Showing posts with label Sherin. Show all posts

உறவுகளே! இன்று வெளியான நக்கீரன் வார இதழில் வெளியான கட்டுரையில், நேற்று வெளியிடப்பட்ட +2 ரிசல்ட்டில் அதிக மார்க் எடுத்த பிள்ளைகள் சாதனையாளர்களாகவும், மார்க் எடுக்காதவர்கள் உருப்பிட மாட்டார்கள் எனும் மாயை உருவாகியுள்ளது இதை உடைப்பதற்காக பன்னிரெண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் இன்று சாதனையாளர்களாக இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம், நக்கீரன் வார இதழில் விளக்கியுள்ளது.....


இந்த கட்டுரையை  குறைந்த மார்க் வாங்கி திட்டு வாங்கி தூக்கமிழந்த பல்லாயிரங்கணக்கான மாணவ- மாணவியர் வாழ்க்கைக்கு சமர்ப்பிக்கிறோம்...

தவறாமல் படிங்க:

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்..


நீங்களும் மற்றவர்களுக்கு உதவ நினைக்கிறீர்களா?

  இங்கே கிளிக் செய்யுங்கள்: ...........................................................................




நீங்களும் மற்றவர்களுக்கு உதவ நினைக்கிறீர்களா?

  இங்கே கிளிக் செய்யுங்கள்: ...........................................................................

எங்களை போன்ற ஏழை மாணவர்களின் வாழ்க்கையை வெளிச்சமாக்க தன் வாழ்க்கையை தியாகம் செய்தவரான வெளிச்சம் செரீன் அவர்களின் வாழ்க்கையை ராணி இதழில் வெளியான கட்டுரையை படிங்க..


கறுப்பு நிறக் கடவுள்களை கையெடுத்துக்  கும்பிடும் நாட்டில்..கறுப்பாக இருந்ததாலே கறுப்பி, பிளாக்கி என பலவித ஏளன சொற்களால் வேட்டையாடப்பட்டவள் அந்தச் சிறுமி. பள்ளிக்கூடத்திலும், குடும்பத்திலும் புறக்கணிக்கப்பட்டாள்.

இன்று பெரிய மனுசி ஆகி, ‘வெளிச்சம்’ என்ற அமைப்பை தொடங்கி, பலருடைய வாழ்க்கையில் கல்வி விளக்கேற்றி வருகிறார். அவரது பெயர் ஷெரின். ஜீன்ஸ் பேன்ட்- சட்டை சகிதம் இருக்கும் அவரை ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தோம்.

நரகம் 

என் பெற்றோருக்கு பூர்வீகம் நாகர்கோவில். நான் பிறந்து வளர்ந்தது கேரளாவில் உள்ள இடுக்கியில்! அங்கு தமிழர்கள் அதிகம். பள்ளிகள் குறைவு. இருக்கும் ஒன்றிரண்டு பள்ளிக்கூடங்களும் அதிக தொலைவில் இருந்ததால், பெண்கள் படிப்பது சிரமமானதாக இருந்தது.

இதனால், தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள பள்ளியில் எல்.கே.ஜி முதல் 5-ஆம் வகுப்பு வரையும். அதன்பின் 12-ஆம் வகுப்பு வரை மதுரை ராயன்பட்டியில் ஒரு ஆங்கில பள்ளியிலும் படித்தேன் அங்கு நான் மட்டுமே விடுதியில் தங்கினேன். இதனால் ஆதரவற்றவள் என்று நினைத்து சம்பளம் இல்லாத வேலைக்காரியாகவே, என்னை பயன்படுத்தினார்கள். விட்டு வேலைகளையும் செய்ய வைத்தார்கள்.

என் கறுப்புநிற தேகத்தை வைத்து சக மாணவிகள் என்னை கடுமையாக கேலி செய்வார்கள். இதனால் பள்ளி வாழ்க்கை நரகமா இருந்தது.    

அப்பாவுக்கு இடுக்கியில் சொந்தமாக ஏலக்காய் எஸ்டேட் இருந்தது. அவர் என்னிடமோ, அம்மாவிடமோ  அன்பாகவே நடந்து கொள்ள மாட்டார். மதுரையில் தங்கி படித்த போது என்னை பார்க்க எப்போதாவதுதான் வருவார்.

படிப்பு முடிந்தும்  ஒரு வருடம் விடுதியில் வார்டனாக வேலை செய்தேன். பின்னர் மதுரையில் ‘மார்க்கெட்டிங்; நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அப்போது பல ஆண் வாடிக்கையாளர்கள் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தனர்.

மாற்றிய மண்டேலோ வரிகள்
தற்செயலாக ஒரு நாள் கறுப்பர் இனத்தலைவரான நெல்சன் மண்டேலோவின் மேற்கோள் வரி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. ‘ உன்னை நீ சரியாக உணரும்போது, இந்த உலகம் உன் புறத்தோற்றத்தை மறந்துவிடும்’ -  என்ற வரி எனக்காகவே சொல்லப்பட்டதாக  போல் இருந்தது.  எனது மனதை மாற்றியது.

யாராவது என்னிடம் ‘கேரளாவில் பிறந்து, ஏன் இப்படி கறுப்பாக இருக்கிறாய்?’என்று கேட்கும் போது பதில் ஏதும் பேசாமல் தலைகுனிந்து சென்றுவிடுவேன். இந்த வரியை படித்தபிறகு, இதுபோல் கேட்கின்றவர்களிடம், ‘கென்யாவில் இருந்து வருகிறேன்’ என்பேன். ‘ன்யாவில் இவ்வளவு அழகான பெண்கள் இருக்கிறார்களா?’ என்று அதிசயமாக பார்ப்பார்கள்.

திடீரென மார்க்கெட்டிங் வேலையை விட்டுவிட்டு, ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். பணி நிமித்தமாக சேலம் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றேன். அங்கு ஒரு சிறுமி ‘ இந்த பகுதியில் குடிநீருக்காக ஏழைப் பெண்கள் பாலியல் தொல்லையை அனுபவிக்க நேரிடுகிறது. என்ற பயத்துடன் கூறினாள். அதையடுத்து  இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

காதல் மணம்- கைது
2002-இல் எனக்குத் திருமணம் நடந்தது.  அது காதல் மணம். கணவரின் சொந்த ஊரான அரியலூரில் இல்லற வாழ்க்கையை தொடங்கினோம். அப்போது, புதுச்சேரியில் என் கணவர் மீது வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது. அதற்காக, அவரையும், தேவையே இல்லாமல் என்னையும் அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

ஐந்தரை மாதம் சிறையில் வாடினேன், விடுதலைக்கு பின் தங்குவதற்கு  வாடகை வீடுகூட கிடைக்கவில்லை. அதனால் அரியலூருக்கே சென்றோம். கழிவறை, குடிநீர், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமம் அது. அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்தேன்.

அதே ஆண்டில், ஒரு நாள் என் கணவர் மீதான பழைய வழக்கில் நாங்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம். அப்போது, நான் கர்ப்பமாக இருந்தேன். ஆனாலும், போலீசார் இரக்கம் காட்டவில்லை.

கரடு முரடான பயணங்கள்
விடுதலையான பின்னரும் வழக்குத் தொடர்பாக அடிக்கடி சென்னை வர நேர்ந்தது. அப்படி வரும்போதெல்லாம் இரவில் கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களோடு சேர்ந்து தங்கிவிடுவேன்.

அந்த நேரத்தில் பெங்களூரில் செயல்படும் ‘நேசா’ என்ற அமைப்பு. அரியலூர் பகுதியில் செய்த சமூகப் பணிகளுக்காக எனக்கு 3 ஆண்டு கால உதவித் தொகை வழங்க முன்வந்தது.

அதை பயன்படுத்தி இரவுப் பாடசாலை, ஆளுமை பயிற்சி, வாழ்க்கைப் பயிற்சி  எனப் பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கினேன்.

12- ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற செந்தில் என்ற மாணவர் என்னிடம் வந்து, வசதி இல்லாததால் மேல்படிப்பு படிக்க முடியாத நிலையில் இருப்பதாக முறையிட்டார். அவருக்கு உதவிகள் பெற்றுக் கொடுத்தேன். அதன் தாக்கத்தால், பணம் இல்லாத ரணத்திற்காக ஒருவருடைய படிப்பு தடைப்பட க் கூடாது என்று ‘வெளிச்சம்’ என்ற அமைப்பைத் தொடங்கி செயல்படலானேன். அந்த நேரத்தில் உதவியாக இருக்க வேண்டிய குடும்பத்தாரும் தொல்லைகள் தரத் தொடங்கினார்கள். என் மீது சந்தேகம் கொண்டார்கள்.

அந்த காலக்கட்டத்தில் தேசிய அளவிலான இரண்டு தன்னார்வ அமைப்புகளில் முக்கியமான பொறுப்புகள் எனக்கு தரப்பட்டன. குடும்பத்தாருக்கு அது பிடிக்கவில்லை. அதனால் இரண்டு பொறுப்புகளில்  இருந்து விலகினேன்.

ஒருநாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்துவிட்டேன். தங்க இடமில்லாமல் இரவில் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கினேன்.

வெளிச்சம்
எங்கள் உதவியால் படித்த மாணவர் ஒருவர், என் நிலைகுறித்து பத்திரிக்கையில் எழுதினார். அதற்கு பிறகு நிறைய பேரிடம் இருந்து உதவி கிடைத்தது. இதனால் என் சேவை அமைப்பின்  செயல்பாடுகள்  விரிந்தன.
என்னால்  உதவி  பெறுகின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 500-க்கும்  மேற்பட்டவர்கள் வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் என உருவாகி இருக்கிறார்கள்.

தேர்வில் தோல்வியடையும் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்வது அதிகரித்திருப்பதால் ‘ஹெல்ப் லைன்’ அமைத்து, ஆலோசனை வழங்குகிறோம். பல பள்ளி-கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் பேசி விழிப்புணர்வை  ஏற்படுத்தி வருகிறேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

மாறுங்கள்
பெண்களுக்கு  நான் சொல்லிக் கொள்வது இதுதான்…! நம்மை முடக்க நினைக்கின்றவர்கள், பாலியல் ஒழுக்கம் குறித்து கட்டுக்கதைகளைத்தான் கிளப்பிவிடுவார்கள். ராணி மங்கம்மா காலத்தில் இருந்தே இப்படித்தான் நடக்கிறது.

பெண்களின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத மனநோயாளிகள்தான் இப்படிச் செய்தார்கள். அவர்கள் கோழைகளாத்தான் இருப்பார்கள். நாம் அதிரடியாக செயல்பட்டாலே பின்வாங்கிவிடுவார்கள்.

பொதுவாக நான் யார் எப்படிப் பேசினாலும் கவலைப்பட மாட்டேன். அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதே சிறந்தது. திக்கு  தெரியாத இருட்டில் இருந்த நானே பலருக்கும் இன்று ‘வெளிச்சம்’ தருபவளாக மாறி இருக்கும்போது, உங்களால் எவ்வளவு பேருக்கு வெளிச்சத்தை வாரி வழங்க முடியும் பெண்களே…? யோசியுங்கள்...துணிந்தால் தொலைவும் கூட தூரமில்லை”- உணர்ச்சிப் பெருக்குடன் முடிக்கிறார் ஷெரின்.






உறவுகளே! மகளிர் தின வாழ்த்துக்களோடு   முதல்தலைமுறை ஏழை மாணவர்களின் கல்வியின் மீது அக்கறை கொண்டிருக்கும் வெளிச்சம் மாணவர்கள் , பெண்களின் முன்னேற்றத்தில்தான் இச்சமூகம் சீர்படும் என உண்மையாக நம்புகிறோம் ,

 தற்போதைய சூழலில் இந்தியாவில் பெண்கள் தலைமைத்துவத்தை குறித்த தேசிய அளவிளான கருத்தரங்கம் (National Conference on Emerging Trends in Women Leadership in India ) திருச்சி ஹோலிகிராஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் சிறப்பு பேச்சாரளராக வெளிச்சம் செரின் அவர்களை பெண்களின் முன்னேற்றத்தில் சமூக இயக்கங்களின் பங்கு என்கிற தலைப்பில் பேசிட அழைத்திருந்தார்கள்..

500க்கும் மேற்ப்பட்ட மாணவ- மாணாவியர் மத்தியில் பேச வெளிச்சம் செரின் அழைக்கப்பட்டார்..  மேற்க்கண்ட தலைப்பில் பேச அழைத்தமைக்கு பொறுத்தமான ஆள்தான்  அவர்..

(கண்டிப்பாக பெண் முன்னேறத்தை பேசுபர்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை தான் பேச்சின் சாரம்)

மகளீர் தினம் கொண்டாடுவதன் வரலாற்று பின்னனி:

 அமெரிக்கா சிக்காகோவில் உலகத் தொழிலாளர் தினமான மே தினம் பிறந்தது போல உலக மகளிர் தினமும் அமெரிக்காவில் தான் பிறந்தது. படுமோசமான பணி சுமைகளுக்கு ஆளாகிய பெண்கள், குழந்தைகளுக்கு நல்ல பராமரிப்பு தேவை ஆண்களுக்குச் சமமான வேலை உரிமையும், வாக்களிக்க உரிமையும் வேண்டும் என முழங்கிப் பல்லாயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் நியூயார்க் நகரத் தெருக்களில் 1857ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று வலம் வந்து தங்கள் மீதான  சுரண்டலை எதிர்த்து  போராடியதுதான் உழைக்கும் பெண்களின் முதல் போராட்டம். ஆனால் 1910 ஆம் ஆண்டு உலக சோஷலிச பெண்கள் மாநாடு நடைபெற்ற போது உலகப் பெண்களை ஒன்று திரட்டவும்,  உரிமைகளுக்காகப் போராடவும், ஒரு நாள் குறிக்கப்பட வேண்டும்.  அந்நாள் மார்ச் 8 ஆக இருத்தல் வேண்டும் என்று முடிவு செய்து.பிற்காலத்தில் அந்நாளே உலக மகளிர் தினமாக ஏற்கப்பட்டது. நாய்களைவிட மோசமாக  உழைத்தனர் பணியிடங்களில் உழைத்த பெண்கள். குடிசைகளிலும், சதுப்பு நிலங்களிலும் சாலைகளின் ஓரங்களில் உழன்று பணி செய்தும் உறங்கியும் குடும்பம் நடத்தியும் வாழ்ந்தனர். இதே 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் ஜெர்மனியில் சாக்சனியில் கிளாரா ஜெட்கின் பிறந்தார். தொழிலாளி வர்க்க மக்களிடைக் கல்விப் பணி செய்த முதல் ஜெர்மனியப் பெண்மணி இவரே. 

பிரடெரிக் ஏங்கெல்சின் நெருங்கிய, நம்பிக்கைக்குரிய நண்பராகவும். ஆர்வம், துணிச்சல், அர்ப்பணிப்பு மனப்பான்மை மிக்கவராகவும், சிறந்த மார்க்சிய பெண்ணியவாதியாக  அனைவராலும் பாராட்டப் பெற்றவர், சர்வதேச சோஷலிஸ்ட் மகளிர் இயக்கத்தில் சேர்ந்து அந்த மாநாட்டில் நியூயார்க் மகளிர் எழுச்சி நினைவாக மார்ச் 8 உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை எதிர்ப்பின்றி இயக்கத்தில் 5 இலட்சம் உறுப்பினர்கள் முன்னிலையில்  ஏகமனதாக கொண்டு வந்து.. ஈடிணையற்ற மாதர் தலைவியாக விளங்கியிருக்கிறார். 

1893 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் முதன் முதலில் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பும், முதலாம் உலகப் போருக்குப் பிறகுதான் பெண்களுக்குத் தேர்தலில் வாக்களிக்க உரிமையும் வழங்கவும், பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவைகள் தான் கிளாரா ஜெட்கின் கண்ட இயக்கத்தின் பலன்கள்.

பெண், மனைவியாகவோ, தாயாகவோ பிறரைச் சார்ந்து வாழ்க்கை நடத்துபவள் என்னும் இழி நிலைமை மாறவேண்டும் என்றார் கிளாரா. ஆண்களுக்குச் சரிநிகராக வேலை செய்து கூலிபெறும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தனித்து நின்று எல்லா வழிகளிலும் சிறப்பாக வாழ வேண்டும் என்றார், பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற்று யாரையும் சாராது தனித்து நின்று வாழ முடியும்  பொருளாதார நிலை உறுதியாக அமைய வேண்டுமென்றார். எந்தக் காரணத்தைக் கொண்டும் மேல்தட்டு பெண்களுடன் அவரது இயக்கம் தொடர்பு கொள்ளாது கிளாரா  அவர்களின் கருத்து. குழந்தை வளர்ப்பும், குடும்பப் பராமரிப்பும் சமுதாயக் கடமைகளாக ஆக்கப்படவேண்டும். தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு ஆள்பட்டவையாக இருக்ககூடாது எனவும். அவர் காலத்திலேயே அவரோடு சேர்ந்து பணியாற்றியவர்கள் பெண்கள் உழைப்பில் ஈடுபட்டால் ஆண் தொழிலாளர்கள் உரிமைகளும், ஊதியமும் பறிக்கப்படும் அல்லது பாதிக்கப்படும் என்று இவரோடு வாதாடினார்கள் அதில் வென்றார் ஜெட்கின்.   லெனின் நினைவுக்குறிப்புகள்என்னும் தம் நூலில் ஜெட்கின் லெனினைச் சந்தித்த போது அவர், “கலை மக்களுக்குச் சொந்தமானது என்கிறார் கிளாரா. அதன்பின்  ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஜெர்மனியில் பாசிசம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. உழைப்பாளி வர்க்கம் கொடிய அடக்குமுறைக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என்று எச்சரித்த கிளாரா ஜெட்கின், எச்சரித்த சில நாட்களிலேயே 1933 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20 ஆம் நாளன்று மாஸ்கோவில் காலமானார். கிளாரா ஜெட்கின் நினைவாக உலக மகளிர் தினம் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மே தினம் தொழிலாளர்களுக்கு எவ்வாறு புனிதமானதோ அவ்வாறு மார்ச் 8 மாதர்களுக்குப் புனித நாள். வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்.

இந்திய சூழலில் பெண்கள் :

 பெண்கள் ஒரு உயிரினமாக மதிக்காத சமூகம்  இந்திய சமூகம், படிப்பதற்க்கு, பிடிப்பவரை திருமனம் செய்துகொள்வதற்கு, என  வரிசையாக பெண்ணுரிமைகள் இன்று இருப்பதற்க்கு எத்தனையோ பெண்கள் தியாகம் செய்தார்கள் என்பதுஎத்தனை பேருக்கு தெரியும் என்றார்.. பெண்கள் ஜாக்கெட் போடகூடாதுன்னு சட்டமிருந்ததும், மார்புக்கு வரிக்கட்டியதை எதிர்த்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தனது  மார்பை அறுத்து வீசிய  பெண்கள் வாழ்ந்த மண் இது.. ஆனால் இப்படி பெற்ற உரிமை எப்படி இருக்கிறது.... என தனது வழக்கமான பாதைக்கு திரும்பினார் செரின்..

பெண்களின் இன்றைய நிலை:

மார்புக்கு  வரிக்கட்டனும் என்பதை எதிர்த்து  மார்பை அறுத்து வீசிய  பெண்கள் வாழ்ந்த பூமியில ஜன்னல் வச்ச ஜாக்கெட், முதுகு முழுக்க தெரியுர மாதிரி ஜாக்கெட்டு, என்ன இதுவா முன்னேற்றம், இப்படி போனாம் ஆம்பலைங்கள் என்ன பண்ணமாட்டாங்க, நாம எல்லாத்தையும் தெரியுர மாதிரி உடை போட்டா  அவங்க பார்பாங்கதான் பார்த்தா, பார்த்துட்டு போன்னு விட்டுட்டு வேலையை பாருங்க, கொடுத்துட்டா போடான்னூட்டு போ! எப்ப மாடர்னா மாறனும்னு முடிவு பண்ணிட்டியோ, மனசையும் மாடர்னா மாத்திக்கோ, நீ படிக்க வந்திருக்கீங்க, பெத்தவங்க கண்ணீருல காலேஜிக்கு வந்திருக்கீங்க... நீ தப்பு பண்ணி பாலாய் போன்னா உனக்கு பின்னாடி வர்ற பெம்பளை பிள்லைகளுக்கு யார் வழிகாட்டுவா !  ஜன்னல் வைச்ச ஜாக்கெட் நம்மளை காப்பாது, நாம் தான் நம்மை காப்பாத்திக்கனும், அழகு உன்னை வளர்க்காது அறிவுதான் உன்னை வளர்க்கும், அறிவை நம்புங்கள் என சொல்லும் போது கூட்டம் அமைதியாக கவனித்து, இதவிடுங்க  உழைக்கும்  பெண்கள் போராடி வாங்குன  தினமாக இன்னைக்கு எப்படியிருக்கு  பான்ஸ் மகளீர் தினம், பேரன் லவ் லி பெண்கள் தினம், இன்னும் இருக்கு என சொல்ல பயங்கர கைதட்டல், மேலும் பெண்களே தைரியம் வேண்டும், திமிர் வேண்டாம் என மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் வெளிச்சம் மாணவிகள் மகளீர் தினத்திற்கு  நாங்கள் ஒரு உறுதி மொழி எடுக்க போறோம் என  சொன்னாங்க...  ஏன்னு கேட்ட்துக்கு எல்லாம் எங்கம்மா எங்கப்பாவை பண்ணுற டார்ச்சர் தான் என்றார்கள்.. ஆக ஆணுக்கு சம்ம் பெண் என்பது ஆண் சிகரெட் அடிச்சா நானும் சிகரெட் அடிப்பேன் நீயென்ன செய்வேன்னு சொல்லுறதில் இல்லை.. தைரியமாக, அறிவாளியாக, யாரையும் ஏமாற்றாமல், யாரிடமும் ஏமாராமல்,   நாளு பேருக்கு நல்லது பண்ணி அதில் கிடைக்கிற சந்தோசத்துல வாழ்ந்தால் பெண்கள் தலைமை பெற்றவர்களாக விளங்குவார்கள் என்றார் இறுதியாக.....





Women need to enter politics in large numbers to clean the system, asserted speakers at the national conference on ‘Emerging trends in women leadership in India' jointly organised by the Women Studies Centres of Holy Cross and Cauvery College for Women on March 1-2011
 நன்றி: தி இந்து



சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்

ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…
பதிவு செய்ய: