பெற்றவர்களை மதிக்காத யாரும் சாதித்ததில்லை- பொங்கல் விழாவில் வெளிச்சம் மாணவர்கள்

Posted by Unknown - -


பொங்கல் திருநாளில் முதல் மூன்று நாட்களை  பழங்குடியின மக்களோடு பயணித்தை ஏற்கனவே http://velichamstudents.blogspot.com/2011/01/blog-post_24.html ல் பதிவு செய்திருந்தோம்.. இவை ஒரு புறமிருக்க மற்ற  இரண்டு நாட்கள் பொங்கல் அன்று பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் கிராமத்தின் பாரதியார் தெருவில் நடைப்பெற்ற விளையாட்டு போட்டியில் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வெளிச்சம் மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்விற்கு வெளிச்சம் மாணவர்கள் மாநில அமைப்பாளர் வெளிச்சம் ஆனந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டார்..  விழாவில் முன்னால் ஒன்றிய கவுன்சிலரும் ஆசிரியருமான சுந்தர்ராஜன் அவர்கள் தலைமையில் விழா அருமையாக ஒருங்கிணைத்திருந்தார்கள் இளைஞர்கள்.. விழாவில் பேசிய ஆனந்தகுமார் அவர்கள் வருடத்திற்கு ஒரு நாள் ஒன்று கூடி விளையாடுவதும், விழா எடுப்பதும் கலை ந்து செல்லுதல் கூடாது.. மாறாக பெற்றவர்கள் பிள்ளைகளோடு பேசவேண்டும் ஏனெனில் பிள்ளைகளுக்காகவே பாடுபடுகிற பெற்றவர்கள் பிள்ளைகளோடு பேசுவதில்லை அதனாலேயே பிள்ளைகள் பெற்றவர்களை பிள்ளைகள் மதிப்பதில்லை.. ஒரு காலத்தில் பெற்றவர்கள் பிள்ளைகளுடன் மட்டுமே பேசுவது சுகமாய் கருதப்பட்டது ஆனால் இப்போது அந்த நிலமை தொடர்கிறதா என்ற கேள்வியை மக்களிடம் எழுப்பியபோது பெற்றவர்கள் தவறை உணர்ந்தபடி நின்றனர்…. மேலும் பிள்ளைகளே! உலக வரலாற்றை படித்து பாருங்கள்.. பெற்றவர்களை மதிக்காத  யாரும் சாதித்ததில்லைநீங்கள் சாதிக்க பிறந்தவரா இல்லை வெறுமனே சாக பிறந்தவாரா என பிள்ளைகளை கேட்க அண்ணா! இனி எங்கப்பா ம்மாவை மதிப்போம்ண்ணா என எல்லோரும் மொத்தமாக எழுத்து சொன்னபோது நம் பயணத்தின் முயற்சிக்கு உந்து சக்தியாக இருந்தது…. மக்களின் மகிழ்ச்சி திருவிழாவாக அமைந்தது பொங்கல் விழா.. மொத்தத்தில் விழா ஒருங்கிணைத இளைஞர்களுக்கு நன்றியை உரிதாக்குகிறோம்..

 இரண்டு கிராம விளையாட்டு விழா படங்கள்…….
 உங்கள் பார்வைக்காக

திருவாளந்துறை கிராமத்தில் 



















 வ.களத்தூர் கிராமத்தின் பாரதியார் தெருவில் நடைப்பெற்ற விளையாட்டு போட்டியில் பரிசளிப்பு விழாவில்


 








 




Leave a Reply