மனதில் பட்டது

Posted by Unknown - -

சத்துணவுக்கு பணமில்லையெனில்
பிச்சையெடுப்போம் என்றார் கர்மவீரர்...
அதிலிருந்து தொடங்கி...
வாரம் ஒன்றாயிருந்த
முட்டை ஐந்தானது...
கலைஞராட்சியில்..
வாரம் முட்டையில்லாமல்
உருளை கிழங்கு சுண்டல்
அம்மா ஆட்சியில்...
மாண்வர்களொடு சாப்பிடுற
போஸ் இல்லாத போஸ்டரும்..
சத்துணவு இடம்பெறாத
தேர்தல் அறிக்கைகள் உண்டா
சொல்லுங்கள்....
இவர்களின்
இலவசங்களின் வரிசையில்
இப்போதைக்கு
செல்போனும் முட்டையும் தான்
ஹாட் டாபிக்...
என்னதானாலும்..
எட்டாத கனிதானாங்க
ஏழைகளுக்கு தரமான கல்வி...

Leave a Reply