Showing posts with label மாணவர்கள். Show all posts


இன்று (12.5.12) வெளியான தினமலரின் பெண்கள் மலர் பத்திரிக்கையில்  மாணவர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சம் எனும் தலைப்பில் வெளியான கட்டுரையை கல்விக்கான களப்பணியில் எமக்கு வழிகாட்டும் உங்களுக்கு எம் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்...

நன்றியுடன்

வெளிச்சம் மாணவர்கள்




வெளிச்சத்தோடு இணைந்து 
பலருக்கு உதவ நினைப்பவரா நீங்கள் இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.. https://spreadsheets.google.com/viewform?formkey=dFR0MFJtbllsNUNrRk9CTG82ZlJxOWc6MQ




பி.இ. இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாமல் திண்டாடும் மாணவர்கள்


வெளிச்சம் அமைப்பின் தலைவர் டி.ஷெரின் (இடமிருந்து 3-வது). உடன் (இடமிருந்து) மாணவிகள் அனுசுயா, விஜயலட்சுமி, மாணவர்கள் ராஜகோபால், ராஜா.


சென்னை, ஜூலை 21: பொறியியல் படிப்புகளில் சேர இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாமல் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திண்டாடி வருகின்றனர்.
 கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டிலான பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கட்டணமாக ரூ.32,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கு முதலாம் ஆண்டு கட்டணம் ரூ.40,000.
 இதில் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கல்விக் கட்டணத்தைக் (டியூஷன் ஃபீஸ்) கழித்துவிட்டு, மீதித் தொகையை இவர்கள் செலுத்தவேண்டும். அதுவும் கலந்தாய்வில் கல்லூரியில் சேருவதற்கான அனுமதிக் கடிதம் பெற்ற 10 முதல் 20 நாள்களுக்குள் செலுத்த வேண்டும்.
 அரசு பொறியியல் கல்லூரியில் கல்விக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், பாடத் திட்ட புத்தகம் உள்ளிட்ட பல்வேறு கட்டணமாக ரூ.10,820 வசூலிக்கப்படுகிறது. தங்கும் விடுதி சேர்க்கைக் கட்டணம், மின் கட்டணம், குடிநீர், உணவுவிடுதி கட்டணம், பராமரிப்புக் கட்டணம் என கூடுதலாக ரூ.8,450 வசூலிக்கப்படுகிறது. இதுதவிர தங்கும் விடுதி மாதக் கட்டணம் என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 செலுத்த வேண்டும்.
 இதன்படி, அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ. சேருகிற மாணவர் ரூ.20,770 கட்டணம் செலுத்த வேண்டும். முதல் தலைமுறை மாணவராக இருந்தால் கல்விக் கட்டணமான ரூ.2 ஆயிரத்தைக் கழித்துவிட்டு, மீதமுள்ள ரூ.18,770-ஐ செலுத்த வேண்டும்.
 இந்தக் கட்டணம் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கும் மாறுபடுகிறது.
 சுயநிதிக் கல்லூரிகளில்...: இது ஒருபுறமிருக்க சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடத்தில் சேரும் மாணவர்கள், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைப்போல் பல மடங்கு கட்டணத்தை செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 சென்னையில் உள்ள தனியார் கல்லூரி கல்விக் கட்டணம், விளையாட்டுக் கட்டணம், நூலகம், இணைய தள வசதி, தங்கும் விடுதி, விடுதி வாடகை என அரசு ஒதுக்கீட்டிலான இடத்தில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் ரூ.1,48,000 என நிர்ணயித்துள்ளது.
 இதில் முதல் தலைமுறை மாணவராக இருந்தால் கல்விக் கட்டணமான ரூ.20 ஆயிரத்தைக் கழித்துவிட்டு ரூ.1,28,000 செலுத்த வேண்டும்.
 இந்த முதலாம் ஆண்டு கட்டணத்தை கலந்தாய்வு மூலம் கல்லூரியில் சேருவதற்கான அனுமதிக் கடிதம் பெற்ற 10 முதல் 20 நாள்களுக்கு கட்ட வேண்டும் என்பது நிபந்தனை. இந்த குறுகிய நாள்களுக்குள் இவ்வளவு தொகையை செலுத்த முடியாமல் ஏழை மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
 கட்டணத்தை செலுத்திய பிறகுதான் கல்லூரி அத்தாட்சி சான்றிதழ் (போனஃபைடு) கிடைக்கும் என்பதால், கல்விக் கடனுக்கும் விண்ணப்பிக்க இயலாத நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
 2011-12 கல்வியாண்டில் 100-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் இதுபோன்ற பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்கான முயற்சியை "வெளிச்சம்' என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. பல மாணவர்களுக்கு கலந்தாய்வின்போது செலுத்த வேண்டிய முன் தொகையை இந்த அமைப்பு அளித்துள்ளது.
 முதல் தலைமுறை மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்விக் கட்டணமான ரூ.20 ஆயிரத்தையே உத்தரவாதமாக எடுத்துக்கொண்டு, கல்விக் கடனை மாணவர்கள் உடனடியாகப் பெறும் வகையில் அத்தாட்சி சான்றிதழை உடனடியாக சுயநிதிக் கல்லூரிகள் வழங்க அரசு வழி செய்யவேண்டும் என்பதே இந்த அமைப்பின் முக்கிய கோரிக்கை.

 இதுகுறித்து சேலம் மாவட்டம் தலைவாசலைச் சேர்ந்த மாணவர் ராஜகோபால் கூறியதாவது:
 முதல் தலைமுறை பட்டதாரி மாணவரான நான் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 1,075 மதிப்பெண் பெற்றேன். பி.இ. கலந்தாய்வில் பண்ருட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. கல்லூரியில் வரும் 29-ம் தேதிக்குள் முதலாம் ஆண்டு கட்டணத்தை கட்டச் சொல்கின்றனர்.
 அத்தாட்சி சான்றிதழ் இல்லாததால் கல்விக் கடனுக்கும் விண்ணப்பிக்க முடியவில்லை. அவ்வாறு விண்ணப்பித்தாலும் பல மாதங்களுக்குப் பிறகுதான் வங்கிக் கடன் கிடைக்கும்.
 உரிய கால அவகாசத்துக்குள் கட்டணத்தை செலுத்தவில்லையென்றால், எனக்கு கிடைத்த இடம் வேறு நபருக்கு கொடுக்கப்பட்டு விடும். இதனால் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றார்.
 இவரைப்போல் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,160 மதிப்பெண் பெற்ற வீ.விஜயலட்சுமி (திருச்சி), 1,151 மதிப்பெண் பெற்ற நாகமாணிக்கம் (திருப்பூர்), 1135 மதிப்பெண் பெற்ற எல்.சி.பரணிகுமார், நரேந்திரன் (ஈரோடு), அர்ஜுன் (கோவை), நந்தினி (சேலம்) கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இவற்றை வெளிச்சம் அமைப்பின் தலைவர் டி.ஷெரின் விவரித்தார்.

  நன்றி: தினமணி

""டாக்டர்! நாங்க நாலு பேரும், கொஞ்ச நாளைக்கு முன்னால, கேரளா போய் "ஜாலியா' இருந்துட்டு வந்தோம்; இப்போ, எங்களுக்குப் பயமா இருக்கு சார், எங்களுக்கு எச்.ஐ.வி., டெஸ்ட் பண்ணணும்...'' வார்த்தையை முடிப்பதற்குள் சொன்னவனை ஓங்கி அறைந்தார் அந்த டாக்டர்; மற்ற மூன்று பேரும் ஓரடி பின் வாங்கினர். காரணம், அவர்கள் நால்வரும் கோவையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். நகரின் முக்கிய மருத்துவமனையில் பணியாற்றும் பாலியல் மருத்துவரின் அறையில் நடந்தது இந்த நிகழ்வு. இதற்கு மேல்தான் காத்திருக்கிறது அதிர்ச்சி.

மாணவர்கள் ஏதோ பயத்தில் வந்திருக்கின்றனர் என்று நினைத்து, அவர்களை பரிசோதித்துப் பார்த்த போது, அவர்களில் ஒரு மாணவனுக்கு எச்.ஐ.வி., பாசிட்டிவ் என்று தெரியவந்தது." "எத்தனையோ எச்.ஐ.வி., பேஷன்ட்களுக்கு நான் "ட்ரீட்மென்ட்' கொடுத்திருக்கேன்.  இந்த வயசுல, இப்பிடி வந்து நின்ன பசங்க இவங்க மட்டும்தான். நம்ம கலாச்சாரமும், வாழ்க்கை முறையும் எங்கே போகுதுன்னு நினைச்சப்ப, எனக்கு நாலு நாளா தூக்கமே வரலை,'' என்று முடித்தார் அந்த டாக்டர்.


கோவையிலுள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மேல் தட்டு மாணவர்கள் பலரிடம், அதி நவீன மொபைல் போன்கள் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றன. அவற்றில், அதிவேக இன்டர்நெட் இணைப்பும் கிடைக்கிறது. இல்லாவிட்டால், இன்டர்நெட்டில் இருந்து அவர்களே, இறக்கி வைத்துக்கொள்கின்றனர். காசைக் கொட்டுவதற்கு, இவர்களின் பெற்றோர் தயங்குவதே இல்லை.இந்த வாழ்க்கை முறைதான், இந்த மாணவர்களை மரணத்தின் விளிம்பு வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறது.


கலாசாரத்தின் ஆணிவேர்களில் அமிலத்தை ஊற்றும் இந்த தகவல் தொடர்பு சாதனங்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக, இந்த தேசத்தின் நாளைய மன்னர்களுக்கு சவக்குழிகளை வெட்டிக் கொண்டிருக்கின்றன. பல மாதங்களாக ஆபாச படங்களை காட்சிகளாகப் பார்த்துப் பழகி, அதற்கு அடிமையாகி விட்ட நிலையில்தான், இந்த மாணவர்கள் அடுத்த கட்ட முயற்சிக்குப் போயிருக்கின்றனர். இவர்களைப் போலவே, இன்றைக்கு ஏராளமான மாணவர்கள் பிரவுசிங் சென்டர்களுக்குள் புகுந்து, வாழ்வுக்கான அழிவைத் தேடிக் கொள்கின்றனர்.


விளையாட்டாக "வீடியோ கேம்ஸ்'களை மட்டுமே ரசித்த பள்ளி மாணவர்கள், ஆபாச வலைதளங்களையும் அடிக்கடி நலம் விசாரிக்கின்றனர். சர்வதேச அளவில் மென்பொருள் உருவாக்கத்தில் சாதனை படைத்து இந்திய இளைய சமுதாயம்தான், மற்றொரு புறத்தில் இப்படி ஆபாசங்களில் அழிந்து போவது வேதனைக்குரிய விஷயம்.மும்பை, டில்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மாணவர்களுடன், கல்வி, விளையாட்டு, பொது அறிவு போன்ற விஷயங்களில் போட்டி போட வேண்டிய மாணவ சமுதாயம், இத்தகைய விஷயங்களில் பெருநகரத்து மாணவர்களுக்குப் போட்டியாக வளர்வதற்கு முழு முதற்காரணம், பெற்றோர்கள்; அடுத்ததாக, பள்ளி வளாகம்; இறுதியாக வெளிச்சூழல்.பெற்றோர் தரும் அதீத சுதந்திரம், பள்ளி நிர்வாகங்களின் பண வேட்டை, "டிவி' போன்ற ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றுடன், சமுதாய ரீதியான கட்டுப்பாடுகளும் தளர்ந்து போயிருப்பதும் ஒரு காரணம்.


குறிப்பாக, பிரவுசிங் சென்டர்களுக்கு எந்தவித கண்காணிப்பும் இல்லை. விபசாரத்தில் பள்ளி மாணவர்கள் கூட பாதிக்கப்படும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை.
ஆபாசமான வலைதளங்களுக்குள் ஒரு சிறுவன், சிறுமி கூட உள்ளே புகுந்து விட முடியும் என்பது சர்வதேசத்துக்குமான சவால் என்றாலும், நம்முடைய இந்திய கலாசாரத்துக்கு எதிராக நடத்தப்படும் மாபெரும் யுத்தம் என்பதை மறுக்கவே முடியாது.ஆபாச படங்களை அடிக்கடி பார்க்கும்போது, அதற்கு அடிமையாவதுடன் ஆண், பெண் நட்புக்கு இடையே எல்லை மீறவும், தூண்டுதலாக இருக்கும்.


இந்நிலையில், இலவச லேப்-டாப்களை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அப்போது, நிலைமை இன்னமும் விபரீதமாகிவிடும். எனவே, மாணவர்கள் தேவையில்லாத வலைத்தளங்களுக்குள் நுழையும்போது, இணைப்பு கிடைக்காதவாறு செய்ய வேண்டும்; மெமரி கார்டு, பென்டிரைவ் கூடாது. வளர் இளம் பருவத்திலுள்ள குழந்தைகள் லேப்-டாப், மொபைல் போனுடன் அதிக நேரம் செலவிடுகிறார்களா என கண்காணித்து மாற்றம் கொண்டு வர பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.ஆபாச படங்களை மெமரி கார்டுகளில் டவுன்லோடு செய்து தர தடை விதிக்க வேண்டும். அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும். குறிப்பிட்ட வலைத்தளங்களையும் கண்காணித்து தடை விதிக்க வேண்டும் என்பது உளவியல் நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


பிஞ்சிலே பழுக்கும் அவலம் :பெயர் வெளியிடவிரும்பாத பால்வினை நோய் சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகையில், "தற்போது 12 வயது நிரம்பாத மாணவர்கள் கூட, ஆபாச படங்களை பார்ப்பது மட்டுமின்றி செயல்ரீதியாகவும் முயற்சிக்கும் அவலம் உள்ளது. பலரும் ஆபாசபடங்களுக்கு அடிமையாகிவிட்டு தவறு செய்வது அதிகரித்து வருகிறது; பயம் மற்றும் சந்தேகம் காரணமாக எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்க வருகின்றனர். மாதந்தோறும் 30 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் குறைந்தபட்சமாக 15 பேராவது என்னிடம் பரிசோதனைக்கு வருகின்றனர். இதேநிலை நீடித்தால், ஆரோக்கியமான இளைஞர்களை பார்க்கவே முடியாது' என்றார்.


கோவையை சேர்ந்த மனநல டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ""முன்பு குறிப்பிட்ட காட்சிகள் எழுத்து, போட்டோ வடிவில் மட்டுமே பார்க்க முடிந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நேரிடையாக பார்க்கும் நிலை தற்போதுள்ளது. ஊடகங்களால் ஆபாச காட்சிகள் சாதாரணமாகி விட்டன; இது தவறானது, கூடாது என்ற மனநிலை மாறிவிட்டது. படிக்கும் வயதிலேயே ஆண் - பெண் உறவு எல்லை தாண்டி, கலாசார சீர்கேடு தலைதூக்குகிறது. கிரைம் சம்பவங்களுக்கும் வழிவகுக்கிறது. தொழில்நுட்பம் என்பது கத்தி போன்றது. ஆபரேஷனுக்கும் உதவும்; உயிரை கொல்லவும் உதவும். ஆபாச படங்களுக்கு அடிமையான பலரும், பிரச்னை நம்மை கை மீறி போய்விட்டது; ஆபத்தான நிலையில் உள்ளோம் என்பதை புரிந்து கொள்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே பிரச்னையை கூறி தீர்வு காண முன்வருகின்றனர்,'' என்றார்..


 நன்றி: தினமலர்







புரியும்படி பாடம் நடத்துங்கள் என்று கேட்டதற்காகவும் பாடம் புரியவில்லை என்று தலைமை ஆசிரியருக்குக் கடிதம் எழுதியதற்காகவும் ஆசிரியர்கள் மிரட்டப்பட்டதால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை செய்துகொண்டதும் சாவதற்கு முன் அந்த மாணவர் எழுதியிருக்கும் ஏழு பக்க கடிதம் கல்வியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது


சேலம் அருகே உள்ள பணமரத்துப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 கணிதப்பிரிவில் படிக்கும் மாணவன் சீனிவாசன். சீனிவாசன் வீடு பணமரத்துப் பட்டியிலிருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள நெய்க்காரபட்டியில் உள்ளது.

கடந்த 15ம் தேதி பள்ளிக்கூடம் திறந்த பின்னர், மூன்று நாட்களாக பள்ளிக்கு சென்று வந்தான். நேற்று முன்தினம் சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளான்.

சீனிவாசனின் பெறோர்கள் சேகர், விமலா மற்றும் அண்ணன் சத்தியமூர்த்தி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர், இந்நிலையில் சனிக்கிழமை மதியம் சீனிவாசனின் தயார் விமலா சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது வீடு திறந்து கிடந்துள்ளது, சந்தேகமடைந்த விமலா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டு உத்திரத்தில், சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தான்.

மகனின் தற்கொலையால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், மற்றும் உறவினர்கள், கிராமத்தில் உள்ள வழக்கப்படி சீனிவாசனின் உடலை பிரேத பரிசோதனை ஆய்வுக்கு உட்ட்படுத்த பயந்துகொண்டு காவல்துறைக்கு புகார் கொடுக்காமலேயே சீனிவாசனின் உடலை எரித்துவிட்டனர்.

சீனிவாசனின் தற்கொலைக்கு காரணம் தெரியாத உறவினர்கள் சிலர், நேற்று காலையில் சீனிவாசனுடன் படிக்கும் சக மாணவர்களிடம் பள்ளியில் என்ன நடந்தாது என்பது குறித்து விசாரித்துள்ளர்கள்.

சீனிவாசனின் வகுப்பு மாணவர்கள், எங்களது கணித ஆசிரியர் செந்தில் சார் சரியாக புரியும்படி கணக்கு பாடம் நடத்துவதில்லை, அதனால்  தலைமையாசிரியரிடம் புகார் கொடுப்பதற்கு எல்லா மாணவர்களிடமும் கையெழுத்து வாங்கிகொண்டிருந்தான் என்று சொல்லியுள்ளார்கள்.

சீனிவாசனின் தற்கொலைக்கு பள்ளியில் நடந்த சம்பவம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு உறவினர்கள் நேற்று சீனிவாசனின் பள்ளி புத்தகப்பையை திறந்து பார்த்துள்ளார்கள்.

அதில், சீனிவாசன் கைப்பட எழுதிய ஏழு பக்க கடிதம் இருந்துள்ளது. அதில், எனது சாவுக்கு என் பெற்றோர்களோ, உறவினர்களோ காரணமல்ல... என் முடிவை எழுதியவர்கள், நான் படிக்கும், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் செந்தில், தமிழ் அய்யா ராமலிங்கம், இயற்பியல் ஆசிரியர், மற்றும் வேதியியல் ஆசிரியர்கள் தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்தது.

நான் 11வகுப்பு படிக்கும் போதிலிருந்தே எங்களுக்கு கணக்கு பாடம் நடத்தும் செந்தில் ஆசிரியர் பாடம் நடத்துவது புரிவதில்லை... எங்களுக்குபுரியும்படி பாடத்தை மெதுவாக நடத்துங்கள் என்று பலமுறை சொல்லியுள்ளோம்.

கடந்த 16ம் தேதி எங்களுக்கு செந்தில் ஆசிரியர் கணக்கு பாடம் நடத்தினார். அவர் வேகமாக நடத்தியதால், எனக்கு புரிய வில்லை, சார் மெதுவாக நடத்துங்கள் என்று கேட்டேன், என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, போர்டில் உள்ளதை மட்டும் எழுது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

செந்தில் ஆசிரியர், கணக்கு படத்தை புரியும்படி, மெதுவாக நடத்தச்சொல்லி, தலைமையாசிரியரிடம் புகார் கொடுக்க என் வகுப்பு மாணவர்களிடம் கையெழுத்து வாங்கினேன், இந்த புகாரை தலைமையாசிரியரிடம் கொடுக்கலாமா...? என்று கெமிஸ்ட்டரி ஆசிரியரிடம் கேட்டேன்.

அவர் எல்லா ஆசிரியகளிடமும் நான் சொன்னதை சொல்லிவிட்டார்.... அன்று, மாலை நான் பள்ளி முடிந்து நானும், என் நண்பர் ஜீவாவும் வீட்டுக்கு வந்து கொடிருந்த போது, வேதியல் ஆசிரியர், என்னை கூப்பிட்டு... படிக்க வந்தா படிக்கற வேலைய மட்டும் பார்தேவையில்லாத வேலையெல்லாம் பாக்காதே, என கோபமாக திட்டினார். நீ எல்லா பசங்க முன்னாலயும் கணக்கு பாடம் புரியலையுன்னு கேட்டியாமே... என்னுடைய வகுப்புல அப்படி கேட்டுப்பார் என்ன நடக்குதுன்னு பார்.... என மிரட்டினார்.

பாடம் நடத்தும் போது சந்தேகம் கேட்க கூடத சார்..., எங்க கிலாசுல செந்தில் சார் நடத்துற கணக்கு பாடம் யாருக்கும் புரிய மாட்டிங்குது சார்.... என்று கூறினேன்.

மறுநாள் 17 தேதி கம்ப்யூட்டார் ஆசிரியர், என்னை கூப்பிட்டு என்ன ரிப்போர்ட் எழுதி கையெழுத்து எல்லாம் வாங்கியிருக்கிராயாமே... ஏன் வகுப்பு ஆசிரியரான என்கிட்ட சொல்லலை... என்று கேட்டார். அப்போது இயற்பியல் ஆசிரியர், நீ என்ன பெரிய இவனா... மூடிக்கிட்டு டெஸ்ட் எழுதுடா என்று மிரட்டினார்.

அப்போது பின்னல் வந்த தமிழ் அய்யா ராமலிங்கம், நீ என்னடா...பெரிய ரௌடியா, நீ படிக்கறது பள்ளிக்கூடம், இது காலேஜ் கிடையாது, எங்க மேல நீ பெட்டிசன் எல்லாம் போடமுடியாது, உன்ன பள்ளிக்கூடத்துல செத்துக்கிட்டதே பெரிய விஷயம், இந்த லட்சணத்துல நீ ரௌடித்தனம் பண்ணறே...

உனக்கு புரிஞ்சா படி..., இல்லன்னா, டி.சி வாங்கிக்கிட்டு போய் உனக்கு பிடிச்ச வாத்தியார் இருக்கற பள்ளிக்குடத்துக்கு சேர்ந்து படி என்று மிரட்டினார்.

மாலை 3.30 மணிக்கு தலைமையாசிரியரிடம் பர்மிசன் வாங்கிக் கொண்டுவீட்டுக்கு வந்து, இந்த கடிதத்தை எழுத்துகிறேன்.

எனக்காக அம்மா, அப்பா இருவரும் அழக்குகூடாது, அப்போது தான் என் ஆத்மா சாந்தியடையும்.

எனக்கு அடுத்த பிறவியிருந்தால் அதில் நான் மனிதனாக பிறக்க கூடாது, அரசு பள்ளிகளையும், அதன் ஆசிரியர்களையும் நன்றாக கவனித்தால் தான் என்னைப்போன்ற மாணவர்களை மேம்படுத்த முடியும்.

என் சாவு, அரசு பள்ளியில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும், இல்லையானால் என்னை மாதிரி எத்தனை உயிர்களை ஆசிரியர்கள் எடுக்கப்போகிரார்களோ தெரியவில்லை...

திறைமையான ஆசிரியர்கள் பலர் வேலையில்லாமல் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், மேல்நிலை வகுப்புகளுக்கு, நல்ல திறமையான ஆசிரியர்களை போடவேண்டும் என முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கடிதத்தை சி.ஈ.ஓ விடம் ஒப்படைக்க வேண்டும். என் மரணத்திற்கு பின்னர் சட்டம் அதன் கடமையை செய்யவேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளான்.

சீனிவாசன் சாவுக்கு காரணம் ஆசிரியர்கள் தான் எனபதை அறிந்த உறவினர்கள், நேற்று சேலம் எஸ்.பி அலுவலகத்துக்கு புகார் சொன்னதன் பின்னர், மல்லூர் காவல் ஆய்வாளர் சீனிவாசனின் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார்.

சீனிவாசனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சீனிவாசன் தற்கொலை பற்றி காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்க அறிவுறுத்தினார்.

அதன் பின்னர், மல்லூர் காவல் நிலையத்தில்  சீனிவாசன் தற்கொலை செய்துகொண்டது சம்பந்தமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன விசாரனை நடத்தினாலும் போன ஸ்ரீனிவாசன் மீண்டும் வரப்போவதில்லை...


இது ஒருப்பக்கம் இருக்கட்டும்  நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாணவியும், மாணவரும், சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த கொண்டலாம்பட்டி எஸ்.நாட்டாமங்கலத்தை சேர்ந்த ஜீவானந்தம் (15), பனமரத்துப்பட்டி பள்ளி பிளஸ்-2 மாணவர் சீனிவாசன் ஆகியோரும் தற்கொலை செய்து கொண்டனர்.

பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திற்குள் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் கல்வி அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பெற்றோர்களும் பீதி அடைந்துள்ளனர்.





Summery: 
Four students  committed suicide  within a week after the re-opening of schools. in  Salem and Namakkal districts











              ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக மட்டும் பாடுபடுவதுதான் வெளிச்சம் மாணவர்களின்   நோக்கம் மட்டுமல்ல. குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என  பல பகுதிகளான சமூகத்தின் உறவுகளோடு இணைந்து சமூக மாற்றத்திற்கு பாடுபடவேண்டும் என்பதுதான்  நமது  லட்சியம். விழுப்புரம் மாவட்டத்தில்  வெளிச்சம் மாணவர்கள்  பல்வேறு கல்லூரி மாணவர்களை சந்திக்கும்  வாய்ப்பு விழுப்புரம் நகராட்சி வாயிலாக கிடைத்து  50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்வி கலந்துரையாடல் 


பெயர்களை மாணவர்கள் நலன் கருதி குறிப்பிடாமல் பதிவு செய்கிறோம்…


           மணவர்களை நோக்கி,  நீங்க உங்க வாழ்க்கை லட்சியமென்ன என வெளிச்சம் செரின் அவர்கள் கேட்க: அழகான பொண்ணை  பார்க்கனும் காதலிக்கணும், சந்தோசமா இருக்கணும் வாழ்க்கை பூரா என்ஜாய் பண்ணனும் அவ்வளவுதான் வாழ்க்கை என்றனர் மாணவர்கள்..

மீண்டும் செரின் அவர்கள் நீ கல்யாணம் பண்ணிக்க போற பெண்ணு எப்படி இருக்கனும் என்ற கேள்வியை முன்வைத்தார்,

                              கண்ணு அழகா இருக்கணும், அவளை பார்த்துக்கிட்டே இருக்கணும், சும்மா கலரா நச்சுன்னு இருக்கணும் என்றார் ஒரு மாணவர். அவனை மடக்கி  நீங்க  காதலிக்கிறீங்களா என்றார் செரின் விடாது. ஆமாம் அக்கா  நான் 8 ம் வகுப்பு படிக்கும் போதுதான் காதலிக்கணும்னு தோணுச்சி, அப்ப ஒரு பிகரை பார்த்தேன் பிடிச்சிருந்துச்சி காதல சொன்னேன், காதலிச்சோம் வீட்டுல பிரச்சனையாச்சி அவ பெத்தவங்க பேச்சை கேட்டுட்டு என்னை மறந்துட்டு போயிட்டா, கொஞ்ச நாள் அவளோட நினைப்பா சுத்திக்கிட்டு திரிஞ்சேன், இதை பார்த்துட்டு  வேற ஒரு பொண்ணு என்னை காதலிக்கிறன்னு, அவளா! வந்து சொன்னா, நானும் முதல்ல  வேணாம்னு சொன்னேன் பிறகு ஒரு  பொம்பல புள்ளையே நம்மல பிடிக்கும் சொல்லும் போது நாம வேணாம்னு சொன்னா நம்மல அந்த பொண்ணு என்ன நினைக்கும் சரி விடு,விட்டுடு போனவள விட்டுத்தள்ளு, வர்றது வரவுன்னு நானும் ஒத்துக்கிட்டேன்.. காதலிச்சோம் சந்தோசமா இருந்தோம்.  நாம கல்யாணம் பண்ணிக்கிலாமான்னு கேட்டேன், அவ என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது நான் உன்னை காதலிச்சேன் அவ்வளவு தான்னு சொல்லிட்டாள்  அப்புறமென்னக்கா இப்போ இன்னொரு பொண்ணுக்கு ரூட் போடுறேன் பிக்கப் ஆக மாட்டங்குது.. எத்தனை முறை தோற்றாலும் காதல் ஒரு வகையான சுகம் அதனால தான் காடஹ்லிச்சி கல்யாணம் பண்ணனும்  விரும்புறேன்… பிகரோட கண்ணப்பாத்து பேசுற சுகமிருக்கே அது தனி சுகம் அதுக்காக தான்என்ன மாதிரி  எல்லா பசங்களும் ஏங்குறாணுங்க என்றான்..


அடுத்ததாக பேசிய மாணவர்கள் தனக்கு வர்ற மனைவி அல்லது காதலி எப்படி இருக்கனும் என்கிற கேள்விக்கு  மீனா மாதிரி கண்ணு இருக்கணும், அழகா இருக்கனும்.  நச்சினு இருக்கனும்,  நாட்டு கட்டையா இருக்கணும் என்றார்கள் வாலிப வயசு கனவுகளோடு….  
                                                                          
இதே கேள்வியை  மாணவிகளிடம் (தங்களுக்கு வரபோகிற  கணவர் அல்லது காதலன் எப்படி இருக்கனும்) கேள்விக்கு கேட்டோம்…
                        நல்லவரா இருக்கணும், நல்ல கேரக்டரா இருக்கணும், சந்தோசமா வச்சிருக்கரவரா இருக்கணும் என்றார்கள் மிக பொறுப்புடன், மைக்கை வாங்கிய அந்த பொண்ணு, அக்கா நாளுனாள் நம்ம பின்னாடி சுத்துறாங்க   நாங்க பிடிக்களைன்னா அவ நல்லவ இல்லைண்ணு சொல்லுறது எந்த விதத்துல நியாயம் அக்கா?, பொண்ணுங்க நாளுபசங்கள்கிட்ட பேசினா பல் இழிக்கிறாங்கண்ண்னு சொல்லுறதும் ஏன்னு தெரியல, நாளு நாள்  நல்லா பேசினா அஞ்சாவது நாள் ஐ லவ் யூ சொல்லுறீங்களே ஏன்..எங்களுக்கு பிடிச்சா பிடிச்சிருக்குண்ணு சொல்லுவோம் இல்லைன்னா பிடிக்கலைண்ணு தானே சொல்ல முடியும்,கம்பல் பண்ணுனா காதல் வராது...வெறுப்புதான் வரும் என்றார் தன்னை கம்பல்பண்ணியவர் கூட்டத்தில் இருந்தவருக்கு பதிலளித்தவராக…

இதற்கு பதிலளித்த வெளிச்சம் செரின்:
காதலிக்ககூடாதுண்ணு சொல்லலை அப்பா, அம்மா காசுல காதலிக்ககூடாதுண்ணுதான் சொல்லுறேன். பிள்ளை படிக்கிதுண்ணு  கனவுகாணுகிற அம்மா, அப்பாவுக்கு என்ன தர போறீங்க… கண்ணீரையா?  தெரியாம கேட்குறேன் கண்ணு பிடிச்சிருக்கு வாய்பிடிச்சிருக்கு,அது பெருசா இருக்குன்னு சொல்லுறீங்களே.. கொஞ்சம்  கண்ணமூடி மீனா மாதிரி கண்ணை இன்னும் உற்று பாருங்க.. வெறும் சதையா,ரத்தமா இருக்கும். நீங்க சதைக்க்கு ஆசை படுறீங்களா...இல்ல?  என்று பேசி முடித்தார்..

இறுதியாக:



அனைவரின் பேச்சை உன்னிப்பாக கவனித்த ஒரு மாணவன் நிகழ்ச்சி எப்படி இருந்து என பேசுவதற்காக மைக்கை வாங்கினான், வார்த்தைகளை மீறி கண்ணீர்   தழும்பி வெளியேறியது..  அனைவரும் கூர்மையாக கவனிக்க ஆரமித்தனர் கூட படித்தவரின் குரலை கேட்க, நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே ஒரு பொண்ணை காதலிச்சேன், நான் தொட்டது கூட இல்லை, நான் பன்னிரெண்டாம் வகுப்புல கம்மியான மார்க்கு எடுத்தேன், அவ பாண்டிச்சேரியில காலேஜ் படிக்கிறா, அவ என்னை பாக்குறதில்லை, அப்ப தான் என்னோட பிரண்ட்ஸ் சொன்னாங்க,  நான் இத்தனை வருசமா காதலிச்சும் அவளை ஒரு முறை கூட தொடலையாம் அதனால நான் ஆம்பளையே இல்லைன்னு சொன்னாளாம்.. பிரட்ண்ஸ் காதலிக்கும் போது தொட்டு பேசரது பேசனா இருக்கலாம், ஆனா அது நாகரீகமில்ல பிரண்ட்ஸ், அவளுக்காக நான் வீணடிச்ச காலத்த நினைச்சாதான் தானா அழுகைவருது, நான் சந்திச்ச சம்பவத்தை நான் சொல்லனுமுனு தோணுது பிரண்ட்ஸ்.. நாளுவருசத்துக்கு முன்ன வளவனூர்க்கு போர வழியிலயே இருக்குற சவுக்கு காட்டுல இருந்து என்னோட பிரண்ட் போன்பண்ணி அவரசரமா சொன்னான்.. பதறிபோய்  பைக்ல போனேன்.. அங்க போனதும் தான் தெரிஞ்சது அவன் அவன் லவ்பண்ணுற பொண்ணோட அங்க போயிருக்கான், அவங்க  இரு ந்த இடத்துக்கு  வந்த  ஆறு பேர் அவனையும், உதவிக்கு போன என்னையும் பிடிச்சிக்கிட்டாங்க, அந்த பொண்னையும் எங்களோட கண்ணுமுன்னாலயே கெடுத்தாங்க,எவ்வளவே கதறினோம் விடலை, இப்ப அவங்க எங்க இருக்காங்கண்ணே தெரியல ஆனா நிச்சயமா உயிரோட இருக்கமாட்டாங்க, ஏன்னா சம்பவத்தை நேர்ல பாத்ததுனால  சொல்லுறேன்.. காதலிக்கும் போது தெரிஞ்சோ தெரியாமலோ தப்புமட்டும் பண்ணிடாதீங்க என கையெடுத்து கும்பிட்டான் அந்த  மாணவன்..

ஒரு பையன் எத்தனை பொண்னை காதலிச்சோம் என்பதும், ஒரு பொண்ணு எத்தனை பையன்கள தன் பின்னால சுத்தவிட்டிருக்கு என்பதும் பந்தாவா இருக்கலாம்.. ஆனால் உருப்படியா பெற்றோரின் கண்ணீரை துடைக்க என்ன செய்தோம்  என்பது தான் மாணவர்களின் தலையாய கடமை…