணு யோசிச்சு பாருங்க, உலக வரலாற்றில் இடம் பெற்றவர்களை, நீங்க படிச்சி பாருங்க பெற்றோரை மதிக்காத யாரும் சாதிச்சதில்லைதயவு செய்து யாரையும் ஏமாற்றாதீங்க, யார்கிட்டயும் ஏமாந்திராதீங்க.. என பேசி முடிக்க

தீர்ப்பு சொல்லும் மாணவிகள்

நாட்டாமை தீர்ப்பை சொல்லுங்க என்றார்கள்மாணவர்களை நோக்கி நண்பர்களா என கேட்க ஒரு சிலர் கரங்களை  தூக்கினார்கள். பெற்றவர்களா என  கேட்க கூடுதலாக உயர்த்தினர்.. பெற்றவர்களும்  நண்பர்களும் என சொல்ல  எல்லோரும் கரங்களை உயர்த்தினர்.. சரியான தீர்ப்பை நீங்களே சொல்லிவிட்டீர்கள் என முடித்தார் செரின்..

கருப்பாய் பிறந்த்தற்காக, கல்யாணம் செய்துகொண்டு கல்லூரி படிக்கும் மாணவி என மாணவிகளின் வலிகள் பல கோணங்களில் வெளிப்பட்டது. நான் இனி யாரையும் ஏமாற்ற மாட்டேன்என மாணவிகள் சொல்ல  நிகழ்ச்சி முடிந்தது.. மாணவிகள் எழுதிய கடிதத்தை படிக்கும் போது நமக்கு அவர்களின் வலிகள் புரிந்தது

( கடிதங்களை பிறகு உங்கள் பார்வைக்கு இணைக்கிறோம்..)


 தீர்ப்புகள்  தவறென்றால்    நீங்களும் சொல்லலாம்


 கல்வி உதவி தொகை தரும் மாணவர்கள்


மாணவிகள் நடுவில் 























Leave a Reply