1000க்கு மேல் மதிப்பெண் எடுத்த கீதா தேவியின் கல்விகனவுக்கு உயிர்கொடுத்த வெளிச்சம்...

Posted by Unknown - -

 உறவுகளே! 
              வெளிச்சம் மாணவர்களின் வணக்கங்கள்..  உங்கள் வழிகாட்டுதலுடன் எமது கல்விப்பயணத்தில் இன்னொரு புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது..

சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் படிக்கும் வெளிச்சம் மாணவி  வைசாலி  திருத்தணிக்கு அருகில் உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்த கீதாதேவியையும் அவரது தந்தை சீனிவாசனையும் அழைத்து வந்தார்.  கீதா தேவி  வறுமையின் சூழலிலும் பன்னிரெண்டாம் வகுப்பில் 1024/1200 மதிப்பெண்ணும் பொறியியல் கட் ஆப் 180.75 எடுத்திருந்தும் தங்களுடைய தலைமுறையிலேயே முதன்முதலில் கல்லூரிக்கனவு பணமில்லாமல் படிப்பை தொடர முடியாமல் தவித்த கீதாதேவியின் வலியையும் உணர்ந்தவர்களாய் நாம் வெளிச்சத்தின் வாலண்டியர் அருண்குமார் கீதாதேவியின் பழைய வீட்டையும், நலிவடைந்த துணி தரி நெய்யும் வேலை செய்கிறார்கள் என கீதாதேவியின் குடும்பத்தினரின் இயலாமையால் பாரதி கல்லூரியில் சேர்க்கப்போனதும் தெரியவந்தது...  அப்போதுதான் நம் மாணவியை சந்தித்திருக்கிறார் கீதாதேவி...

கனவுக்கு உயிர்கொடுத்த வெளிச்சம்
                வலிகளை சுமந்தபடி வெளிச்சத்தை நாடினார் கீதாதேவி, ஆனால் வெளிச்சமோ கீதாதேவின் கனவை  நமக்கான வலியாக தமிழகத்தின் பல இடங்களில் தேடி அழைந்தனர்   வெளிச்சத்தின் கல்விக்கான வேலையை
பார்த்த  பெரியபாளையத்தில் உள்ள ஜே.என்.என் கல்லூரி கீதாதேவியை B.Tech பொறியியல் பட்டபடிப்பில் சேர்த்து கொள்வதாகவும் கீதாதேவியின் முழுகட்டணத்தையும் கல்லூரிநிர்வாகமும் ஏற்றுக்கொள்வதாகவும் உறுதியளித்து அதற்கான கடித்தை நம்மிடம் கொடுத்தார்கள்.. கடந்த ஒருவாரத்திற்கு முன் கீதாவை கல்லூரியில் சேர்த்தோம்..

இந்த நல்ல விசயத்தை வேலைபழுவின் காரணமாக பகிர்ந்து கொள்வதற்கான தாமதம் அதற்காக மன்னிப்பு கோருகிறோம்..


வெளிச்சத்தோடு இணைந்து கல்விக்கு உதவ:  விண்ணப்பம்

கல்விக்கனவை நனவாக்கிய அந்த கடிதம்:


நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்

Leave a Reply