Showing posts with label Sex torched. Show all posts


சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 77 வயது சோமசுந்தரம் சிறையில் அடைக்கப்பட்டார். காரணம், மூன்று சிறுமிகளுக்கு ஆபாசப் படத்தை டி.வி-யில் போட்டுக் காட்டி, பிறகு பாலியல் பலாத்காரம் செய்தார் சோமசுந்தரம்.
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவனான பரத்ராஜ் செய்த சின்ன தவறுக்காக அந்த மாணவனை மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து சிறுநீரைக் குடிக்கச் சொல்லி சித்ரவதை செய்திருக்கிறார்கள்!

கோவை பள்ளி ஒன்றில் இரட்டைச் சடை போடாமல் பள்ளிக்குச் சென்ற ஐந்தாம் வகுப்புமாணவியின் தலைமுடியை வெட்டிவிட்டு, முட்டி போடச் சொன்னார் உடற்கல்வி ஆசிரியை.

தி.மு.க-வின் பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் கொத்தடிமையாக இருந்தவர் சிறுமி சத்யா. ஆறு மாதங்களுக்கு முன் பூப்பெய்திய சத்யா தொடர் வல்லுறவு காரணமாக எட்டு நாட்கள் சுய நினைவு இல்லாமல் இருந்து வலியும் வேதனையும் மிகுந்து இறந்திருக்கிறார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காப்பாற்ற சத்யாவின் உடலில் இருந்த விந்தணுக்களை அகற்றி காயங்களை மறைக்கச் சில மருத்துவர்கள் முயன்றிருக்கின்றனர்.
கடந்த சில வாரங்களில் மட்டும் பத்திரிகைகளில் பதிவான குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் செய்திகள் இவை!

இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவிகிதம் குழந்தைகள்தான். அதாவது சுமார் 44 கோடி குழந்தைகள் இருக்கிறார் கள். குழந்தைகள் தினம் கொண்டாடும் தேசத்தில், இன்று மிக மோசமாக சிதைக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான்!

இந்தியாவில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகளில் முக்கியமானவை... வகுப்பறை வன்முறை, பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர் வன்முறை, குழந்தைகளைக் கடத்திக் குற்றவாளிகளாக் கும் வன்முறை.


வகுப்பறை வன்முறைகள்
வலி உண்டாக்கக் கூடிய அல்லது காயப்படுத்தும் உள்நோக்கத்துடன் குழந் தைகளிடம் பேசுவதும் தண்டிப்பதும் வகுப்பறை வன்முறைதான். வகுப்பறைக்கு உள்ளேயோ, வெளியேயோ தனி நபராகவோ அல்லது சில பேர் இணைந்தோ உடல்,மன ரீதியாகக் குழந்தைகளைத் துன்புறுத்துவது தான் பல பள்ளிகளில் நடக்கிறது. ''கல்வி உரிமைச் சட்டப்படி வகுப்பறையில் எந்தக் குழந்தையையும் முட்டாள், மக்கு என்றெல்லாம் திட்டக் கூடாது. அப்பா, அம்மாவின் தொழில்குறித்து இழிவாகப் பேசக் கூடாது. சான்றிதழ்களில் மட்டுமே சாதி குறிப்பிடப்பட வேண்டும். வகுப்புஅறையில் எந்த மாணவனிடமும் 'நீ என்ன சாதி?’ என்று கேட்கக் கூடாது. பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்று எந்த மாணவனையும் அவமானப்படுத்தக் கூடாது. எட்டாம் வகுப்பு வரை ஒரு மாணவனை ஃபெயில் ஆக்கக் கூடாது என்றால், ஃபெயில் ஆகாத அளவுக்கு மாணவனைப் படிப்பில் முன்னேற்ற வேண்டும் என்று அர்த்தம்.           

அதைவிடுத்துக் கண்டுகொள்ளாமல் இருப்பதல்ல, ஓர் ஆசிரியரின் பொறுப்பு. ஆனால், நம் சமூகத்தில் உள்ள நிலைமை என்ன?

சமூகத்தில் நம்மில் பலர் நினைப்பதுபோல ஆசிரியர் பணி ஒன்றும் அத்தனை சுலபமானது அல்ல. கிட்டத்தட்ட எதிர்காலச் சமூகத்தையே கட்டமைக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. கிராமப்புறங்களில் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்குக் குழந்தைத் திருமணம் நடந்தால், அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும்கூட அந்த மாணவி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் உண்டு. இத்தனை பொறுப்புகளை அரசியல் சட்டமே கட்டாயமாக்கி இருக்கிறது. தன் கடமையில் இருந்து மீறுவது, மன உளைச்சலை ஏற்படுத்துவது,  அத்துமீறுவது என ஆசிரியர் செயல்பட்டால் 17(ஆ) சட்டப்படி ஆசிரியரை சஸ்பெண்ட் அல்லது பணிநீக்கம் செய்யலாம். ஆனால், நிஜத்தில் நடப்பது என்ன? பல வன்முறை களை ஆசிரியர்கள்தான் நடத்துகின்றனர்'' என்கிறார் எழுத்தாளரும் கல்வியாளருமான 'ஆயிஷா’ நடராஜன்.

ஆசிரியர்கள் செய்யும் தவறுகளை மாவட்டக் கல்வி அதிகாரி, கூடுதல் கல்வி அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் போன்றவர்களிடம் சொல்லலாம். மெட்ரிக் பள்ளி என்றால் மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் புகார் தெரிவிக்கலாம். இப்படி அளிக்கப்படும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 48 மணி நேரத்தில் விசாரணை செய்ய வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர் வன்முறை
அரசு பல உத்தரவாதங்களைத் தந்தாலும் 66 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்தபாடில்லை. குழந்தை உழைப்பு சம்பந்தப்பட்ட வீட்டுக்கு அவமானம் இல்லை; ஒரு நாட்டுக்கே அவமானம்.

''எந்தக் கொள்கையானாலும் திட்டமா னாலும் அதில் குழந்தைகளைக் கவனத்தில் கொள்ளாமல் உருவாக்கப்படுமானால் அவை அரைகுறையாக இருக்குமே தவிர, முழுமையானதாக இருக்காது. குழந்தைகள் எப்படித் தொழிலாளர்கள் ஆகிறார்கள்? 'ஸ்லம்லஸ் சென்னை’, 'விஷன் 2020’ என்று கவர்ச்சிகரமான திட்டங்களைச் சொல்லி மக்களை அப்புறப்படுத்தும்போது குழந்தை கள் படிப்பதை நிறுத்திவிட்டுத் தொழிலாளர் களாகின்றனர். நெல் விளையும் பூமியை பிளாட் போட்டு விற்பதால் சென்னை, திருப்பூர், பெங்களூரு எனத் திசையெங்கும் செல்பவர்கள் குழந்தைகளோடு அல்லல் படுகிறார்கள். பிழைப்புக்காகக் குழந்தை களும் வேலை செய்ய வேண்டிய கட்டா யம் ஏற்படுகிறது'' என்கிறார் குழந்தை உழைப்பு எதிர்ப்புப் பிரசார இயக்கத் தலைவர் தேவநேயன்.

''குழந்தைத் தொழிலாளர்களைத் தடைசெய்வதற்கான சட்டங்கள் சரியாகச் செயல்படுத்தாததால்தான் அனைத்துப் பணி இடங்களிலும் குழந்தைகளைக் கடுமையான பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தொழிலா ளர் துறை நடத்திய ஆய்வில் 1.07 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட் டது. ஆனால், இதன் விளைவு என்ன? குழந்தைத் தொழிலாளர்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், கூலிரீதியாகவும் அவர்கள் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள்'' என்கிறார் தேவநேயன்.
பாலியல் வன்முறைகள்
இந்தியாவில் உள்ள ஐந்தில் மூன்று குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றன என்றால், நீங்கள் அதிர்ச்சி அடையலாம். ஆனால், அதுதான் உண்மை.
''தனக்குப் பிரியமானவர் தன் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளுவதையோ, தலையில் தட்டிக் கொடுப்பதையோ, மடியில் அமர்த்திக்கொண்டு கதை சொல்வதையோ எல்லாக் குழந்தைகளுமே விரும்புவார்கள். இந்த விருப்பத்தைத்தான் குழந்தைகளுக்குப் பிரியமானவர்களே அவர்களை வேட்டையாடப் பயன்படுத்திக்கொள்கின்றனர்'' என்கிறார் வாழ்வியல் பயிற்சியாளர் ஷெரின்.  

''பாலியல் கொடுமைக்கு உள்ளான குழந்தைகள் அந்தக் கசப்பான அனுபவத்தை மனதின் ஆழத்தில் புதைத்து மறக்கவே முயல்வார்கள். அழிக்க முடியாத அருவ ருக்கத்தக்க கறை தங்கள் மீது படிந்து விட்டதாகவே அவர்கள் உணர்வார்கள். இதனால் பெற்றோரின் அன்பை இழந்து விடுவோமோ என்று ஏகமாகப் பயப்படுவார்கள். அதேசமயம், தான் பாலியல் கொடுமைக்குஆளாக் கப்பட்டதை வெளியே சொன்னால், அதை மற்ற வர்கள் நம்புவார்களா என்ற குழப்பமும் அவர் களை அலைக்கழிக்கும். ஏனெனில், குழந்தை களுக்கு எப்போதுமே அன்பும் அரவணைப்பும் தேவைப்படும்.

இத்தகைய சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன? குழந்தையின் முழு நம்பிக்கைக்கு நாம் பாத்திரமாக வேண்டும். நடந்ததைச் சொல்வதில் தவறே இல்லை என்று குழந்தையிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டும். குழந்தை சொல்வதை முழுவதும் நம்ப வேண்டும். நடந்தவற்றுக்கு குழந்தை எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதை ஆணித்தரமாகக் கூற வேண்டும். இவை போக, பல தடுப்பு நடவடிக்கைகளும் தேவை. குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே தற்காப்பு விவரங்களையும் அவர்களது உடலைத் தொடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதையும் மனதில் பதியவைக்க வேண்டும். வன்மத்தோடு யார் நெருங்கினாலும் சத்தம் போடுவது,  கத்துவது, ஹேர்பின்னால் குத்துவது என்று தன் எதிர்ப்பைத் தைரியமாக வெளிப்படுத்தப் பழக்க வேண்டும்.  

இதில் கல்வி நிலையங்களுக்கும் பெரும் பொறுப்பு உண்டு. ஆனால், இப்போது எல்லாம் அந்த சரணாலயங்களிலேயே குழந்தைகள் வேட்டையாடப்படும் கொடூரத்தை எங்கு சென்று சொல்வது?'' என்கிறார் ஷெரின் காட்டமாக.
குழந்தைகள் கடத்தல், வன்முறைகள்
தனி மனித விரோதத்திலும், பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பணத்துக்காகவும் குழந்தைகள் கடத்தப்படுவது அடுத்த அதிர்ச்சி. இதுகுறித்து வழக்கறிஞர் அஜிதா பேசுகிறார்: ''ஆயுத வியாபாரம், போதைப்பொருள் கடத்தல், குழந்தைக் கடத்தல்  என்ற மூன்று குற்றங்களும் உலக அளவிலான பெரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இந்தியா, பர்மா, வங்க தேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் குழந்தைகள் அதிகம் கடத்தப்படுகின்றனர். இப்படிக் கடத்தப்படும் குழந்தைகளைச் சூதாட வைத்தல், பிச்சை எடுக்கவைத்தல், பாலியல் தொழிலுக்கு உட்படுத்தல் என்று பல்வேறு குற்றங்கள் செய்து வியாபாரப் பொருளாக்கிவிடுகின் றனர். வசதியானவர்களின் பிள்ளை களைவிட அதிகம் கேள்வி கேட்காத, வறுமை நிலையில் உள்ள குழந்தை களே கடத்தப்படுகின்றனர். கல்வி யிலும் பொருளாதார நிலையிலும் மாற்றம் உண்டாவது மட்டுமே இந் நிலையில் மாற்றத்தை உண்டாக்கும். 18 வயதுக்கு உட்பட்ட 63 சதவிகிதக் குழந்தைகளுக்குத் திருமணம் நடப்பதால் சிறு வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது, அடிப்பது, மிதிப்பது என்று 53 சதவிகிதம் குடும்ப வன்முறைகள் நடக்கின்றன.

தற்போது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த முழுமையான சட்டம் நடைமுறையில் இல்லை. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புச் சட்டம் நகல் வடிவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அது முழு வடிவம் பெற்றால் குழந்தைகள் மீது வன்முறை நிகழ்த்துபவர்களுக் குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். தற்போது பாலியல் வன்முறை செய்யும் நபருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்யும் நபருக்கு மரணதண்டனை வரைக்கும் தண்டனைகள் தரப்படுகின்றன. ஆனால், இதில் பல சட்டச் சிக்கல்கள் இருப் பதால் பல குற்றவாளிகள் எளிதாகத் தப்பித்துக்கொள்கின்றனர். எனவே, 'என் நாட்டில் வாழும் எந்த ஒரு குழந்தையும் எந்த விதத்திலும் பாதிக் கப்படாது’ என்பதை அரசியல் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் சட்டங்கள் முழுமையாக வேலை செய்யும்!'' என்கிறார் அஜிதா தீர்க்கமாக.
குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் சாரதா சீனிவாசன் குழந்தைகளுக்குத் தர வேண்டிய பயிற்சிகள் குறித்துப் பேசுகிறார்:

''குழந்தைகள் தங்களுக்கு என்ன நடந்தாலும் அதைத் தாயிடமோ, தந்தையிடமோ வெளிப்படையாகச் சொல்லும் சூழல் வீட்டில் வேண்டும். தொடக்கப் பள்ளிகளிலேயே உடல் அங்கங்கள்குறித்த தெளிவை ஏற் படுத்த வேண்டும். உடலமைப்பை வரைந்து காட்டி அந்த இடங்களில் யாராவது தவறாகத் தொட்டால் உதவி என்று கத்தச் சொல்லலாம். அந்த இடத்தைவிட்டு ஓடிவரச் சொல்லிக் கொடுக்கலாம்.  
நீச்சல் குளத்துக்குக் குழந்தைகள் சென்றால் அதிக கவனம் செலுத்த வேண்டும். கோச், டிரைவர் உள்ளிட்ட அத்தனை பேரும் எப்படிப் பழகுகிறார்கள் என்பதைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். குழந்தையுடன் பெற்றோர் அவசியம் சென்று வர வேண்டும்.

காரில் டிரைவரை நம்பி குழந்தையை அனுப்பக் கூடாது. அம்மாவோ, அப்பாவோ குழந்தையைப் பள்ளியில் விட்டு வர வேண்டும். ஆட்டோ, வேனில் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புபவர்கள் டிரைவருடைய செல்போன் எண், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

பள்ளியிலோ, வெளியிலோ குழந்தைகளைக் குழுவாகச் செல்ல அறிவுறுத்த வேண்டும். தனியாகச் செல்ல அனுமதிக்கக் கூடாது'' என்கிறார்:
இவை எல்லாம் எங்கோ தூர தேசத்தில், முகம் அறியாக் குழந்தைகளுக்கு நிகழும் கொடுமைகள் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு அருகில்... ஏன் உங்கள் வீட்டிலேயே இருக்கும் குழந்தையும் இந்தக் கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம். இப்படியான சூழ்நிலைகளைக் குழந்தைகளுக்குப் புரியவைத்து, அவர்களை அதை எதிர்கொள்ளப் பழக்குவது பெற்றோரின் மிக முக்கியமான கடமை. ஏனெனில், பெரும்பாலான குற்றங்களில் சம்பந்தப்பட்டு இருப்பவர்கள் குழந்தைகளின் மிக நெருங்கிய உறவினர்தான். எனவே, குழந்தைகள் வன்முறை குறித்த விழிப்பு உணர்வு பெற்றோர்களுக்குத்தான் இப்போதைய அதிஅவசியத் தேவை!


-க.நாகப்பன்
ஓவியங்கள் : பாலமுருகன்

நன்றி: ஆனந்த விகடன்.1.08.10



உங்கள் வீட்டில் யாராவது யாருக்கும் தெரியாமல் போனில் திருட்டுதனமாக பேசுகிறார்களா?... இல்லை அவர்களின் நடவடிக்கைகளில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறதா? இந்த கட்டுரையை தவறாமல் படிங்க:

ஒரு வருடத்திற்கு முன்னால் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த 17 வயது அனுவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

தன்னுடைய போனுக்கு வந்த  ராங்க் காலை நீங்க யாருங்க என பேச்சி விட்டு ராங்க் கால் என சொல்லிவிட்டு போனை துண்டித்து விட்டார். அதற்கு அடுத்த நாளும் அந்த கால் இவர் துண்டித்து விடுகிறார்.. ஒரு கட்டத்தில் எதிர் முனையில் பேசிய நபர் நைசாக பேசி… அந்த பெண்ணை காதலிப்பதாக சொல்லியிருக்கிறார். காதல் கண்ணை மறக்கும் என்பதுபோல் பெற்றவர்களின் கண்ணீரை மறைந்து விட்டு ராஜுடன் போனில் பேசினார்.

ஒரு கட்டத்தில் உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை எனும் நிலைக்கு தள்ளப்பட்ட அனு, வீட்டில் இருப்பது கஸ்டமாக இருக்கிறது நீ வந்து என்னை பொண்ணு கேளு என சொல்ல, எங்க வீட்டில் ஒரே கொஞ்சம் பிரச்சனையா இருக்கு, வேணா நீ வந்துடு நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு காப்பாத்துறேன் என்னை நம்பி வா என அழைக்க, காதலன் பேச்சில் மயங்கிய அனு வீட்டை விட்டு வந்து விடுகிறார்…..
  1. ·         காதலியாக இருந்து விபச்சாரியாக மாற்றப்பட்ட  அனு அனுபவித்த கொடுமை……..
  2. ·     இப்படியே பல பெண்களை சீரழித்த 9 பேரை கைது செய்ததன் பின்னனியில் வெளிச்சம் ….
  3. ·         செல்போனால் சீரழியும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை காப்பாற்ற என்ன செய்ய போகிறோம்


தொடர்ந்து பார்க்க: புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியான பதிவை..


நன்றி; புதிய தலைமுறை மற்றும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் நடந்தது என்ன குழுவினருக்கும்

                                                    -வெளிச்சம் நந்தினி


''தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கை ஒன்று, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 'இந்திய அளவில் கடந்த ஆண்டில் மட்டும் 7,379 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மனஉளைச்ச லால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும்’ சொல்கிறது அந்த அறிக்கை. 

2011-ம் ஆண்டு இணையதளப் பயன்பாடு குறித்துச் செய்யப்பட்ட ஆய்வில், உலக அளவில் இந்தியாவும் மாநில அளவில் தமிழகமும் முதலிடத்தில் உள்ளன. மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் மாணவர்களால் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை செக்ஸ் என்பது தான்'' இதுபோன்ற அதிர்ச்சிகளை அடுக்கிக் கொண்டே போகிறார்  'வெளிச்சம்’ என்ற அமைப்பை நடத்திவரும் ஷெரின். 'மாணவர்களே காதலியுங்கள்’ என்ற வித்தியாசமான புத்தகம் மூலம் இளைய தலைமுறையினரின் கவனத்தை ஈர்த்திருக்கும் அவரிடம் பேசினோம்.
''படிப்பைவிட, பாலியல் பிரச்னைதான் பெரும்பாலான மாணவர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்தின் பல பள்ளிக்கூடங்களில் நடந்த மருத்துவப் பரிசோதனையில், 320 மாணவிகள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. முகமே தெரியாத ஒருவரை விரும்பும் காதல், புத்தகத்தோடு கர்ப்பத்தையும் சுமக்கும் மாணவிகள், காதல் என்றால் என்னவென்று புரியாமல், அதில் தோல்வி கண்டு தற்கொலைக்கு ஆளாகும் மாணவிகள் என்று தினமும் பல சம்பவங்கள் நம்மைச் சுற்றி நடந்துகொண்டே இருக்கின்றன.

புரிதல் இல்லாத குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காகவும் வசதி இல்லாத குழந்தைகளைப் படிக்க வைக்கவும் ஹெல்ப் லைன் ஆரம்பித்தோம். அதில் 90 சதவிகிதம் மாணவர்கள் காதல் சந்தேகங்களைத்தான் தயங்கித் தயங்கிக் கேட்கிறார்கள். 'எனக்கும் என் காதலிக்கும் சண்டை. நான் ஐ-பாட் கேட்டும் தரவில்லை என்றதால் காதலியைக் கைகழுவி விட்டேன்’ என்று கேஷ§வலாகச் சொல்கிறார்கள்.

ஒரு மாணவி தன் மாமாவுடன் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத சென்னைக்குச் சென்றாள். ரூம் எடுத்துத் தங்கி தேர்வுக்குப் புறப்பட்டாள். தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி டி.வி. பார்க்க உட்கார, அதில் ஆபாசப் படம் ஓடுகிறது. 'என்ன மாமா அசிங்கமா இருக்கு’ என்று வாயைத் திறக்கும்முன் இழுத்து அணைத்த மாமா, பாலியல் தொந்தரவு செய்கிறார். தப்பித்து வீடு வருகிறார் மாணவி. அம்மாவிடம் நடந்ததைச் சொல்ல நினைப்பதற்குள், 'இப்போதான் மாமா போன் செஞ்சார். பஸ் ஏத்திவிட்டேன். பத்திரமா வந்தாளான்னு அக்கறையா விசாரிச்சார். உன்மேல மாமாவுக்குத்தான் எத்தனை அக்கறை’ என்று தன் அண்ணனை மெச்சுகிறாள் அந்தத் தாய். தனக்கு நேர்ந்த கொடுமையை அம்மாவிடம் சொல்ல முடியாமல்... அப்பா விடமும் பேச முடியாமல் தனக்குள் புழுங்கித் தவிக்கிறாள். இது ஒரு சாம்பிள்தான்... இப்படி நிறையவே நடக்கின்றன.
காதல், செக்ஸ் பற்றிப் பேசக்கூடாது என்று பெற்றோர் நினைக்கின்றனர். அதைப்பற்றி விவாதிக்கவே கூடாது என்று கல்விநிறுவனங்கள் கருதுகின்றன. பாலியல் கல்வி தரமறுக்கும் சமூகத்தில்தான் அந்தரங்க ரகசியங்களைச் சொல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பகிரங்கமாக ஒளிபரப் பாகின்றன. அப்பாவும் அம்மாவும் கற்றுத்தராத சாட்டிங், காதல் பாடங்களை மாணவர்கள் ஊடகங்கள் மூலமாக தாங்களாகவே கற்றுக்கொள்கிறார்கள். 'அவன் நல்லவன் என்று நம்பி ஏமாந்துவிட்டேன். நான் சாகப்போகிறேன்’ என்று, தற்கொலைக்கு முயற்சி செய்த ஏராளமான மாண விகளை எனக்குத் தெரியும்.
இந்தச் சூழலில் சிக்கிய மாணவிகள், தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். தானாகவோ, நண்பர்கள் மூலமோ பெற்றோரிடம் நடந்ததைச் சொல்லவேண்டும். பாலியல் தொந்தரவை நினை த்து வலிகளோடு, மனஅழுத் தத்தில் வாழ்வதைவிட அநீதியை எடுத்துச் சொல் வதில் தவறில்லை. அத னால் மாணவ-மாண விகளுக்கு பாலியல் குறி த்த புரிதல் தேவையாக இரு க்கிறது. பிரச்னைகளை எப்படிக் கையாள்வது என்பதையும் அவர்களுக்குச் சொல்லித்தரவேண்டும்.

பள்ளிகளில் நீதிவகுப்புகள் எடுத்தால் மட்டும் போதாது. பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்ற சுயஆராய்ச்சியை வளர்த்தெடுக்கவேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா போன்றவற்றில் சித்தி ரிக்கப்படும் பாலியல் தூண்டல்களையும், பழிக்குப்பழி வாங்கும் உணர்வுகள் பற்றியும் விவாதத்துக்கு உட்படுத்தினால் அதைப் பின்பற்ற மாட்டார்கள். மாணவர்களுக்கு பாலின ஈர்ப்பு, ஹார்மோன்கள் செயல்பாடு, தொடுதல், நட்பு, காதல் பற்றி புரிகிற மாதிரி பக்குவமாக விளக்கவேண்டும். காதல் என்பது ஒரு ஆண், பெண்ணைக் காதலிப்பது மட்டுமல்ல. தேசம், மொழி மீது செலுத்தும் அன்பும் காதல்தான் என் பதை மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

'உன்னை நீயே காதலி, உன் திறமை களைக் கண்டுகொள்வாய். அறிவைக் காதலி, புத்தகங்களில் இடம் பெறுவாய். பெற்றோரைக் காதலி, பாசத்தைக் உணர்வாய் இயற்கையைக் காதலி, தலைமுறை உன்னை வணங்கும். தேசத்தைக் காதலி, வரலாறு உன்னைப் போற்றும்... என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். பெற்றோரும் ஆசிரி யர்களும் கல்வியைத்தாண்டி கவனம் செலு த்தினால் பிள்ளைகள் வாழ்வு பாழாகாது'' என்கிறார் அக்கறையுடன்.

பெற்றோர்களும், ஆசிரியர்களும் முதலில் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்!

-க.நாகப்பன் படம்: வீ.நாகமணி 

நன்றி: ஜூனியர் விகடன்.17.3.12






 சமூகத்தை பக்குவப்படுத்துகிற பொறுப்பும் கடமையும் உள்ளவர்கள் தானே ஆசிரியர்கள், அந்த ஆசிரியர்களுக்காக தத்துவார்த்தமான புனிதத்தை  தற்போதைய ஆசிரியர்கள் மறந்து போனதற்கான காரணங்களை தேடினால் விடை தெரியா கணக்காகி கிடைக்கிறது...

ஒரு பக்கம் கல்வி காசாகிப்போன சூழல் இன்னொரு பக்கம் சமச்சீர்கல்விக்கு காத்து கிடந்தது போக காயங்களுக்கு ஒட்டு போடலாம் ஆனால் புத்தகங்களுக்கு பேண்டேஞ்  போட்ட அவலமும் இங்குதான் நடக்கிறது..

எந்தவிதமான லாப நோக்கமில்லாமல் சொல்லி கொடுத்த எங்கள் ஆசிரியர்களே எங்களுக்கு கடவுளாக காட்சியளித்தாகள்... அவர்கள் எங்களுக்கு ஒழுக்கத்தை ஒழுக்கமாய் சொல்லி கொடுத்ததார்கள் அதனால் எங்களை  பலருக்கு ஆசிரியர்களே ரோல் மாடலாக இருந்தார்கள் அது ஒரு கனாக்காலம்...


இப்ப எங்க உண்மையான ஆசிரியர்கள் இருக்கா...

இந்த கேள்வி எல்லோருடைய மனதிலும் எழவே செய்கிறது அதற்கு சில காரணங்கள் இருக்கச்  செய்கிறது...

கும்பகோணம் பள்ளி  தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகியபோது எத்தனை ஆசிரியர்கள் காயம் பட்டார்கள்... என  சொல்ல முடியுமா?  நீங்க சொல்லலாம் வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் 11 குழந்தைகளை மீட்ட பின்னர் உயிரிழந்த ஆசிரியை சுகந்தி யை இத்தனை வருடங்களாக சுகந்தி மட்டும் தான் விதிவிலக்கு  அதன்பிறகு எத்தனை வேன் விபத்துக்கள் எத்தனை பலிகள் தமிழகம் முழுக்க இவை யெல்லாம் கல்வி பிசினஸ் ஆனதன் அடையாளம்  ...

பள்ளிக்கூட பொண்ணுங்களை சில்மிசம் செய்த ஆசிரியர்கள், பிராக்டிக்கள் மார்க் போட முத்தம் கேட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் பிவிசி பைப்பால் அடிச்சதால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவனென படிக்க அனுப்பிய பிள்ளைகளை பாடையில் அனுப்பிய கொடுமைகள் இங்கேதான் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.....

 இதுமட்டுமல்லாமல்  ஆசிரியர்கள் அழககழகான விதவிதமான காஸ்டியூம்களில் புடவைகளில் காட்டும் அக்கறையை ஒரு மாணவனின் உண்மையான வளர்ச்சியில் காட்டியதுண்டா? அப்படி காட்டியிருந்தால் இளம்குற்றவாளிகள் குறைந்திருக்க கூடும்..ஆனால் இவர்கள் பாடத்தை மட்டுமே எடுக்கிறார்கள் நமக்கொன்ன ஒரு கேள்வி என்றால் வெறும் படிப்பாளிக்ள் இந்த நாட்டுக்கு தேவையா? அப்படி வெறும் படிப்பாளிகளை உருவாக்க இவங்க பள்ளிக்கூடம் நடத்துறாங்களா இல்லை தொழிற்சாலையா நடத்துறாங்களா......

மீண்டும் சொல்லுகிறோம் சமூகத்திற்கு நல்ல படிப்பாளிகளை அல்லாமல் படைப்பாளிகளை உருவாக்கிய ஆசிரியர்கள் இருந்ததால் தான் இந்த தேசம் இன்னும் இருக்கிறது...

நாம் விரும்புவது ஆரோக்கியமான தேசத்தை நல்ல எதிர்காலத்தை கட்டமைக்கிற ஆசிரியர்களைத்தான் .....

ஒவ்வொரு  நாளும் கிடைக்கும் படிப்பினைகளில்  நீங்களும்  எமக்கு ஆசிரியர்களே..

எம்மை வளர்த்தெடுக்க .
உழைக்கும் நீங்களும் எமக்கு ஆசிரியர்களே!
உங்களுக்கு 
எம் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்








பெண்குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வெளிச்சம் மாணவர்கள்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக  நாம் பல முயற்ச்சிகளை மேற்கொண்டோம்…(எடுத்துகாட்டு)… மேலும் கோவை மாநகரம் மற்றும் தமிழக மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்குள் கடந்த ஆண்டில் மட்டும் 26 பெண் குழந்தைகள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளனர். இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் மறக்காத சம்பவம் கோவையில் கொள்ளப்பட்ட அக்கா, தம்பி

கடத்தல், கற்பழிப்பு, பாலியல் சித்ரவதை வன்முறைகள் பெண்கள் மீது மட்டுமின்றி, ஏதுமறியா பெண் குழந்தைகள் மீதும் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான சம்பவங்கள் பெற்றோராலும், உறவினர்களாலும் மறைக்கப்படுகின்றன. வெளியில் தெரிந்தால் அவமானம் நேரிடும் எனக்கருதி சம்பவத்தை மூடி மறைப்பதால், சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர். பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகளுக்கு கொடூர மரணம் நேரிடும்போது மட்டுமே வெளிச்சத்துக்கு வருகின்றன. கடந்த ஆண்டில், கோவை நகரில் பள்ளிக்குச் செல்லவிருந்த 11 வயது பெண் குழந்தையும், உடன் 9 வயதான தம்பியும் கால் டாக்சி டிரைவரால் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு பின் கொடூரமாக கொல்லப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இத்துயர சம்பவத்தில் தொடர்புடைய கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், போலீஸ் "என்கவுன்டரில்' சுட்டுக்கொல்லப்பட்டான். இச்சம்பவத்துக்கு பிறகாவது, குழந்தைகளை பாலியல் சித்ரவதை செய்யும் நபர்கள் மத்தியில் அச்சம் ஏற்படுமென போலீசாரும், பொதுமக்களும் கருதினர். ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் கோவை மாநகராட்சி பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமி, தனது மாமாவால் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு பின் கொலை செய்யப்பட்டாள்.

இதுபோன்ற சம்பவங்கள் பெண் குழந்தைகளின் பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. உண்மையில், மேற்கண்ட சம்பவங்கள் கொலையில் முடிந்ததால்தான் விஷயம் வெளியுலகுக்கு தெரியவந்தது. வெளியுலகுக்கு தெரியாமலும் பல சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.கடந்த ஆண்டில், கோவை மாநகரில் 4 பெண் குழந்தைகள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகினர். ஈவு இரக்கமின்றி குழந்தைகளின் மீது பாலியல் வக்கிரத்தை காட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் உள்ளது. அதே போன்று, தமிழக மேற்கு மண்டலத்தில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக மொத்தம் 26 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில் கோவை மாவட்டத்தில் 2, ஈரோட்டில் 5, நீலகிரியில் 1, திருப்பூரில் 5, சேலத்தில் 2, நாமக்கல்லில் 3, தர்மபுரியில் 1 முறையே பெண் குழந்தைகள் பாலியல் சித்வதைக்கு உள்ளாகினர். தவிர, குழந்தைகள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 3 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு, தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி ஆகியோர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து வக்கீலும், கோவை பாரதியார் பல்கலை செனட் உறுப்பினருமான சண்முகம் கூறியதாவது:                     
சிவணான்டி ஐ.பி.எஸ் 
                                 பனிரெண்டு வயதுக்கு உட்பட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பெரும்பாலும் அறிமுகமான நபர்களாலேயே நடக்கின்றன; அறிமுகமில்லா நபர்களுடன் பெண் குழந்தைகள் செல்வதில்லை. கோவையில் பள்ளிக்குழந்தைகள் இருவர் காரில் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம், நன்கு அறிமுகமான டாக்சி டிரைவரால் நடந்தது. சவுரிபாளையத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர், அந்த சிறுமியின் மாமா முறை உறவினர்.ஏற்கனவே, தங்களுக்கு அறிமுகம் உள்ளதால் பெண் குழந்தைகள் தங்களுக்கு நேரிடப்போகும் ஆபத்தை உணராமல் உடன் சென்றுவிடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க பெண் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். "சாக்லெட் வாங்கித்தருகிறேன், விளையாட்டு பொருள் வாங்கித்தருகிறேன் என யாராவது அழைத்தால் உடன் செல்லக்கூடாது' என, அறிவுறுத்த வேண்டும். கூடுமானவரை பெண் குழந்தைகளை வீட்டில் தனியே விட்டுச் செல்வது; உறவினர் வீடுகளில் விட்டுச் செல்வது, போன்ற செயலை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், தங்களை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோரும் சொல்லித்தர வேண்டும். பாலியல் வன்முறைகளை போலீசாரால் தடுப்பதற்கான வாய்ப்பு மிக, மிக குறைவு; ஆனால், பெற்றோரும், குழந்தைகளும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தவிர்க்க முடியும். இவ்வாறு, வக்கீல் சண்முகம் தெரிவித்தார்.

நன்றி: தினமலர்

வெளிச்சம் வெளிக்கொண்டு வந்த மாணவி பிரச்சனை ஓர் இணைய தளத்தில்: http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=2270


மகளீர் தின  விழாவில்  "செக்ஸ் டார்ச்சர்க்கு '  ஆளான பெண்ணை காப்பாற்றிய வெளிச்சம்

3வது மனைவிக்கு "செக்ஸ் டார்ச்சர்': தலைமை ஆசிரியர் போலீசார் கைது

புனிதாவிற்கு ஏற்ப்பட்ட கொடுமையை பிறகு பதிவு செய்கிறோம்.. அதற்கு முன்பாக தினமலர் செய்தியை படியுங்கள்  


கொளத்தூர் : மூன்றாவது மனைவிக்கு "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.சென்னை கொளத்தூர் முத்தமிழ் நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகன் வரதராஜன்(49). இவர், திருவொற்றியூரில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். உடல் நலம் பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இதையடுத்து வரதராஜன், சேலத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி(35) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இரண்டே மாதங்களில் விஜயலட்சுமி விவாகரத்து பெற்று பிரிந்தார்.அதன்பின், வரதராஜன் மகன், மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடலூரைச் சேர்ந்த புனிதா(45) என்பவர் தனக்கு மணமகன் தேவை என பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்திருந்தார். அதைக் கண்ட வரதராஜன், அவரை தொடர்பு கொண்டார். அவர் சென்னை தி.நகரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வரதராஜன், கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் புனிதாவை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தனது குரூர விருப்பப்படி, புனிதாவுக்கு "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்தார். அவரை சந்தேகித்தார். பல நாள் இப்பிரச்னையை அவர் தாங்கிக் கொண்டார். நேற்று முன் தினம் வழக்கம் போல் அவர் "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்தார்.மேலும், புனிதாவை கண்மூடித்தனமாக தாக்கி, அறையில் தள்ளி கதவை பூட்டிவிட்டு, வெளியில் சென்று விட்டார். அறைக்குள் தவித்த புனிதா, மொபைல் போன் உதவியுடன் சென்னையில் உள்ள "வெளிச்சம்' என்ற பெண்கள் அமைப்பிற்கு தகவல் கொடுத்தார். அந்த அமைப்பினர் கொளத்தூருக்கு சென்று, புனிதாவை மீட்டனர். அவர்கள் உதவியுடன், புனிதா தனது கணவர் பற்றி, கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அவரைக் கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். 

நன்றி: தினமலர்





சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்

ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…