Archive for June 2012


பள்ளிப்படிப்பு  கடினமாக இருக்கக் கூடாது. புரிந்து படிக்க வேண்டும். கற்பிக்கும் முறையில் இது போன்ற எளிமையை கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய, கடந்த 1986ம் ஆண்டு பேராசிரியர் யஷ்பால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப �சுமையற்ற கற்றல்� முறை ஏற்கப்பட்டது. இதையொட்டி தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டது.
அதற்கு பிறகு 2005ம் ஆண்டு தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு வெளியிடப்பட்டது. மேலும் தரமான கல்விக்காக பல்வேறு கல்விக் குழுக்கள் படிப்படியாக அமைக்கப்பட்டன. இவற்றின் வழிகாட்டுதல்கள், பரிந்துரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்போது �தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை�(சிசிஇ) தமிழக பள்ளிகளில் நுழைந்துள்ளது. மனப்பாடம் செய்யும் முறை மெல்ல மெல்ல மறைந்து மாணவர்கள் தாங்களே பகுத்தாய்வு செய்து கொள்ள தயாராகி வருகின்றனர்.
ஒவ்வொரு குழந்தையின் உள்ளார்ந்த ஆற்றலை வெளியில் கொண்டு வருவது, அவர்களை முழுமையான ஆளுமை உள்ளவர்களாக மாற்றுவது ஆகியவற்றுக்கு இந்த மதிப்பீட்டு முறை துணையாக இருக்கும். இந்த ஆண்டில் (2012&2013) 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இந்த முறை அமலாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் மன அழுத்தம் இதனால் குறையும். தேர்வு பயம் நீங்கும். தொடர் மதிப்பீட்டு முறையில், கல்வி சார்ந்த மற்றும் அதனுடன் இணைந்த செயல்பாடுகள் அனைத்தும் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஏ1 முதல் இ1 வரை

ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்களின் கற்றல் அனுபவம், தரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தரப்புள்ளிகள்( கிரேடு) வழங்கப்படும். இதன்படி 91&100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு �ஏ1� கிரேடு வழங்கப்படும். தரப்புள்ளியாக �10�புள்ளிகள் வழங்கப்படும். இறுதியாக 21&32 மதிப்பெண்கள் எடுப்போர் �இ1� கிரேடு பெறுவார்கள். தரப்புள்ளிகள் இதற்கு கிடையாது. தரப்புள்ளிகள் பெறாதவர்கள் கற்றலில் மேம்பாடு அடையவில்லை என்று எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அதவாது அவர் தேறாதவர் என்று கருதப்படுவார்.
இந்த கிரேடு வழங்கும் முறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே சிபிஎஸ்இ பள்ளிகளில் கொண்டு வரப்பட்டது. முதலில் 1 முதல் 9ம் வகுப்பு வரை கொண்டு வரப்பட்டது. பிறகு உயர் வகுப்புகளுக்கும் இந்த முறை கொண்டு வரப்பட்டது. இது மாணவர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது தமிழக மாநில கல்வி முறையிலும் இது கொண்டு வரப்பட்டிருக்கிறது.
மாணவர்களுக்கு மகிழ்ச்சி
நான்கு கல்வி முறைகளை கலைக்கப்பட்டு சமச்சீரான கல்வி முறையில் இப்போது மாணவர்கள் பயணிக்க தொடங்கிவிட்டனர். அதற்கான பாடங்கள் அனைத்தும் தரமாக மாற்றப்பட்டுள்ளன. ஏற்கெனவே இருந்த கருப்பு வெள்ளை பாடப்புத்தகம் ஒழிந்தது. இப்போது எல்லாமே கலர்தான். பாடங்களில் முக்கிய வரிகள் கலரில் இடம் பெற்றுள்ளன. அது தொடர்பான விளக்கப் படங்கள் உள்ளது உள்ளதுபோல அப்படியே போட்டோவாக கொடுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள படங்கள் மாணவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளன. செல்கள், பாக்டீரியாக்கள், நோய்களை உருவாக்கும் நுண்ணிய கிருமிகள் ஆகியவை பல வண்ணங்களில் பெரிய அளவில் அச்சிடப்பட்டுள்ளன. இதை புத்தகத்தில் பார்க்கும் மாணவர்கள் நுண்ணோக்கியை தேடி ஓட வேண்டிய அவசியம் இருக்காது.  அதைவிட இனிப்பான விஷயம் என்னவென்றால், ஒரு கல்வி ஆண்டு, மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப பாடப்புத்தகங்களும் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களில் ஒரு பருவத்தின் அனைத்து பாடங்களும் அடக்கமாகிவிட்டன. இதனால் புத்தகச் சுமையும் இப்போது குறைந்துள்ளது. இப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்களுக்கும் வரவேற்பு உள்ளது.
படிப்பு திறன் அதிகரிப்பு
தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி மாணவர்களின் புத்தகச் சுமை அவர்களின் எடையில் 10 முதல் 15 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. இதை கருத்தில் கொண்டு இந்த கல்வி ஆண்டில் 1&5 வகுப்புகளுக்கு ஒரே புத்தகமாகவும், 6&8 வகுப்புகளுக்கு இரண்டு புத்தகமாக அதாவது தமிழ், ஆங்கிலம் அடங்கியது ஒரு புத்தகமாகவும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகியவை சேர்த்து ஒரு புத்தகமாகவும் அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உடல் ரீதியான உபாதைகளான தசை மற்றும் எலும்பு சார்ந்த நோய்களில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்கள்.
அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கணினி வசதிகள், ஸ்மார்ட் கிளாஸ், ஆங்கில மொழி லேப், கணக்கு லேப், உள்ளிட்ட வசதிகள் அரசுப் பள்ளிகளில் வந்துள்ளதால் மாணவர்களே ஆர்வமாக படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல தனியார் பள்ளிகளிலும் கட்டணம், அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து அரசு தரப்பில் கவனம் செலுத்துவதால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் திறமையாக கல்வி கற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் வீடியோ மற்றும் கான்பரன்சிங் மூலம் பாடங்களை படிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுவும் மாணவர்களின் கற்கும் திறனை அதிகரித்துள்ளது.   இவை தவிர கல்வியில் பின் தங்கிய ஒன்றியங்கள் 44ல் அரசு தரப்பில் 44 மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு அதில் ஆங்கில வழிக் கல்வியும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த பள்ளிகள் தொடங்கிய உடனே அத்தனையிலும் மாணவர்கள் சேர்ந்துவிட்டனர். அதனால் மேலும் மாதிரிப் பள்ளிகள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதலாக மாதிரிப் பள்ளிகளை திறக்க மத்திய அரசும் அனுமதி அளித்ததுடன் இந்த ஆண்டு மட்டும் அதற்காக  ஸி135 கோடி வரை நிதி ஒதுக்கியுள்ளது. இதனால் கிராம மாணவர்கள் ஆங்கிலம் கற்று வருகின்றனர் என்பதே மாணவர்களின் திறமைக்கு சான்றாக உள்ளது. 
 தமிழகத்தை பாருங்க! சொல்கிறார் கபில்சிபல்
டெல்லியில் கடந்த மாதம் 29 மற்றும் 30ம் தேதிகளில் இந்தியாவில் அனைவருக்கும் கல்வி தொடர்பாக கருத்தரங்கு நடந்தது. அதில் ஆசிரியர்கள் கல்வி கற்பித்தல் தொடர்பான கொள்கைகளை வகுத்தல் குறித்து பல்வேறு கருத்தாளர்கள் பேசினர். அதில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டார். அவர் அந்த கருத்தரங்கில்பேசும் போது, தமிழகத்தில் தற்போது அறிமுகம் செய்துள்ள சமச்சீர் கல்வி முறை சிறப்பாக உள்ளது என்று குறிப்பிட்டு, தமிழகத்தை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இது தவிர முன்னாள் என்சிஇஆர்டி இயக்குநர் குப்தா, தமிழகத்தில் தற்போதுள்ள சமச்சீர் கல்விக்கான அனைத்து பாடப்புத்தகங்களையும் படித்து ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில் தமிழகத்தின் பாடப்புத்தகங்கள் அனைத்தும் பிரமாதம் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 10ம் வகுப்பு கணக்கு பாடங்களை மிகவும் புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும், இந்த பாடங்களை படிக்கின்ற தமிழக மாணவர்களின் திறமை மற்ற மாநிலத்தைவிட நன்றாக உள்ளதாவும் தெரிவித்துள்ளார். இதுவே நமது தமிழக கல்வி முறைக்கும், மாணவர்களின் திறமைக்கும் சான்றாக எடுத்துக் கொள்ளலாம்
-வே.புகழேந்தி
நன்றி: தினகரன்.17.6.12


” நெடு நாள் திரு முருகா



நித்தம் நித்தம்
இந்தெழவா?
இந்த வாத்தியாரு சாவாரா?
என் வயித்தெரிச்சல் தீராதா?”

என்ற ஒரு பழைய பாடலை எங்கள் தமிழாசிரியர் திருஞானம் அய்யா அவர்கள் அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறோம்.

அவர் மாணவராயிருந்த காலத்தில் அதிக நெருக்கடி கொடுக்கும் ஆசிரியர்களைப் பார்த்து மாணவர்கள் இப்படித்தான் பாடுவார்கள் என்றும், மிக நீண்ட செய்யுளை மனப்பாடம் செய்து வரச் சொல்லும் தன்னைப் பார்த்தும் அநேகமாக நாங்களும் இப்படித்தான் பாடுவோம் என்றும் சிரித்துக் கொண்டே சொல்வார்.

“எனக்கு சாவைத் தரச் சொல்லி முருகனிடம் இறைஞ்சினாலும் சரி, பாடலை மட்டும் அவசியம் மனப்பாடம் செய்துவிட்டு வாருங்கள்” என்று எங்களிடம் கறப்பதில் கறாராக இருப்பார்.

ஆக, படிக்கச் சொல்லியோ, அல்லது ஒழுக்க நெறி முறைகளில் அதிக நெருக்கடி கொடுக்கிறவராகவோ இருக்கும் ஆசிரியரை ஏதாவது செய் என்று இறைவனிடம் இறைஞ்சுகிற மாதிரி அமைந்துள்ள இந்தப் பாடலுக்கு வயது எப்படியும் ஓரிரு நூற்றாண்டுகள் இருக்கும்.

எந்தத் தன்னடக்கமும் இல்லாமல் எந்த இடத்திலும் என்னால் ஆகச் சிறந்த ஆசிரியர்களுள் என் தந்தையும் ஒருவர் என்பதை உரத்தக் குரலில் சொல்ல முடியும்.எங்கள் கிராமமான கடவூரில் இன்று இத்தனை பேர் நன்கு படித்து வளமாக இருக்கிறோம் எனில் அதில் அவரது பங்களிப்பும் நிச்சயம் இருக்கிறது. சினிமாவில் பார்ப்பது போல் எங்களூரைச் சுற்றிஎட்டுப் பட்டிகள் உள்ளன. இந்த எட்டுப் பட்டிகளிலும் பணி ஓய்வு பெற்ற இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அவர் எட்டாம் வகுப்பு ஆசிரியர் என்றே அறியப் பட்டும் அழைக்கப் பட்டும் வருகிறார்.

இன்னமும் எங்கள் வீட்டுக்கு “எட்டாம் வகுப்பு சார் வீடு” என்பதுதான் அடையாளம்.

இப்படி இன்றளவும் நாங்களே கூச்சப் படுகிற அளவுக்குக் கொண்டாடப் படுகிற என் அப்பா சாக வேண்டும் என்று அவரது மாணவர் ஒருவர் எங்கள் ஊரில் உள்ள கருணைகிரிப் பெருமாள் கோவிலில் தேங்காய் உடைத்து மனமுருகி வேண்டியிருக்கிறார். அப்படி வேண்டிக் கொண்ட கருப்பசாமி அண்ணன் இன்றைக்கும் எங்கள் ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கிறார்.

இது நடந்த போது நான் பிறந்திருக்கவே இல்லை என்று அப்பா அடிக்கடி சொல்வார். எனில் இது நடந்து குறைந்த பட்சம் ஐம்பது ஆண்டுகளாவது கடந்திருக்கும்.

ஆசிரியர் மாணவர் உறவு என்பது எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறது. கடுமையாக நெருக்கடி கொடுக்கும் ஆசிரியர் செத்துத் தொலைத்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் எனில் அப்படியே ஆகட்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் மனப்பான்மை புதிதல்லதான்.

என்ன, அப்போதெல்லாம் வாதியாரு சாக வேண்டும் என்று வேண்டி விட்டோமே என்று அந்த மாணாவர் வருத்தப் படும் போது “விடுப்பா நான் என்ன அதனால செத்தா போயிட்டேன் “ என்று ஆற்றுப் படுத்த அந்த ஆசிரியரும் இருந்திருப்பார்.

இன்று ஆயிரம்தான் இர்ஃபான் வருத்தப் பட்டாலும், அழுது புரண்டு அரற்றினாலும் அவனை அள்ளி அணைத்து ஆற்றுப் படுத்த அவனது ஆசிரியை உமா உயிரோடு இல்லை என்பதுதான் வித்தியாசம்.

என்ன நடந்தது? எப்படி நடந்தது? என்பது குறித்து கூட தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. அவர் ஒரு அறிவியல் ஆசிரியரா? இல்லை இந்தி ஆசிரியரா? என்பதற்கும் நம்மிடம் தெளிவான பதில் எதுவும் நம்மிடம் இல்லை. அவர் அறிவியலில் Phd முடித்தவர் என்று சொல்கிறார்கள். அது உண்மை எனில் அவர் ஏன் இந்தி வகுப்பெடுக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே துருத்துகிறது.

உணர்ச்சி வசப்படுவதோ, அவசரப் படுவதோ அறவே தவிர்க்கப் பட வேண்டும். ஏற்கனவே நார் நாராய்க் கிழிந்து கிடக்கும் ஆசிரியர் மாணவர் உறவு நிலையை இது மேலும் மோசமாக்கி விடும் என்பதை உணர வேண்டும்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையை தனது ஆசிரியைக்கு எதிராகவே கொலை வாளை சுழற்ற வைத்தது எது?

சத்தியமாய் நம்பலாம், ஒழுங்காகப் படித்து வாழ்க்கையில் உயரச் சொன்ன ஆசிரியையே குத்திக் குத்திக் கொன்று தொலைத்திருக்கிறோமே என்று எஞ்சிய வாழ் நாளெல்லாம் அந்தப் பிள்ளை நிம்மதியற்று அழுவானே. அவனது ஆயுட்கால அழுகைக்கு எது காரணம்?

தகாத சேர்க்கை, சினிமா, ஊடகங்கள் என்று பல்வேறு காரணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கப் படுகின்றன. இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனாலும் கல்விக் கூடங்களிலிருந்த கல்வி சந்தைக்கு கடத்தப் பட்டு, மாணவனை சான்றோனாக்குவது, மனிதப் படுத்துவது என்கிற கல்வியின் உயரிய செயல் திட்டத்திலிருந்து அவனை மதிப்பெண்களை அறுவடை செய்யும் அறுவை எந்திரமாக மாற்றுவது என்கிற நிலைக்கு கல்வியை தனியார் மயம் உந்தித் தள்ளிய நொடியில் இதற்கான விதை விதைக்கப் பட்டதாகக் கொள்ள வேண்டும்.

கொஞ்சம் மனசாட்சியோடு யோசித்துப் பார்ப்போம்,

தான் கொலை செய்யப் படுமளவிற்கு உமா அப்படி என்ன தவறு செய்தார்? அல்லது பத்துப் பதினைந்து முறை கத்தியால் குத்துமளவிற்கு உமா மேல் இர்ஃபானுக்கு என்ன தனிப்பட்ட கோவம்?

நன்கு படிக்கச் சொன்னார். அதில் கொஞ்சம் கடுமை காட்டியிருக்கிறார்.  அவன் ஒத்துழைக்காத போது அவனது பெற்றோரின் கவனத்திற்கு இதைக் கொண்டு போயிருக்கிறார். இத்தகைய நெருக்கடிகள் ஒரு கொலைக்கான நியாயமான காரணங்கள் தானா?

பிள்ளைகளது படிப்பில் அக்கறை காட்டிக் கொள்வதாக கருதிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நிரலைஎப்படி அமைக்கிறார்கள்?

அதிகாலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து எழுப்பி “படி” என்கிறார்கள். ஆறு மணிக்கு தனிப் பயிற்சி. அப்புறம் வீட்டிற்குப் போய் அவசர அவசரமாய் புட்டுப் போட்டுக் கொண்டு பள்ளிக்கு பாய்ச்சல். சிறப்பு வகுப்பு, பிறகு வகுப்புகள். மாலை சிறப்பு வகுப்பு, பிறகு மீண்டும் தனிப் பயிற்சி, பிறகு வீட்டிற்கு வந்தும் படிப்பு.

இதைப் படிக்கும் போதே நமக்கு தலை சுற்றி ஒரு எரிச்சல் வருகிறதே, அந்தப் பிள்ளைகளுக்கு எப்படி இருக்கும்?

பழைய கட்டமைப்பில் மதிப்பெண் தேர்ச்சி விழுக்காடு எல்லாம் பிரதானமில்லை. இதெல்லாம் பிரதானமில்லாமல் இருந்த போது வகுப்பறைகளில் கற்றல் கற்பித்தல் நடை பெற்றது. மதிப்பெண் பிரதானமான பிறகு கற்றலும், கற்பித்தலும் ஏறத்தாழ வழக்கொழிந்து போய் மனப்பாடம் செய்ய வைப்பதும் எழுதி வாங்குவதுமே பிரதானமாகிப் போனது.

கற்றல் ஒரு மாணவனுக்கு சிறகைத் தரும். மனப்பாடம் ஒரு வித தளர்ச்சியைத் தரும். கற்றலும் கற்பித்தலும் நடக்கும் போது மாணவனுக்குப் புரிய வேண்டும் என்றத் தேவை இருந்தது. கற்றல் கற்பித்தலில் மாணவன் ஒரு பொருட்டான இடத்தைப் பெற்றான். மனப்பாடம் என்று வரும் போது இயந்திரமாகிப் போனான்.

இது இயல்பாகவே மாணவர்களிடம் ஒரு ஒவ்வாமையை, கோவத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. நூறு டிகிரிக்கு வரும் வரை எப்படி நீரின் கொதி செயல் வெளியே தெரியாதோ அப்படித்தான் இதுவும். பெற்றோர் மீது, ஆசிரியர்கள் மீது, கல்விக் கட்டமைப்பின் மீது ஒரு வித கோவத்தை விதைத்து வைத்திருக்கிறது.

அதன் முதல் பலி உமா. ஆனால் கொஞ்சம் பொருப்போடு அணுகினால் இந்த மோசமான கல்விக் கட்டமைப்பின்பால் உள்ள மாணவக் கோவத்தின் முதல் பலி உமாவும் இர்ஃபானும்.

இதை இர்ஃபான் என்ற மாணவனின் கோவமாகப் பார்த்தால் நாம் தோற்போம். இது ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் இருக்கும் கோவத்தின் பிரதிபலிப்பு.

அன்றைய இந்தி வகுப்பிற்கு இர்ஃபான்தான் முதல் ஆளாக வந்திருக்கிறான்.  அவனை ஒரு புன்னகையோடு உமா வரவேற்றிருந்தால் ஒருக்கால் உமா இன்று உயிரோடு இருந்திருப்பதற்கும் ஒரு பெரு வாய்ப்புண்டு என்று மாதவராஜ் சொல்வதை மிகுந்த கவனத்தோடு பரிசீலிக்க வேண்டும்.
 
எதிர் பார்க்குமளவிற்கு தேர்ச்சி விழுக்காட்டையோ, மதிப்பெண்களையோ, அறுவடை செய்து தராவிட்டால் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பில்லை.

இப்படிச் சொல்வதால் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை ஆரோக்கியமானது என்று இல்லை. இப்பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் முன்பெல்லாம் தனது பதவி காலத்திற்குள் ஒரு பத்து அல்லது பன்னிரண்டு தலைமை ஆசிரியர் கூட்டங்களை சந்தித்திருப்பார்கள். ஆனால் இப்போதோ ஒரு மாதத்திற்கு மூன்று வருகிறது.

தலைமை ஆசிரியர் கூட்டமென்றால் தொடங்கியது முதல் முடிக்கும் வரை தேர்ச்சி விழுக்காடு தேர்ச்சி விழுக்காடு தேர்ச்சி விழுக்காடுதான்.

சமீபத்தில் நடந்த ஒரு தலைமை ஆசிரியர் கூட்டத்தில் ஒரு முதன்மைக் கல்வி அலுவலர் பேசியதைக் கேட்டால் இது விளங்கும். தேர்வெழுதி நேரடியாக அதிகாரியாக வந்தவர் அவர். எவ்வளவுதான் இரக்கமற்று கூட்டிச் சொன்னாலும் முப்பத்தி ஐந்துக்குமேல் இருக்காது. அந்தக் கூட்டத்தில் இருந்த தலமை ஆசிரியர்களின் சராசரி வயதை எவ்வளவுதான் பெருந்தன்மையோடு சொன்னாலும் ஐம்பத்தி நான்கிற்கு குறையாது. அவர் பேசினார்,

”தேர்ச்சி விழுக்காடு மட்டும் குறைந்தது பந்தாடிடுவேன் ஆமாம்.” தேர்ச்சி விழுக்காடே இலக்கு என்றானபின் எந்த வயதுக்காரரை எந்த வயதுக்காரர் எப்படி பேசுகிறார் பாருங்கள்.
  

அவரை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத தலைமை ஆசிரியர்கள் அடுத்த நாள் ஆசிரியர் கூட்டத்தை கூட்டி கொந்தளித்து தங்களது காயத்துக்கு களிம்பு தடவிக் கொள்கிறார்கள்.

இப்போது ஆசிரியர்களுக்கு அதை வகுப்பறையில் இறக்கி வைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இந்த இறுக்கம்தான் அவர் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் ஒரு மாணவன் சிரித்து விட்டால் “என்னடா இளிப்பு” என்று எரிந்து விழ வைக்கிறது. பிள்ளைகளின் சிரிப்பைக் கூட ரசிக்க விடாமல் நோகச் செய்கிறது இந்தக் கல்விக் கட்டமைப்பு.

பையனுக்குப் புரிகிறதோ இல்லையோ எதையாவது செய்து பெரும்பகுதி மாணவர்கள் ஆயிரத்தி நூறுக்கு குறையாமல் மதிப்பெண்களை எடுத்துவிட வைக்க வேண்டும் என்ற நெருக்கடியிலோ, அல்லது எல்லோரையும் தேர்ச்சி பெற வைத்து விட வேண்டும் என்ற நெருக்கடியிலோதான் தாயாய் தகப்பனாய் நடக்க இயலாமல் சர்க்கஸ் ரிங் மாஸ்டர்களாய் மாற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆசிரியர்கள் ஆளாகிறார்கள்.

இந்தப் புள்ளியில்தான் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே இருந்த ஒரு பெயர் தெரியாத பந்தம் அறுந்து போனது.

 நாட்டில் உள்ள எல்லா மாணவர்களும் நிறைய மதிப் பெண்கள் பெற்றுவிட வேண்டும் என்கிற அக்கறையிலா சுய நிதிப் பள்ளி தாளாளர்கள் இது விசயத்தில் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள்? சத்தியமாய் இல்லை.  அப்போதுதான் அவருக்கு சேர்க்கையும் கல்லாவும் வழியும்.

கல்லாவும் கல்வியும் கை கோர்த்த இந்த நொடிதான் சபிக்கப் பட்ட நொடி எனலாம்.

மனிதப் படுத்தவும் சான்றோனாக்கவும் ஆசிரியர் காட்டிய கடுமைக்கும், தனது பணியை தக்க வைத்துக் கொள்ளவும் முதலாளியின் கல்லாவை வழியச் செய்யவும் ஆசிரியர் காட்டும் கடுமைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

இந்த இரண்டாவது வகைக் கடுமைதான் இன்றைய ஆசிரியர் மாணவர் உறவின் விரிசலுக்கானக் காரணம்.

மட்டுமல்ல, அப்போதெல்லாம் எதையும் கடந்து தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்ள மாணவனுக்கு வாய்ப்பு இருந்தது. விளையாட நேரமிருந்தது. இப்போதோ அப்படியல்ல கந்தர்வன் பெண்களின் அவஸ்தைக் குறித்து இப்படிச் சொல்வார்,

“ நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமையும்
பெண்களுக்கில்லை” என்று.

இதை கொஞ்சம் மாற்றி மாணவர்களின் அவஸ்தையோடு பொருத்தி இப்படிச் சொல்லலாம்

” நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமையும்
மாணவர்க்கில்லை “ என்று.

கம்பியில் நடக்க வேண்டிய தருணமிது. ஒரு நூல் சலனப் பட்டு சாய்ந்தாலும் அது மாணவர்களுக்கும் ஆசிரியகளுக்கும் இடையே பகைமையை உண்டாக்கும்.

அழகான, ஒன்றுமறியாத, இரண்டு குழந்தைகள் அன்பான அம்மாவை இழந்து அநாதைகளாய் தவிக்கும் சோகம் ஒரு புறமெனில், ஒரு குழந்தையை உயிரோடு பறி கொடுத்து தவிக்கும் குடும்பம் இன்னொரு புறம்.

போதும்,

இனி ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

தேர்வுகளை மையப் படுத்தாத, மனித மாண்புகளை மையப் படுத்தக் கூடிய , மாணவர்களின் குறும்பை குதூகலத்தை அங்கீகரிக்கிற கல்விக் கட்டமைப்பும், லாப நோக்கில் குழந்தைகளை இயந்திரங்களாக மாற்றக் கூடிய சந்தையிலிருந்து கல்வியைப் பொதுப் படுத்தவும் வேண்டும்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மாணவர் மற்றும் சமூக அமைப்புகள் அடிக்கடிக் கூடி அக்கறையோடு விவாதிக்க முன்வர வேண்டும்.

பெரும்பான்மை வகுப்பறைகளில் ஆசிரியர் இறுக்கத்தோடு நுழைகிறார். மாணவர்கள் இறுக்கத்தோடு எழுந்து நின்று வணங்குகிறார்கள். இறுக்கத்தோடே நகர்கிறது வகுப்பு. முடிந்ததும் மாணவர்கள் இறுக்கத்தோடே வெளியேறும் ஆசிரியரை அதை விட இறுக்கத்தோடு வழி அனுப்பி வைக்கிறார்கள். இனி அடுத்ததாய் இறுக்கத்தோடு வரப்போகும் ஆசிரியரை எழுந்து நின்று வரவேற்க இறுக்கத்தோடு தவம் இருக்கிறார்கள்.

ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரு புன்னகையோடு வகுப்பினைத் தொடங்கி ஒரு புன்னகையோடு அதை நிறைவு செய்யும் வகையில் கல்வி கட்டமைக்கப் பட வேண்டும்.


நன்றி ; “ காக்கைச் சிறகினிலே”


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம். காரணம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சில பள்ளிகளின் விளம்பரம்.




1150க்கு மேல், 1100க்கு மேல், மெடிக்கல் கட் ஆஃப்பில் இத்தனை, பொறியியல் கட் ஆஃப்பில் இத்தனை என மாணவர்களின் புகைப்படங்களோடு முழுப் பக்கத்தையும் ஆக்ரமித்து பல பள்ளிகள் விளம்பரப் படுத்தி இருந்தன. இவர்களே அனைத்து முக்கிய கல்லூரிகளையும் பிடித்து விடுவார்களே? என்ற கவலை பலருக்கும் வந்திருக்கும்.

ஆஹா பேசாமல் இந்தப் பள்ளிகளில் நம் குழந்தைகளை சேர்த்து விட்டால் நல்ல மார்க் எடுத்து நல்ல கல்லூரி கிடைத்து லைப்பில் செட்டில் ஆகி விடுவார்கள் நம் பிள்ளைகள்  என்று கருதும் சராசரி பெற்றோர்களுக்கு சில தகவல்களை தெரிவிக்கவே இந்த பதிவு.

இந்த விளம்பரங்களிலேயே ஒரு ஆஃபரையும் நீங்கள் கவனித்து இருக்கலாம். பத்தாம் வகுப்பில் 485/500 க்கு மேல் எடுத்தவர்களுக்கும், இரண்டு பாடங்களில் செண்டம் எடுத்தவர்களுக்கும் பள்ளிகட்டணம், விடுதி கட்டணம் கிடையாது என்பதே அது. (இந்தளவு மதிப்பெண் எடுத்திருந்தால் அல்லது  இரண்டு பாடங்களில் செண்டம் எடுத்திருந்தால் அவர்கள் நியர் பெர்பெக்ட் மார்க் டேக்கிங் மெஷின் ஆகவே இருப்பார்கள். அவர்களை மதிப்பெண் வாங்க வைப்பது எளிது)

பின் 450க்கு மேல் எடுப்பவர்களுக்கும் சலுகை உண்டு. இப்படி சேரும் மாணவர்களை முதல் முன்று செக்‌ஷன்களில் வைத்துக் கொள்வார்கள். பின் இப்பள்ளிகளின் ரிசல்டால் கவரப்பட்டு சேரும் ஆயிரம் மாணவர்களை பின் உள்ள பத்து பதினைந்து செக்‌ஷன்களில் அடைத்து வைத்துக் கொள்வார்கள்.

பல ஆண்டு அனுபவம் உள்ள ஆசிரியர்களின் நேரடி கவனிப்பு அந்த முதல் மூன்று செக்‌ஷன்களுக்கே. அந்த பையன்களே பின் செய்திதாள் விளம்பரத்தையும் அலங்கரிப்பார்கள்.

மற்ற பையன்கள் அனைவரும் 100ல் இருந்து 160 வரை மட்டுமே கட்டாஃப் மார்க் எடுப்பார்கள். பெற்றோர்கள் இந்த உண்மை அறியாமல் தங்கள் பையன்களை திட்டி சித்திரவதைப் படுத்துவார்கள்.

இந்த ஆண்டு எனக்குத் தெரிந்த பையன்களே பத்து பேர் வரையில் நாமக்கல் பள்ளிகளில் படித்து 800 மதிப்பெண்களுடன் திரும்பியிருக்கிறார்கள். இதை அவர்கள் இங்கிருந்தே எடுத்திருக்கலாம்.

சரி இந்தப் பள்ளிகள் எப்படி வளர்ச்சியடைந்தன?

இதற்கும் 84ல் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் தோற்றத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. எம்ஜியார் ஆட்சிக்காலத்தில் தொழிற்கல்வி பயில இண்டர்வியு முறை ஒழிக்கப்பட்டு நுழைவுத்தேர்வு முறை கொண்டு வரப் பட்டது. அதன் பின்னரே மதிப்பெண் மோகம் எல்லாருக்கும் பரவியது.

80களின் மத்தியில் பல மாவட்டங்களில் தலைசிறந்த பள்ளிகள் என்றால் மூன்று நான்குதான் இருந்தன. அவை பெரும்பாலும் அரசு உதவி பெற்று வந்த பள்ளிகள். அவற்றில் குறைந்த அளவே மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பிருந்தது. எனவே அவை பத்தாம் வகுப்பில் 400க்கு மேல் எடுத்தால் தான் பிளஸ் 1 முதல் குரூப் என்று அறிவித்தன. அதே பள்ளியில் படித்து 399 எடுத்த பையன் வேறு வழியில்லாமல் அரசுப் பள்ளிக்கோ அல்லது வேறு தனியார் பள்ளிக்கோ செல்ல வேண்டியிருந்தது. இவை மாணவர்களை மன ரீதியில் பாதிப்புக்குள்ளாக்கியது.


இதன்பின் பல தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பிளஸ் 1 படிப்பிற்கு இடங்களை அதிகரித்தன. ஆனால் அவை அடிமாட்டு விலைக்கு ஆசிரியர்களை நியமித்ததால் எதிர்பார்த்த மதிப்பெண்களை அவர்களால் பெற்றுத்தர முடியவில்லை.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் தனியாரால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள் ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம், துணை விடுதி காப்பாளர் கூட மிக தகுதி வாய்ந்த ஆசிரியர் என்று களமிறங்கின. போதாக்குறைக்கு விடைத்தாள் திருத்தக்கூட தனி ஆசிரியர்கள். அவர்கள் பொதுத்தேர்வில் எம்முறையில் திருத்துவார்களோ அதே முறையில் திருத்தி மாணவர்களின் சாதக பாதகங்களையும் எழுதித்தருவார்கள். இதனால் பலரும் தங்கள் பிள்ளைகளை இங்கே சேர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்கள்.

  சரி அவ்வளவு தானே? முடிஞ்சா மார்க் எடுக்கட்டும். இல்லையின்னா நன்கொடை கொடுத்துக்குறோம். இதுக்கு ஏன் ஒரு பதிவு என்று கேட்கலாம். இவர்கள் மாணவர்களை படிக்க வைக்கும் முறை ஆபத்தானது. அதனால் தான் இந்த புலம்பலே.

நான் பனிரெண்டாம் வகுப்பு வரை சிற்றூரிலேயே வசித்து வந்தேன். கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போது, என் தந்தையின் பணிஉயர்வு மற்றும் இட மாறுதல் காரணமாக மாவட்டத்தலைநகர் ஒன்றிற்கு இடம் பெயர்ந்தோம். நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் கீழ் வீட்டிலும், மாடியில் நாங்களும். ஓனரின் மகன் பிளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் டியூசனில் இருந்து வந்தவன் 138 மார்க் எடுத்துட்டேன், என வீட்டில் சலம்பிக் கொண்டிருந்தான்.

பின் அவனிடம் விசாரித்தபோது இயற்பியலுக்கு டியூசன் செல்வதாகவும், பிளஸ் டூ பாடத்தை இந்த ஆண்டே படிப்பதாகவும் கூறினான். காலையில் நடந்த இயற்பியல் பொதுத் தேர்வின் வினாத்தாளுக்கு மதியம் 2-5 தேர்வு எழுதியதாகவும் அதில் 138/150 என்றும் கூறினான். பின்னர் இந்த விடுமுறையில் கணித டியூசன் என்றும், பள்ளி தொடங்கிய பின் வேதியியலில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறினான். இது எனக்கு 91ல் கடும் அதிர்ச்சி. ஆனால் இன்று சர்வ சாதாரணம். அப்போது கிராமத்தில் பிளஸ் 1 பாடத்தை மாங்கு மாங்கு என்று படிப்பவனின் கதி?

பின்னர்தான் தெரிந்தது 9ஆம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களையும், 11ல் 12ஐயும் முடிக்கும் வசதி.

இதனால் என்ன நஷ்டம்?

ஒன்பதாம் வகுப்பில் வேதியியல், இயற்பியல் பகுதிகளை நன்கு படித்தால் அது நல்ல அடித்தளத்தைக் கொடுக்கும். அதே போலவே 11லிலும். அதைவிட முக்கியம் 11ஆம் வகுப்பில் படிக்கும் கணிதம். இண்டக்ரேஷன், டிஃப்ரனிசியேஷன், பார்சியல்   டிஃப்ரனிசியேஷன், மேட்ரிக்ஸ் போன்றவற்றில் அடித்தளமே இருக்காது 11ஆம் வகுப்பை ஸ்கிப் செய்வதால்.

சரி அதாவது தொலையட்டும், பிளஸ் 2 பாடமாவது சரியாக படிக்கிறார்களா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிடும் நோட்ஸ், மாதிரி வினாத்தாள், பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் எந்தப் பகுதியில் இருந்து கேட்கப்படும் என்பதைச் சொல்லும் புளு பிரிண்ட் இவற்றைக் கருத்தில் கொண்டே படிக்கிறார்கள். 

திருக்குறள் படித்தால் நாலடியார் தேவையில்லை என்பது போன்ற பெர்முடேஷன் காம்பினேஷனிலேயே மாணவர்கள் படிக்கிறார்கள். இயற்பியல், கணிதத்தில் இப்படி குறிப்பிட்ட பகுதியை மட்டுமே படிப்பதால் இவர்களின் பேஸ்மெண்ட் படு வீக்காக இருக்கிறது.

புளூபிரிண்ட் படி படித்து மார்க் எடுத்து வருபவர்களால் பொறியியலில் சிறப்பாக படிக்க முடியாது. அங்கும் வந்து மார்க் எடுக்கும் படி படித்து ஏதாவது மென்பொருள் நிறுவனத்தில் ஐக்கியமாகி விடுகிறார்கள். கோர் இண்ட்ஸ்ட்ரீஸ் என்று சொல்லப்படும் நிறுவனங்களில் இவர்களின் பங்கு மிகக் குறைவே. நல்ல திறமை வாய்ந்த பொறியாளர்கள் உருவாவதை இம்மாதிரி பள்ளிகள் தடுக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

அதனால் தான் கேட், ஐ ஈ எஸ் போன்ற தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து  கொண்டே வருகிறது. டி ஆர் டி ஓ, ஐ எஸ் ஆர் ஓ போன்றவற்றில் கேரள, ஆந்திர மாணவர்களின் பங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

எனக்குத் தெரிந்த பையன் ஒருவன், பத்தாம் வகுப்பில் 412 மதிப்பெண்கள் எடுத்தான். அவன் பெற்றோரும் மூன்று லட்சம் வரை செலவு செய்து நாமக்கல்லில் படிக்க வைத்தார்கள்.
தொடர்ந்து குறைவான மதிப்பெண்களியே அவன் பெற்று வந்தான். தேர்வு நேரத்தில் டென்ஷன், உடல்நிலை சரியில்லை என காரணங்கள் சொல்லி வந்தான். பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வில் நான்கு பாடங்களில் பெயில். காரணம் கேட்டு பெற்றோர் அங்கு விரைந்த போது, அங்கே நூற்றுக்கும் அதிகமான பெற்றோர்களை அதே குறையுடன் அங்கே பார்த்தனர்.

அவன் 11 ஆம் வகுப்பு சேரும் போது தெருவே அவனை எதிர்பார்தது. பெற்றோர், உறவினர் எதிர்பார்ப்பு அவன் சுமையைக் கூட்டியது. அங்கே இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் அவனால் பிரகாசிக்க முடியவில்லை. அது தாழ்வு மனப்பான்மையைக் கொடுத்தது. மனச் சிதைவுக்கு ஆளாக்கியது. பின் அந்த பெற்றோர் மூன்று மாதம் விடுப்பு எடுத்து, அங்கே வாடகைக்கு வீடு பிடித்து, அவனை அமைதிப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர். 700 மதிப்பெண்களுடன் அவன் திரும்பியிருக்கிறான். இப்போது அவன் வயது நண்பர்களுடன் பழக மனத்தடை. சிறிது சிறிதாக  இயல்பாகி வருகிறான்.

இப்படி எத்தனை பேர்?

நன்றி திரு.முரளிகண்ணன்

 அரசு பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவனை சேர்த்த காரணத்தால்,  ஆத்திரமடைந்த (சாதி) வெறிப்பிடித்த பெற்றோர்கள் 130 மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாத சம்பவம் கொடுமை அரங்கேறியுள்ளது..

                     

திருவண்ணாமலை அடுத்த ஆடையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 77 மாணவிகள் உள்பட 135 பேர் படிக்கின்றனர்.  கடந்த  6ம் தேதி ஆடையூர் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட இனைத்தை சேர்ந்த  குமார் என்பவர் தனது மகன்களான  சதீஷை 6ம்  வகுப்பிலும்முத்துராஜை 1ம் வகுப்பிலும் சேர்த்துள்ளார். இன்று  காலை வழக்கம்போல் பள்ளி திறக்கப்பட்டது. தலைமை ஆசிரியர்  முகமது உஸ்மான் உள்பட 6 ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர்.  மாணவர்களுக்காக  சத்துணவும் தயாரிக்கும் பணி நடந்தது. ஆனால், சதீஷ், முத்துராஜ் உள்பட 5 மாணவர்கள்  மட்டுமே  பள்ளிக்கு வந்தனர்.  மற்ற  130 மாணவர்கள் வரவில்லை.

இதையடுத்து காலை 10 மணியளவில் ஆடையூர் கிராமத்தை சேர்ந்த  50க்கும் மேற்ப்பட்ட உயர்சாதியினர்  ஒன்றாகதிரண்டு  பள்ளிக்கு  வந்து  தலைமை ஆசிரியரான முகமது  உஸ்மானிடம்,  ‘‘தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த  சதீஷ், முத்துராஜ் ஆகியோரை  எப்படி நீங்கள் பள்ளியில் சேர்க்கலாம்.  அவர்களுக்கு ஆதிதிராவிட நலப்பள்ளி  இருக்கிறதே! இந்த மாணவர்களை அந்த பள்ளியில் அவர்களை சேர்த்திருக்கலாமே’’ என  தகராறு செய்தனர்.

ஆனால் தலைமை ஆசிரியர் முகமது  உஸ்மான்  , ‘‘பள்ளியில் சேருவதற்கு ஜாதி, மதம் எதுவும் தடையில்லை.  எல்லா  பிரிவு மாணவர்களும்  சேர்ப்பதுதான் எங்களது கடமை’’ என கூறினார்.  ஆனால் அந்த கும்பல் திருப்தி அடையாமல் தொடர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டனர்.

தகவலையறிந்த தி.மலை தாலுகா போலீசார் தி.மலை கலெக்டர்  விஜய் பிங்ளேவுக்கு தெரிவிக்கப்பட்டது.  அவரது உத்தரவின் பேரில் தி.மலை தாசில்தார் ரவிச்சந்திரன் உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.  விசாரணை அறிக்கையை கலெக்டரிடம் அளிப்பதாக தாசில்தார் தெரிவித்தார். 



அங்கிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் சமச்சீர் கல்விங்குறாங்க, சரிசமங்குறாங்கசுதந்திரமடைஞ்சி இத்தனை வருசத்துல எங்கல பள்ளிக்கூடடத்துல சேரக்கூடாதுன்னு சொல்லுறது என்ன நியாயம் சாமி என்றார்கள்  ஏதுமறியாதவர்களாய்..


அப்படின்னா எங்க இருக்கு சம (ச்சீர்) கல்வி…. 


திருவண்ணாமலையிலிருந்து வெளிச்சம் மாரி   

 Summary :
 If the addition of a low caste boy in school, and high-caste parents refuse to send 130 students in Thiruvannamalai District Adaiyur Village..



வெளிச்சம் மாணவர்களின் வணக்கங்கள், 
இன்று வெளியான குமுதம் சிநேகிதி இதழின் 12ம் ஆண்டு சிறப்பிதழில் வெளிச்சம் அமைப்பின் குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.. இந்த கட்டுரையை படித்து பாருங்கள், எமது பணி குறித்து விமர்சியுங்கள்….
ஏனெனில் இது எங்களுக்கான பணியல்ல சமூகத்திற்கானது

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது
எதிர்பார்ப்புடன்
வெளிச்சம் மாணவர்கள்


மற்றவர்களுக்கு நல்லது செய்ய நினைப்பவரா நீங்கள்!
ஜொஞ்சம் கிளிக் செய்யுங்கள் :.................................................................................



கோபி அருகே பள்ளி மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மீது பெற்றேர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கோபி அருகே உள்ள நம்பியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளி தலைமையாசிரியராக சுப்பையன் என்பவரும், பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர். பள்ளி வளாகத்தில் கிடந்த குப்பைகளை மாணவர்களை கொண்டு 2 ஆசிரியர்கள் மேற்பார்வையில் அகற்றினர்.

இதனையடுத்து மாணவர்கள் அப்பகுதியில் கிடந்த கல் மண், செடி இலைகளை அள்ளி சென்று வெளியில் கொட்டினர். கழிப்பறையையும் மாணவர்கள் சுத்தம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சுப்பையனிடம் கேட்ட போது, பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் தொடங்கும் போது பள்ளியை சுத்தமாக வைத்திருக்க கல்வித் துறை அலுவலகங்கள் உத்தரவிடுகின்றன. இதற்கு போதிய பணியாளர்கள் இல்லாததாலும் போதிய நிதி இல்லாததாலும் மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய வேண்டியுள்ளது என்றார்.

கடுமையான வெயில் நேரத்தில் மாணவர்களை வேலை வாங்கிய தலைமையாசிரியரின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தை அறிந்த பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்தின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் பெண்களை நிறுத்திவைத்து, ஜொள்ளர்களிடம் இருந்து பணத்தையும் நகையையும் அபேஸ் செய்யும் வழிப்பறிக் கொள்ளையர்களைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதே வழியில்தான் இப்போது பணம் பறிக்கின்றன, சில செல்போன் நிறுவனங்கள்! 
புதுப்புது ஐடியாக்களில் காசைக் கறப்பதில் செல்போன் நிறுவனங்களுக்கு இடையே பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. ஒரு நிறுவனம் ஏதாவது ஒரு புதிய திட்டத்தை அறிவித்தால், அடுத்த சில நாட்களிலே மற்ற நிறுவனங்களும் அதே திட்டத்தை, வேறு பெயரில் அறிமுகம் செய்துவிடும். அந்த வகையில் இப்போது இளைஞர்களைக் குறிவைத்துக் காசைக் கறக்கும் புதிய திட்டத்தின் பெயர், 'நட்பு வட்டம்.’

இந்தக் கட்டுரையைப் படிக்கும் உங்களுக்கு, இந்த நட்பு வட்டம் குறித்து ஏற்கெனவே எஸ்.எம்.எஸ். வந்து இருக்கலாம். அல்லது விரைவில் வரும். உங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து சம்பந்தமே இல்லாமல் எஸ்.எம்.எஸ். வரும். அந்தக் குறுந்தகவலை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். என்றாவது ஒரு நாள் ஆர்வக்கோளாறில் பதில் அனுப்பிவிட்டால், உடனே உங்களுக்கு 13 இலக்கங்கள்கொண்ட ஓர் அடையாள எண் வழங்குவார்கள். இந்த நேரத்தில் உங்கள் பில்லில் 30 ரூபாய் ஏறி இருக்கும். அதன்பிறகு, உங்களுக்கு ஏராளமான மிஸ்டு கால்கள் வரத் தொடங்கும். அந்த எண்களுக்கு நிச்சயமாக நீங்கள் டயல் செய்வீர்கள். அப்போது எதிர்முனையில் ஸ்வீட் வாய்ஸில் ஒரு பெண் கொஞ்சுவார்.
நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும், உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவதுமாதிரி மென்மையாகப் பதில் சொல்வார். நீங்கள் நாகரிகம் மறந்து ஆபாசமாகப் பேசினாலும் அவர் கண்டுகொள்ள மாட்டார். எதற்காகவும் கோபப்பட மாட்டார். நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் செக்ஸியாகப் பதில் வந்துகொண்டே இருக்கும். நீங்கள் உடனே சுதாரித்து உங்கள் செல்போன் இணைப்பைத் துண்டிக்கவில்லை என்றால், உங்கள் கணக்கில் பணம் எகிறிக்கொண்டே இருக்கும்.

வழக்கமாக ஏதாவது ஓர் எண்ணுக்கு நீங்கள் அழைத்தால், எதிர்முனையில் இணைப்பு கிடைத்த பிறகுதான் மீட்டர் ஓடும். ஆனால் இந்தத் திட்டத்தில் மட்டும், நீங்கள் டயல் செய்த உடனே மீட்டர் ஓடத் தொடங்கும். ஒரு நிமிடத்துக்கு இரண்டு ரூபாய் கட்டணம். எஸ்.எம்.எஸ். கொடுப் பதற்குக் கட்டணம் ஒரு ரூபாய். வெவ்வேறு எண்களில் இருந்து மிஸ்டு கால் வரும். எடுக்கவும் முடியாது, எடுக்காமல் இருக்கவும் முடியாது என்று தடுமாறி ஏமாறுபவர்கள் அதிகம்.

இந்த நட்பு வட்டார சீட்டிங் குறித்து ஏராளமான நபர்கள் ஏகப்பட்ட பணத்தைத் தொலைத்து, நமக்குப் புகார் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். களம் இறங்கினோம்.
வெளிநாடுகளில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த 'செக்ஸ் கால்’ என்பதைத்தான் 'நட்பு வட்டம்’ என்ற பெயரில் செல்போன் நிறுவனங்கள் இங்கு களம் இறக்கி உள்ளனவாம். நட்பு வட்டப் பெண்கள் பேசும் அத்தனையும் அதிர்ச்சி ரகம்!

காலர் 1 - மேலூர் அமுதா:

ஆரம்பத்தில் சாதாரணமாகப் பேசியவர், தனது பெயர் சசிகலா, வயது 22 என்று முதல் தூண்டிலைப் போட்டார். அடுத்தடுத்து இரண்டு நாட்கள் பேசியபோது, கொஞ்சம் கொஞ்சமாகப் புதுப்புதுத் தகவல்களைச் சொல்லி ஆர்வத்தைத் தூண்டினார். அதன் பிறகு நம்மைப் பற்றி அறிமுகம் செய்து உண்மையைக் கேட்டோம். மிகவும் தயக்கத்துக்குப் பிறகு பேசினார். ''என் நிஜப் பேர் அமுதா. எனக்கு 38 வயசாச்சு சார். ஏற்கெனவே கல்யாணம் ஆன ஒருத்தனுக்கு விஷயம் தெரியாமக் கழுத்தை நீட்டிட்டேன். ஒரு புள்ளையக் குடுத்துட்டுப் போயிட்டான். கிடைச்ச வேலைகளுக்குப் போய் என் புள்ளையையும், என்னோட அம்மாவையும் காப்பாத்திட்டு வந்தேன். அப்போ எனக்குத் தெரிஞ்சவங்கதான் இந்த ஸ்கீம்ல சேர்த்துவிட்டாங்க. தினமும் நெறைய போன் வருது. சின்னச் சின்னப் பசங்கல்லாம் நேரம் காலம் பாக்காமக் கூப்பிடுறாங்க. நேத்து ராத்திரி எட்டாம் வகுப்பு படிக்கிறேன்னு சொன்ன ஒரு பையன், 'ஏய்... எங்கிட்ட வர்றியா? அஞ்சாயிரம் ரூபா தர்றேன்’னு சொல்றான். இதெல்லாம் எம் புள்ளைங்க மாதிரி இருப்பாங்க. ஆனா ஏதேதோ பேசுறாங்க.....'' என்று கதறினார்.

''எங்களுக்கு மாசத்துக்கு 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்றாங்க. நிஜப் பேரையும் எங்க செல்போன் நம்பரையும் யாருகிட்டேயும் கொடுக்கக் கூடாது. எப்படிப் பேசுறதுன்னு சொல்லிக் கொடுப்பாங்க. மாசத்துக்கு 3,500 ரூபா சம்பளம் குடுக்குறாங்க. தமிழ்நாடு மட்டும் இல்லே சார்... பாம்பே, டெல்லியில இருந்து எல்லாம் பேசுறாங்க. நெறையப் பேரு பணம் அனுப்புறேன்னு அட்ரஸ் வாங்குறாங்க, ஆனா அதோட அவ்வளவுதான். எனக்கு இந்த நம்பர் குடுத்த மேடம்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன். 'கம்பெனி ரூல்ஸ் படி உன் அட்ரஸை யாருகிட்டயும் கொடுக்கக் கூடாது. இந்தத் தடவை மன்னிச்சுடுறேன்’னு சொல்லிட்டாங்க.  இப்போதான் பேங்க்ல அக்கவுன்ட் ஆரம்பிச்சிருக்கேன். இனிமே, மாசாமாசம் அதுல சம்பளம் போடுவாங்களாம்'' என்றார் அப்பாவியாக!

காலர் 2 - ஸ்ரீரங்கம் பிரியா:

தொடர்ந்து 10 நாட்கள் பேசிய பிறகும், இவரிடம் இருந்து உண்மையைப் பெற முடியவில்லை. அதன் பிறகு செல்போன் நிறுவனத்தில் இருந்து நாம் பேசுவதாகவும், செக் செய்வதற்காகத்தான் இத்தனை நாட்கள் பேசியதாகவும், மிகத் திறமையாக வாடிக்கையாளர்களைச் சமாளிப்பதாகச் சொல்லிப் பாராட்டினோம். ''மாதச் சம்பளம் 5,000 சரியாகக் கிடைக்கிறதா?'' என்று கேட்டதும், ''அய்யய்யோ... 3,500தான் தர்றாங்க'' என்று அலறினார். இரண்டு குழந்தைகளையும் சென்னையில் இருக்கும் அம்மா வீட்டில் விட்டுவிட்டு, கணவனுடன் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார். கணவனுக்குத் தெரிந்தேதான் இந்த நட்பு வட்டத்தில் பேசுகிறாராம் பிரியா. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மட்டும் படுசெக்ஸியாகப் பேசுவாராம். பணம் கிடைப்பதைவிட, இப்படிப் பேசுவது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு என்கிறார் பிரியா!

காலர் 3 - ரம்யா, கல்லூரி மாணவி:

முதலில் தன் பெயரை ரேவதி என்று கூறியவர், நீண்ட முயற்சிக்குப் பிறகு உண்மையைச் சொல்ல ஆரம்பித்தார். இவரது பேர் நட்பு வட்டத்தில் மிகப் பிரபலமாம். எந்த நேரமும் செல்போனும் கையுமாகவே அலைவதால் வீட்டிலும் ஏக அர்ச்சனை. இந்த வட்டத்தில் சேர்ந்ததில் இருந்து கல்லூரி வகுப்புகளை அதிகமாகப் புறக்கணித்து வருகிறாராம்.  ''காலர்ஸ்கிட்ட நான் சொல்றது எல்லாமே பொய்தாங்க. உங்ககிட்ட மட்டும்தான் என் பேரையும், மதுரையில இருக்கேன்னு உண்மையும் சொல்லி இருக்கேன். செக்ஸியாப் பேசுற துக்கு ஆரம்பத்துல ரொம்பத் தயக்கமா இருந்துச்சு. என் ஃபிரண்ட்தான் ட்ரெய்னிங் குடுத்தா. அவ ரொம்ப நல்லாப் பேசுவா. இப்போ அவளையே மிஞ்சுற அளவுக்கு நான் பேசப் பழகிட்டேன். இப்போ இது எனக்கு ஒரு போதை மாதிரி ஆயிடுச்சு'' என்று அப்பாவியாகச் சொல்கிறார்.
நட்பு வட்ட எண்களில் தொடர்பு கொண்டு இன்னும் நிறையப் பெண்களிடம் பேசினோம். அதில், பலர் பேசியதை அச்சில் ஏற்றவே முடியாது. அந்த அளவுக்கு படுக்கையறைப் பேச்சு. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள்தான் அதிக அளவில் இந்த நட்பு வட்டத்துக்குள் வருகிறார்கள்.

இதுபோன்ற ஆபாசப் பேச்சு வியாபாரத்துக்குத் தடை விதிக்க முடியாதா? சென்னை சைபர் கிரைம் கூடுதல் உதவி கமிஷனர் சுதாகரைச் சந்தித்தோம். ''வேல்யூ ஆடட் சர்வீஸ் என்ற பெயரில் செல்போன் நிறுவனங்கள் இதுபோன்ற பல சேவைகளைச் செய்துவருகின்றன. ஆனால், இந்த சேவை அதிர்ச்சியாக இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால், உடனே நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

சட்டப்படி இதைத் தடுக்க என்ன வழி? பதில் சொல்கிறார் வழக்கறிஞர் சுந்தர்ராஜன்.  ''இந்த சேவை குறித்து பலர் எங்களிடம் முறையிட்டு உள்ளனர். நிச்சயமாக இது தடை செய்யப்பட வேண்டிய சேவை. ஆனால், செல்போன் நிறுவனங்கள் எந்த மாதிரியான சேவைகள் எல்லாம் வழங்கலாம் என்று 'டிராய்’ விதிமுறை எதுவும் வகுக்கவில்லை. அதனால், இந்த சேவையில் பணத்தைத் தொலைத்தவர்கள் டிராய் மற்றும் போலீஸில் புகார் செய்ய வேண்டும். இதுபோலத்தான், மார்க்கெட்டிங் எஸ்.எம்.எஸ். சேவையும் இருந்தது. தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்த பிறகுதான், டிராய் தனது சாட்டையைச் சொடுக்கியது. ஒரு காலத்தில் வெளிநாட்டு தொலைபேசி எண்ணைக் கொடுத்து, 'செக்ஸ் கால்’ என்று நாளிதழ்களில் ஏராளமான விளம்பரங்கள் வரும். அதைப்போலத்தான், இந்த சேவையை செல்போன் நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. பாதிக்கப்பட்டவர்கள் டிராய்க்கு இ-மெயிலில் புகார் அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும்'' என்றார்.

கோடிகளில் கொழிக்கும் செல்போன் நிறுவனங் கள், சில கோடி ரூபாய் லாபத்துக்காக இப்படி இளைய தலைமுறையைச் சீரழிப்பது நியாயமா?

- தேவதத்தன்


சேலம் ஆத்தூருக்கு அருகிலுள்ள  தலைவாசலுக்கு பக்கத்திலுள்ள  சதாசிவபுரம், சாத்தாப்பாடி  கிராமத்துக்குள் மப்டி வேசத்தில் நுழைந்த போலீஸார் ஊரை விட்டு திரும்பும் போது, போலீஸார் அதிர்ச்சியில் கிளம்பியுள்ளனர். நூறு மில்லி, ஐம்பது மில்லி என்ற அளவுகளில் பாலிதீன் பைகளில் கட்டப்பட்ட ஐந்து லிட்டர் அளவுள்ள கள்ளச் சாராயத்தோடு பள்ளிக்கூட்ட மாணவர்களையும்  அள்ளிச்சென்றதுதான்  அதிர்ச்சியான செய்தி..
சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் காவல் நிலைய எல்லையிலுள்ள கிராமங்கள் மிகவும் பிந்தங்கிய பகுதியாகவே காணப்படுகிறது. இங்குள்ள பல கிராமங்கள் நகரங்களில் இருந்து வெகு தூரத்திலிருப்பதால், பலகிராமங்களில் கள்ள சாராயம் சாதரணமாக விற்கப்படுவது வழக்கம்.

அவ்வபோது மதுவிலக்கு ஒழிப்பு பிரிவு காவலர்கள், சாதாரண உடையில் சென்று கிராமங்களில் சோதனை நடத்தி சாராயம் விற்பவர்களை கைது செய்துவருவது வழக்கம்.

நேற்று ஞாயிற்று கிழமை காலை, அப்படிதான் மப்டி போலீஸார் தலைவாசல் பகுதியிலுள்ள சதாசிவபுரம், சாத்தாப்பாடி ரோந்து சென்றபோது. போலீஸாரை பார்த்து சதாசிவபுரம் கிராமத்தின் எல்லையிலிருக்கும் முள் புதரில் இருந்து இரண்டு மாணவர்கள் எழுந்து ஓடியபோது போலீஸார் சந்தேகத்துடன் அவர்களை துரத்தி பிடித்தபோது, அவர்களிடம் நூறு மில்லி, ஐம்பது மில்லி என்ற அளவுகளில் பாலிதீன் பைகளில் கட்டப்பட்ட ஐந்து லிட்டர் அளவுள்ள கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்ததோடு அவர்களிடம் விசாரணை செய்தபோது, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி ரிசல்டுக்குகாக காத்திருக்கும் ராஜவேல் என்பவரின் மகன் ராஜசேகரும், ஆறாம் வகுப்பு முடித்து ஏழாம் வகுப்பிற்கு செல்லும் மாணவன் தனபாலும் சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இந்த இருவருக்கும் தினமும் நூறு ரூபாய் பணம் கொடுப்பதாக ஆசைகாட்டி, மாணவர்களை சாராயம் விற்க ஏற்பாடு செய்த 22 வயதான அருள் என்கிற கள்ளச்சாராய வியாபாரி என்பாது தெரிந்தது.
ஊரெல்லாம் டாஸ்மார்க் கடையை திறந்து வைத்து அப்பனை எல்லாம் குடிகாரர்களாக்கிய அரசாங்கம்..
எங்களை இன்னும் என்ன செய்ய போகிறது
-வெளிச்சம் அகஸ்தியா.