ஆடு மாடு வித்து படிக்க அனுப்பின பையன் பாடையில வந்தானே! மாணவனின் மர்மச்சாவுக்கு நீதி கேட்கும் பெற்றோர்

Posted by Unknown - -

சில வாரங்களுக்கு முன் பெரம்பலூரில் உள்ள தனலெட்சுமி பொறியியல் கல்லூரியில் மர்மமான முறையில் அண்ணாதாசன் என்கிற மாணவன் இறந்து கிடக்க நியாயம் கேட்டு சக மாணவர்கள் எல்லா பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர் நமக்கு தகவல்கிடைத்ததும் அங்கு நமது மாணவர் கணபதியை அனுப்பி வைத்தோம்.. உள்ளே விடாத கல்லூரி நிர்வாகம் கள்ளமவுனம் காத்தது எல்லா பத்திரிக்கையும் இப்பிரச்சனை குறித்து எழுதினால் கல்லூரி கொடுக்கும் விளம்பரத்தால் தங்களுக்கு  கோடிக்கணக்கில்  சம்பாதிக்கமுடியாதென பத்திரிக்கைகள் பத்திரிக்கை தர்மத்தை பறக்கவிட்டனர்.. ஆனால் ஜூனியர்விகடன் மட்டும் 8 மாவட்டத்தில் வெளியிட்டது. வெளியான புத்தகங்களை மொத்தமாக வாங்கி செய்தி பரவுவதை தடுத்தார்கள் கல்லூரி நிர்வாகம்... நமக்கு புத்தகங்கள் கிடைக்காத சூழலில் திருச்சியிலுள்ள நமது மாணவி கீழ்கண்ட நகலை இணைத்துள்ளோம்..

ஆகஸ்ட் மாதம் 18 தேதி போராட்டம் நடத்திய மாணவர்கள் கல்லூரிக்குள் இதுவரை 22க்கும் மேற்பட்ட மாணவர்கள் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்கள் நீதிவிசாரணை நடத்திட வேண்டும் என்றார்கள் ஆனால் காவல்துறை அனுமதி மறுத்தது...

இது கல்லூரி நிர்வாகத்தை தட்டிக்கேட்கும் மாணவர்கள் மர்மசாவுகளுக்கு ஓர் சாட்சி

Leave a Reply