Showing posts with label வெற்றி. Show all posts



 ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் (யு.பி.எஸ்.சி.) அதாவாது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்‌வி‌ல் 910 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். அதில் தமிழகத்திலிருந்து 68 பேர் வெற்றி பெற்றுள்ளனர் ..

2011-12 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் நேற்று (மே 4) வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் தேர்வு எழுதிய 2 லட்சத்து 40 ஆயிரம் பேரில் 910 மாணவ, மாணவியர் மட்டும் வெற்றி பெற்றனர்.

இதில், தில்லியைச் சேர்ந்த சேனா அகர்வால் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தில்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர் இவர்.

மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸில் எம்.ஏ. பட்டம் பெற்ற ருக்மணி ரியார் 2-வது இடத்தையும், தில்லி ஐ.ஐ.டி.யில் எம்.டெக். படித்த பிரின்ஸ் தவாண் என்ற மாணவர் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ராமாநாதபுரத்தைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானியான எஸ்.கோபால் சுந்தரராஜ், அகில இந்திய அளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். போடி நாயக்கனூரைச் சேர்ந்த எம்.சுந்தரேஷ் பாபு 38-வது இடத்தையும், புதுக்கோட்டையைச் சேர்ந்த கே.செந்தில்ராஜ் 57-வது இடத்தையும்,  அழகுவார்சினி 77வது இடத்தையும், ஆர்த்தி 190வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


தமிழக மாணவர்கள் யு.பி.எஸ்.சி. தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான எண்ணிக்கையிலேயே வெற்றி பெற்றுள்ளனர். மொத்தம் 910 மாணவர்களில் 68 பேர் தமிழக மாணவர்கள். கடந்த ஆண்டு இந்தத் தேர்வில் 96 மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஜுன் 12-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 4.7 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 2.4 லட்சம் மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்றனர்.

இவர்களில் 11,984 மாணவர்கள் பிரதானத் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதான தேர்வு எழுதியவர்களில் 2,417 மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு 2012 மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களில் 183 பேர் தமிழக மாணவர்கள். அதன்பிறகு, முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தம் 910 பேர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் 420 பேர் பொதுப்பிரிவினர், 255 பேர் ஓ.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள், 157 பேர் எஸ்.சி. பிரிவையும், 57 பேர் எஸ்.டி. வகுப்பையும் சேர்ந்தவர்கள்.

முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களில் படித்த மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 910 பேரில் 195 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பல லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு போராட்டம் நடத்தி அந்த போராட்டம் வெற்றி பெற்றால் எவ்வளவு சந்தோசமிருக்குமோ அவ்வளவு சந்தோசத்தில் சிக்கித்தவிக்கிறது வெளிச்சம்உறவுகளே! எங்களின் சந்தோசங்களை உங்களுக்கும் சமர்ப்பிக்கிறோம்.



 வெளிச்சம்  அமைப்பின் 7 ஆண்டுகால ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கான களப்பணியில் வெளிச்சம் மாணவர்களின்  ஏராளமான  அவமானங்களை சந்தித்திருக்கிறது ஆனால் இந்த பணியை விட்டுவிடவில்லை..

 மூன்று வருடங்களுக்கு முன் வெளிச்சம்  மானவர்கள் உண்டியல்  ஏந்தியபோது அப்போதைய  திமுக அரசுக்கு வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்து முதல்தலைமுறை மாணவர்களின் கல்விகட்டணத்தை அரசே ஏற்றது.. அதோடு நமது வேலை முடிந்துவிட்டது என்று நாம் முடங்கிவிடாமல் இனியும் பணம் எந்த மாணவர்களின் கல்வியையும்  பாதிக்ககூடாது  என  கழுகு பார்வையோடு கண்காணித்த வெளிச்சம் ஏழைகளின் உயர்கல்விக்காக தொடர்ந்து போராடி வருகிறதுஇந்த தொடர்பயணத்தில்  1000 க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற  பல மாணவர்கள்  பணமில்லாமல் தவித்ததை வெளிச்சம் ஆய்வு செய்து கீழ்கண்ட விசயங்களை முன் வைத்து 21.07.11 அன்று சென்னை பத்திர்க்கையாளர்கள் மன்றத்தில்  1000 த்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று கல்லூரிக்கட்டணம் செலுத்த முடியாமல் இருந்த  25  மாணவர்களை   கொண்டு வெளிச்சம்  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தியது வெளிச்சம்.. மேலும் இதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர்  மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்  கவனத்திற்கு எமது கோரிக்கையை கொண்டு சென்றோம். எமது கோரிக்கையை உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பழனியப்பன் அவர்களிடம் நேரடியாக எடுத்துரைத்தோம். எமது கோரிக்கையின் நியாயத்தை புரிந்துகொண்ட அமைச்சர் பரிரீலனை செய்வதாக  உறுதி அளித்தார்…( முதல்வருக்கும், உயர்கல்வி அமைச்சருக்கு வெளிச்சம் அனுப்பிய மனுவின் நகல்கள்… )

அமைச்சரின் சந்திப்பிற்கு  அவரின்  மேல்நடவடிக்கைகளுக்காக காத்திருந்தோம்ஒரு நல்ல விசயங்களுக்காக காத்திருந்தால் எல்லாம் நல்லதே நடக்கும் என்பது போல் நமக்கு நல்ல செய்து  உயர்கல்வித்துறையிலிருந்து கிடைத்தது அது என்ன வெனில் ஆகஸ்ட் 9 தேதியான நேற்று தமிழகத்தின் பல்கலைகழக துணை வேந்தர்கள்,கல்லூரி முதல்வர்கள்,வங்கி மேலாளர்கள், உட்பட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டதாகவும் தமிழகத்தின் ஏழை மாணவர்களின் கல்விக்காக உத்தரவு பிறப்பிக்கப்படும் என வெளிச்சத்திற்கு தகவல் கிடைத்ததுஅதன் பின் நமக்கு கிடைத்த தகவல்கள் என்ன வெனில் வெளிச்சத்தின் அனைத்து  கோரிக்கைகளின் அம்சங்களும் அப்படியே விவாதிக்கப்பட்டதாகவும் அவை அனைத்தும் அமல்படுத்தப்படபோவதாகவும் தகவல் சொன்னார்கள்  இப்போ சொல்லுங்க உங்களுக்கும் சந்தோசம் தானேநமக்கு கிடைத்த செய்தியை உறுதி செய்தது  இன்றைய தினமல்ர் (9.8.11) செய்தி.. (அரசின் உத்தரவாக  தினமலர் செய்தி) தமிழகத்தின் பல்லாயிரங்கணக்கான ஏழை மாணவர்களின் வாழ்க்கையை காப்பாற்ற வெளிச்சம் முன்வைத்த வெளிச்சம் அமைப்பின்  கோரிக்கை ஏற்ற அமைச்சருக்கும், தமிழக முதல்வருக்கும் ஒட்டுமொத்த மாணவர்களின்  உறவுகளாக வெளிச்சம் நன்றியை முன் வைத்து இந்த அறிவிப்பை அரசு உத்தரவாக்கிட வேண்டுமென இன்னொரு கோரிக்கையை முன் வைக்கிறது வெளிச்சம்இது போன்ற நியாயமான கோரிக்கைகள் வெல்ல துணை நின்ற பத்திரிக்கையாளர்களின் போனாக்களின்  எழுத்துக்களை வெளிச்சம் வணங்குவதோடு…..  எம் நியாயமான கோரிக்கைகளுக்கு துணை நிற்கும் உறவுகளே உமக்கும்                நன்றி நன்றி நன்றி……


நன்றியுடன்
ஏழைகளின் கல்விக்கன களப்பணியில்
வெளிச்சம் மாணவர்கள்



                    
நமது கோரிக்கை மனு:
                                                            Demand  Petition..........................................Link 
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்  படங்கள்
                                                              Press Meet Photos ......................................Link
பத்திரிக்கை செய்திகள்
                                                        Press Meet Press Clippings ..............................Link