பெண்ணை காப்பாற்றி "செக்ஸ் டார்ச்சர் ' தலைமை ஆசிரியரை உள்ளே தள்ளிய வெளிச்சம் மாணவர்கள்

Posted by Unknown - -


மகளீர் தின  விழாவில்  "செக்ஸ் டார்ச்சர்க்கு '  ஆளான பெண்ணை காப்பாற்றிய வெளிச்சம்

3வது மனைவிக்கு "செக்ஸ் டார்ச்சர்': தலைமை ஆசிரியர் போலீசார் கைது

புனிதாவிற்கு ஏற்ப்பட்ட கொடுமையை பிறகு பதிவு செய்கிறோம்.. அதற்கு முன்பாக தினமலர் செய்தியை படியுங்கள்  


கொளத்தூர் : மூன்றாவது மனைவிக்கு "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.சென்னை கொளத்தூர் முத்தமிழ் நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகன் வரதராஜன்(49). இவர், திருவொற்றியூரில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். உடல் நலம் பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இதையடுத்து வரதராஜன், சேலத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி(35) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இரண்டே மாதங்களில் விஜயலட்சுமி விவாகரத்து பெற்று பிரிந்தார்.அதன்பின், வரதராஜன் மகன், மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடலூரைச் சேர்ந்த புனிதா(45) என்பவர் தனக்கு மணமகன் தேவை என பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்திருந்தார். அதைக் கண்ட வரதராஜன், அவரை தொடர்பு கொண்டார். அவர் சென்னை தி.நகரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வரதராஜன், கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் புனிதாவை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தனது குரூர விருப்பப்படி, புனிதாவுக்கு "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்தார். அவரை சந்தேகித்தார். பல நாள் இப்பிரச்னையை அவர் தாங்கிக் கொண்டார். நேற்று முன் தினம் வழக்கம் போல் அவர் "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்தார்.மேலும், புனிதாவை கண்மூடித்தனமாக தாக்கி, அறையில் தள்ளி கதவை பூட்டிவிட்டு, வெளியில் சென்று விட்டார். அறைக்குள் தவித்த புனிதா, மொபைல் போன் உதவியுடன் சென்னையில் உள்ள "வெளிச்சம்' என்ற பெண்கள் அமைப்பிற்கு தகவல் கொடுத்தார். அந்த அமைப்பினர் கொளத்தூருக்கு சென்று, புனிதாவை மீட்டனர். அவர்கள் உதவியுடன், புனிதா தனது கணவர் பற்றி, கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அவரைக் கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். 

நன்றி: தினமலர்





சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்

ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…

3 Responses so far.

  1. Muthumani says:

    வாழ்த்துக்கள் .

  2. Anonymous says:

    பதிவு அருமை ! நன்றிகள்

  3. Unknown says:

    ungaludaiya samooga pani thodara ennudaiya manamarntha vaazhthukkal...

Leave a Reply