Showing posts with label students. Show all posts


 What change of medium means to these students  
Special measures on to orient Tamil medium students to the atmosphere in engineering colleges


New campus, new friends, new faculty members and most importantly a new language for students from Tamil medium schools who have secured admission to engineering colleges.
Around 46 per cent of the students admitted to various streams in the Tamil Nadu Engineering Admissions (TNEA) 2011 are from Tamil medium schools.

Rate of integration
How well are these students integrated into courses conducted primarily in Tamil?
Having studied in a Tamil medium school, K. Balaji, a first-year student of College of Engineering, Guindy, initially found it extremely difficult to grasp the concepts taught in class. “It has been two weeks now. Though it is a little difficult to understand lectures and comprehend the textbooks, I am managing better,” he says.

There are some coaching classes in the college conducted in English to help students understand classes better. “I plan to attend these classes so that I can get doubts cleared ,” he says.
In many instances students who are unable to adjust to the course and the urban culture tend to get disheartened, note professors.

D. Shireen, coordinator, Velicham, an NGO that works with students, says that there are many students who score above 1,100 in the class XII examinations, but once they join an English medium course, some of them drop out. “It is more common in professional courses, since such students form a minority in these institutions,” she says.

Communication skills
As part of the one-week induction programme for students, the Anna University of Technology (AUT), Chennai, trains students in communication skills.
“A large section of the students comprises first-generation learners who come from the Tamil-medium schools. But since students in our institutions are academically bright, it is easy for them to pick up the language quickly,” says C. Thangaraj, Vice- Chancellor, AUT. At the Anna University, the faculty members help out the students from Tamil-medium schools when they have a difficulty.
“There are no bridge classes, but we expect the students to pick up the language from the English classes conducted during the first two years. The language teachers guide the students,” says M. Sekar, Dean, College of Engineering, Anna University.
Special coaching classes to help students understand the subject better are conducted in colleges. “The classes are conducted in English but the faculty members clear our doubts there,” he says.

Preparatory material
It is not just English language bridge course that institutions focus on.
The AUT-Chennai also has preparatory material in mathematics which will be distributed to the constituent colleges.
“This material has been prepared by faculty member of Anna University and IIT-M. It will help students understand the application of basic maths in the engineering course. Self-financing colleges can also procure them from the university,” says Mr. Thangaraj.


  • “Students who are unable to adjust to the course and urban culture often get disheartened”



  • Induction classes and special coaching classes help students adjust to medium




  • Thanks : The Hindu 


    பொறியியல் படிக்க கொள்ளை ஆசையுடன் விண்ணப்பித்தபோதும், படிப்பிற்கான கட்டணம் செலுத்த முடியாத அளவுக்கு வறுமை வாட்டுவதால், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்களின் பொறியியல் படிப்பு, எட்டாக்கனியாக மாறியுள்ளது. எஸ்.சி., பிரிவில், 18 ஆயிரம் பேர், எஸ்.டி., பிரிவில், 481 பேர் விண்ணப்பித்த போதும், கவுன்சிலிங், 50 சதவீதம் நிறைவடையும் நிலையில், இதுவரை, எஸ்.சி., பிரிவில், 271 மாணவர்களும், எஸ்.டி., பிரிவில், வெறும் இரண்டு மாணவர்களும், எஸ்.சி., அருந்ததியர் பிரிவில், 22 மாணவர்களும் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். பொறியியல் படிப்பில் சேர, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களே அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். கவுன்சிலிங்கில், இதுவரை இந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களே அதிகளவில் சேர்ந்து வருகின்றனர். மற்ற பிரிவைச் சேர்ந்த மாணவர்களைப்போல், சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக அடி மட்டத்தில் உள்ள எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கும், உயர்கல்வி படிக்க வேண்டும் என்று அதிக ஆர்வம் இருக்கிறது. பொறியியல் படிப்பதற்கு அதிகளவில் இந்த பிரிவு மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதன் மூலம், அதை உணர முடிகிறது. இந்த ஆண்டு எஸ்.சி., அருந்ததியர் பிரிவில், 2,106 மாணவர்கள், எஸ்.சி., பிரிவில், 17 ஆயிரத்து, 928 மாணவர்களும், எஸ்.டி., பிரிவில், 481 மாணவர்களும் விண்ணப்பித்தனர். கடந்த மாதம் 30ம் தேதி முதல், அண்ணா பல்கலையில் நடந்து வரும் கவுன்சிலிங்கில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் ஆகிய மூன்று பிரிவைச் சேர்ந்த மாணவர்களைத் தவிர, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த மாணவர்களும், கவுன்சிலிங்கில் பங்கேற்று, "சீட்' பெற்று வருகின்றனர்.

    50
    சதவீத கவுன்சிலிங் விரைவில் முடிய உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிந்துவிடும் என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. இதுவரை நடந்த கவுன்சிலிங்கில், 12ம் தேதி வரை, 11 ஆயிரத்து 10 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    இதில், ஓ.சி.,- 5,397 பி.சி., முஸ்லிம்- 277, பி.சி.,- 3,354, எம்.பி.சி.,-1,657, எஸ்.சி., அருந்ததியர்-22, எஸ்.சி.,- 271, எஸ்.டி.,-2, முற்பட்ட வகுப்பினர்-30 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    மற்ற பிரிவினரை விட, எஸ்.சி.,-எஸ்.சி., அருந்ததியர் மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்கள் மிகக் குறைந்த அளவில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களில், இதுவரை, 2 சதவீத மாணவர்கள் கூட சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பொறியியல் படிக்க, இந்த பிரிவு மாணவர்கள் ஆர்வமாக உள்ளபோதும், வறுமை மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது. அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்தால் கூட, அரசு நிர்ணயித்துள்ள குறைந்த கட்டணத்தைக் கூட கட்ட முடியாத நிலையில், இந்த பிரிவு மாணவர்கள் உள்ளனர். இதனால், இந்த பிரிவு மாணவர்களின் பொறியியல் கனவு, கானல் நீராகவே உள்ளது.

    முதல்வர் மனது வைத்தால்... :


     கடந்த, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை, 6 கோடியே, 24 லட்சத்து, 5,679ஆக உள்ளது. இதில், எஸ்.சி., சமுதாயத்தின் மக்கள் தொகை, 19 சதவீதமாகவும் (1,18,57,079), எஸ்.டி., சமுதாய மக்கள் தொகை, 1.04 சதவீதமாகவும் (8,73,679) உள்ளது.

    இந்த சமுதாய மக்கள், சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு, தமிழக அரசு காலம், காலமாக பல்வேறு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. எனினும், இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள், கல்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டாதவர்களாகவே உள்ளனர். பள்ளிக் கல்வியை முடித்து, உயர்கல்வி படிக்கட்டில் காலடி எடுத்து வைக்கும் சொற்ப மாணவர்களும், வறுமையின் காரணமாக கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவு மாணவர்களின் பொறியியல் கனவு நனவாவதற்கு, முதல்வர் ஜெயலலிதா மனது வைத்தால் நடக்கும் என்று, இந்த சமுதாய மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். 

     நன்றி: தினமலர்

    Summary: it's only  a dream for sc students to pursue higher education

    ""டாக்டர்! நாங்க நாலு பேரும், கொஞ்ச நாளைக்கு முன்னால, கேரளா போய் "ஜாலியா' இருந்துட்டு வந்தோம்; இப்போ, எங்களுக்குப் பயமா இருக்கு சார், எங்களுக்கு எச்.ஐ.வி., டெஸ்ட் பண்ணணும்...'' வார்த்தையை முடிப்பதற்குள் சொன்னவனை ஓங்கி அறைந்தார் அந்த டாக்டர்; மற்ற மூன்று பேரும் ஓரடி பின் வாங்கினர். காரணம், அவர்கள் நால்வரும் கோவையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். நகரின் முக்கிய மருத்துவமனையில் பணியாற்றும் பாலியல் மருத்துவரின் அறையில் நடந்தது இந்த நிகழ்வு. இதற்கு மேல்தான் காத்திருக்கிறது அதிர்ச்சி.

    மாணவர்கள் ஏதோ பயத்தில் வந்திருக்கின்றனர் என்று நினைத்து, அவர்களை பரிசோதித்துப் பார்த்த போது, அவர்களில் ஒரு மாணவனுக்கு எச்.ஐ.வி., பாசிட்டிவ் என்று தெரியவந்தது." "எத்தனையோ எச்.ஐ.வி., பேஷன்ட்களுக்கு நான் "ட்ரீட்மென்ட்' கொடுத்திருக்கேன்.  இந்த வயசுல, இப்பிடி வந்து நின்ன பசங்க இவங்க மட்டும்தான். நம்ம கலாச்சாரமும், வாழ்க்கை முறையும் எங்கே போகுதுன்னு நினைச்சப்ப, எனக்கு நாலு நாளா தூக்கமே வரலை,'' என்று முடித்தார் அந்த டாக்டர்.


    கோவையிலுள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மேல் தட்டு மாணவர்கள் பலரிடம், அதி நவீன மொபைல் போன்கள் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றன. அவற்றில், அதிவேக இன்டர்நெட் இணைப்பும் கிடைக்கிறது. இல்லாவிட்டால், இன்டர்நெட்டில் இருந்து அவர்களே, இறக்கி வைத்துக்கொள்கின்றனர். காசைக் கொட்டுவதற்கு, இவர்களின் பெற்றோர் தயங்குவதே இல்லை.இந்த வாழ்க்கை முறைதான், இந்த மாணவர்களை மரணத்தின் விளிம்பு வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறது.


    கலாசாரத்தின் ஆணிவேர்களில் அமிலத்தை ஊற்றும் இந்த தகவல் தொடர்பு சாதனங்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக, இந்த தேசத்தின் நாளைய மன்னர்களுக்கு சவக்குழிகளை வெட்டிக் கொண்டிருக்கின்றன. பல மாதங்களாக ஆபாச படங்களை காட்சிகளாகப் பார்த்துப் பழகி, அதற்கு அடிமையாகி விட்ட நிலையில்தான், இந்த மாணவர்கள் அடுத்த கட்ட முயற்சிக்குப் போயிருக்கின்றனர். இவர்களைப் போலவே, இன்றைக்கு ஏராளமான மாணவர்கள் பிரவுசிங் சென்டர்களுக்குள் புகுந்து, வாழ்வுக்கான அழிவைத் தேடிக் கொள்கின்றனர்.


    விளையாட்டாக "வீடியோ கேம்ஸ்'களை மட்டுமே ரசித்த பள்ளி மாணவர்கள், ஆபாச வலைதளங்களையும் அடிக்கடி நலம் விசாரிக்கின்றனர். சர்வதேச அளவில் மென்பொருள் உருவாக்கத்தில் சாதனை படைத்து இந்திய இளைய சமுதாயம்தான், மற்றொரு புறத்தில் இப்படி ஆபாசங்களில் அழிந்து போவது வேதனைக்குரிய விஷயம்.மும்பை, டில்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மாணவர்களுடன், கல்வி, விளையாட்டு, பொது அறிவு போன்ற விஷயங்களில் போட்டி போட வேண்டிய மாணவ சமுதாயம், இத்தகைய விஷயங்களில் பெருநகரத்து மாணவர்களுக்குப் போட்டியாக வளர்வதற்கு முழு முதற்காரணம், பெற்றோர்கள்; அடுத்ததாக, பள்ளி வளாகம்; இறுதியாக வெளிச்சூழல்.பெற்றோர் தரும் அதீத சுதந்திரம், பள்ளி நிர்வாகங்களின் பண வேட்டை, "டிவி' போன்ற ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றுடன், சமுதாய ரீதியான கட்டுப்பாடுகளும் தளர்ந்து போயிருப்பதும் ஒரு காரணம்.


    குறிப்பாக, பிரவுசிங் சென்டர்களுக்கு எந்தவித கண்காணிப்பும் இல்லை. விபசாரத்தில் பள்ளி மாணவர்கள் கூட பாதிக்கப்படும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை.
    ஆபாசமான வலைதளங்களுக்குள் ஒரு சிறுவன், சிறுமி கூட உள்ளே புகுந்து விட முடியும் என்பது சர்வதேசத்துக்குமான சவால் என்றாலும், நம்முடைய இந்திய கலாசாரத்துக்கு எதிராக நடத்தப்படும் மாபெரும் யுத்தம் என்பதை மறுக்கவே முடியாது.ஆபாச படங்களை அடிக்கடி பார்க்கும்போது, அதற்கு அடிமையாவதுடன் ஆண், பெண் நட்புக்கு இடையே எல்லை மீறவும், தூண்டுதலாக இருக்கும்.


    இந்நிலையில், இலவச லேப்-டாப்களை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அப்போது, நிலைமை இன்னமும் விபரீதமாகிவிடும். எனவே, மாணவர்கள் தேவையில்லாத வலைத்தளங்களுக்குள் நுழையும்போது, இணைப்பு கிடைக்காதவாறு செய்ய வேண்டும்; மெமரி கார்டு, பென்டிரைவ் கூடாது. வளர் இளம் பருவத்திலுள்ள குழந்தைகள் லேப்-டாப், மொபைல் போனுடன் அதிக நேரம் செலவிடுகிறார்களா என கண்காணித்து மாற்றம் கொண்டு வர பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.ஆபாச படங்களை மெமரி கார்டுகளில் டவுன்லோடு செய்து தர தடை விதிக்க வேண்டும். அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும். குறிப்பிட்ட வலைத்தளங்களையும் கண்காணித்து தடை விதிக்க வேண்டும் என்பது உளவியல் நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


    பிஞ்சிலே பழுக்கும் அவலம் :பெயர் வெளியிடவிரும்பாத பால்வினை நோய் சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகையில், "தற்போது 12 வயது நிரம்பாத மாணவர்கள் கூட, ஆபாச படங்களை பார்ப்பது மட்டுமின்றி செயல்ரீதியாகவும் முயற்சிக்கும் அவலம் உள்ளது. பலரும் ஆபாசபடங்களுக்கு அடிமையாகிவிட்டு தவறு செய்வது அதிகரித்து வருகிறது; பயம் மற்றும் சந்தேகம் காரணமாக எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்க வருகின்றனர். மாதந்தோறும் 30 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் குறைந்தபட்சமாக 15 பேராவது என்னிடம் பரிசோதனைக்கு வருகின்றனர். இதேநிலை நீடித்தால், ஆரோக்கியமான இளைஞர்களை பார்க்கவே முடியாது' என்றார்.


    கோவையை சேர்ந்த மனநல டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ""முன்பு குறிப்பிட்ட காட்சிகள் எழுத்து, போட்டோ வடிவில் மட்டுமே பார்க்க முடிந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நேரிடையாக பார்க்கும் நிலை தற்போதுள்ளது. ஊடகங்களால் ஆபாச காட்சிகள் சாதாரணமாகி விட்டன; இது தவறானது, கூடாது என்ற மனநிலை மாறிவிட்டது. படிக்கும் வயதிலேயே ஆண் - பெண் உறவு எல்லை தாண்டி, கலாசார சீர்கேடு தலைதூக்குகிறது. கிரைம் சம்பவங்களுக்கும் வழிவகுக்கிறது. தொழில்நுட்பம் என்பது கத்தி போன்றது. ஆபரேஷனுக்கும் உதவும்; உயிரை கொல்லவும் உதவும். ஆபாச படங்களுக்கு அடிமையான பலரும், பிரச்னை நம்மை கை மீறி போய்விட்டது; ஆபத்தான நிலையில் உள்ளோம் என்பதை புரிந்து கொள்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே பிரச்னையை கூறி தீர்வு காண முன்வருகின்றனர்,'' என்றார்..


     நன்றி: தினமலர்






    கிராமங்களில் ஒரு பையனை பற்றி விசாரித்தால் அந்த பையனா ரொம்ப நல்லவர்.. ஊர்ல நல்லது கெட்டதுண்ணா அந்த தம்பி கலந்துக்குவான் என்பார்கள் அப்போது… ஆனால் இன்று, மாறிப்போன “மாடர்னஸ்டு” உலகில் அவனா அவனுண்டு அவன் வேலையுண்டு இருப்பாண்னு சொகிறோமே இதுவா சமூக மாற்றத்திற்கு உதவ போகிறது…என நாம் யோசிக்கும் தருங்களில் இதை மாணவர்களிடம் சொல்லவேண்டும் என எண்ணிய வேலையில் கோவை பிஎஸ்.ஜி தொழில் நுட்பக்கல்லூரியில் மாணவர்கள் யூனியன் (STUDENTS UNION ) நடத்திய கிரியா 2011 நிகழ்ச்சியில் வெளிச்சம் மாணவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டார்கள்..
    பரிசு வழங்கும் வெளிச்சம் செரின்


    தமிழகத்தில் 85  வருடமாக  நடந்துவரும் கல்லூரியில் பேச வாய்ப்பு ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் வறுமை வாசனையே தெரியாத அ ந்த கல்லூரி மாணவர்களுக்கு என்ன சொல்ல போகிறோம்.. நம் கவலைகள் பணக்கார வாழ் நிலையில் வாழும் இவர்களின் காதுகளில் விழுமா என்றெல்லாம்  நமக்குள் படபடப்பு…..
    நாம் எண்ணியவை எல்லாம் அப்படியே  நேர் எதிராக…  மாணவர் தலைவர் வெளிச்சம் செரின் அவர்களை வரவேற்று  பேசினார்.. நிகழ்ச்சியை மாணவர்கள் நடத்தியதால் மாணவர்கள் கூட்டதிற்கு பஞ்சமில்லை… பல விஞ்ஞானிகளை உருவாக்கிய கல்லூரி (விஞ்ஞான தமிழர் சந்திராய மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பயின்ற கல்லூரி) வெளிச்சம் செரின் பேசுகையில்….
                    மாணவர்கள் தான் மாற்றத்திற்கு அடிதளமிட முடியும்.. மாணவர்கள்  பங்கெடுப்புகள் இல்லாத பொழுது சமூகத்தில் மாற்றங்கள் சாத்தியகில்லை என பேசிய போது மாணவர்கள் கர ஓசயோடு விசில்  சத்தமிட்டார்கள்..
      நிகழ்ச்சியின் படங்களை பார்வைக்கு வைக்கிறோம்

    எங்கள் வளர்ச்சிக்கு உங்கள் வழிகாட்டுதலே காரணம்.... நன்றி

    Kriya 2011 in PSG Tech Coiambatore


    சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
    ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…



            காதலர் தினத்தினை உலகமே கொண்டாடிய வேலையில்  கலைஞர் தொலைக்காட்சி கருத்து யுத்தம் நிகழ்ச்சியில் இன்றைய மாணவர்கள் அதிகம் முக்கியத்துவம் தருவது நட்பிற்காகவா, காதலுக்காகவா என்கிற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் கலந்துகொண்ட 25 வெளிச்சம்  மாணவர்கள் கருத்துக்களால் அதிரவைத்தனர். தலைப்புகள் நம்மை யேசிக்க வைத்தாலும் வாய்ப்பினை மாணவர்களுக்கு தந்தோம்.  மைக்கை பார்த்தாலே பயப்படும் கிராமபுற மாணவர்களான நமது மாணவர்கள் பேச்சினை கண்டு பாராட்டிய உங்களுக்கும் நன்றி…

    .படங்களை உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்கிறோம்…

    நட்பிற்க்காக

    நட்பிற்க்காக


    நட்பிற்க்காக


    நட்பிற்க்காக

    நட்பிற்க்காக

    நட்பிற்க்காக

    நட்பிற்க்காக

    காதல் சார்பாக 

    நட்பிற்க்காக


    காதல் சார்பாக

    காதல் சார்பாக

    நட்பிற்க்காக

    காதல் சார்பாக

    காதல் சார்பாக


    காதல் சார்பாக

    நட்பிற்க்காக


     நட்பிற்க்காக

    ஓட்டுகளுக்காக  இலவசங்களை  அறிவிக்கும்  இந்த அரசுக்கு எப்போதும் கல்வித்துறை மட்டும் கண்ணில் படாது, அப்படிப்பட்டால் அதனை எப்படி வியாபாரமாக்குவது என்பதுதான் வரும்... கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் பள்ளிகூட சத்துணவு திட்டம் பற்றிய அறிவிப்புகள் இல்லாத தேர்தல் வாக்குறுதிகளே கிடையாது... பள்ளிகூட பிள்ளைகளோடு உட்கார்ந்து சாப்பிடுவது என பள்ளிகூட சத்துணவை அரசியல் ஆக்கினார்களே தவிர ஆக்கபூர்வாமாக செயல் படவில்லை.. இதுதான் இந்த அவலத்திற்க்கு காரணம்... இதனால், நூற்றுக்கணக்கான ஏழை, எளிய மாணவ, மாணவியர், மதிய உணவு கிடைக்காமல், பசியுடன் கல்வி கற்கும் நிலை உள்ளது.

    சென்னை, மேடவாக்கத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 697 மாணவர்கள், 749 மாணவியர் என, 1,446 பேர், கல்வி பயில்கின்றனர். சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம், மாடம்பாக்கம், வேங்கைவாசல், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட, பல கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளியவர்களின் மாணவ, மாணவியர் இங்கு படிக்கின்றனர். இப்பள்ளி, 2005ம் ஆண்டு வரை, நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்தது. இங்கு, எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள், பின், வெளியில் சென்று படிக்க முடியாததால், மேற்கொண்டு படிக்க வழியில்லாமல் அவர்கள் கல்வி தடைபட்டது. அதன் பலனாக, அப்பள்ளிக்கு உயர் நிலை அந்தஸ்து கிடைத்தது. இதனால், மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்தது. மேலும், பள்ளி ஆசிரியர்களின் திறமையால், அப்பள்ளியின் தேர்ச்சி சதவீதமும் உயர்ந்தது.

    கடந்தாண்டு, 10ம் வகுப்புத் தேர்வில், இப்பள்ளி, 98 சதவீத தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவியரின் பெற்றோர், கூலித் தொழில் மற்றும் விவசாயம் பார்த்து வருகின்றனர். எனவே, மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்படுகிறது. இது தொடர்பாக, பள்ளி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு பல முறை மனு அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மாணவ, மாணவியர் பலர், மதிய உணவு சாப்பிடாமல், பட்டினியோடு கல்வி பயிலும் அவலம் உள்ளது. மதிய உணவு உண்ணாததால், பலர், வகுப்பறையில் மயங்கி விழுந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

    பாதிக்கப்படும் மாணவ, மாணவியர் கூறுகையில், "எங்களின் பெற்றோர், கூலித் தொழில் பார்த்து வருகின்றனர். அதனால், பெரும்பாலான நாட்கள், மதிய உணவு எடுத்து வர முடியாத சூழ்நிலை ஏற்படும். மேலும், நாங்கள், பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பள்ளிக்கு வரவேண்டியுள்ளது. "இதனால், ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டில் இருந்து கிளம்பிவிடுவோம். அந்நேரம் எங்கள் வீட்டில் உணவு தயாராக இருக்காது. மதிய இடைவேளையின் போது வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வரவும் நேரம் இருக்காது. "இதனால், சக மாணவ, மாணவியர் கொண்டு வரும் உணவை பகிர்ந்துக் கொள்வோம். எங்களுக்கு மதிய உணவு அளித்தால், நாங்கள் படிக்க உதவியாக இருக்கும்' என்றனர். பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலானோர் மதிய உணவு சாப்பிட விரும்புகின்றனர். அவர்களிடம் கையெழுத்து வாங்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினோம்.

    "பள்ளியிலேயே சத்துணவு தயாரிக்க மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரின் நிதியில், 1.30 லட்சம் ரூபாய் மதிப்பில் உணவுக்கூடம் கட்டப்பட்டுவிட்டது. ஆனால், சத்துணவிற்கான அனுமதி கிடைக்கவில்லை. "இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களுக்கு மதிய உணவு கிடைத்தால், பள்ளியின் தேர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்கும்' என்றனர். மேடவாக்கம் பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியரின் பசி உணர்வுகளை புரிந்து கொண்டு கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் உடனடி நடவடிக்கை எடுத்தால், பசியின் கொடுமையில் இருந்து மாணவர்களுக்கு விமோசனம் பிறக்கும்.

    கையேந்தும் கொடுமை: மேடவாக்கத்தில் உள்ள யாகவா முனிவர் வீட்டில், ஒவ்வொரு வியாழக் கிழமையும் இலவச உணவு வழங்கப்படுகிறது. அப்போது, ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் போட்டி போட்டுக் கொண்டு கையேந்தி, மதிய உணவு சாப்பிடுகின்றனர். இதேபோல், பள்ளியிலிருந்து 1 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தையும் வாங்கி உண்டு, மாணவர்கள் தங்கள் பசியை போக்கிக் கொள்கின்றனர். மாணவர்களை, ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் கொடுமையில் இருந்து மீட்க, கல்வித் துறையின் கண் திறக்க வேண்டும்.

     நன்றி: தினமலர் 04.02.11