அரசு பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவனை சேர்த்ததால் ஆத்திரம். , பள்ளிக்கு வராத 130 மாணவர்கள்

Posted by Unknown - -

 அரசு பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவனை சேர்த்த காரணத்தால்,  ஆத்திரமடைந்த (சாதி) வெறிப்பிடித்த பெற்றோர்கள் 130 மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாத சம்பவம் கொடுமை அரங்கேறியுள்ளது..

                     

திருவண்ணாமலை அடுத்த ஆடையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 77 மாணவிகள் உள்பட 135 பேர் படிக்கின்றனர்.  கடந்த  6ம் தேதி ஆடையூர் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட இனைத்தை சேர்ந்த  குமார் என்பவர் தனது மகன்களான  சதீஷை 6ம்  வகுப்பிலும்முத்துராஜை 1ம் வகுப்பிலும் சேர்த்துள்ளார். இன்று  காலை வழக்கம்போல் பள்ளி திறக்கப்பட்டது. தலைமை ஆசிரியர்  முகமது உஸ்மான் உள்பட 6 ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர்.  மாணவர்களுக்காக  சத்துணவும் தயாரிக்கும் பணி நடந்தது. ஆனால், சதீஷ், முத்துராஜ் உள்பட 5 மாணவர்கள்  மட்டுமே  பள்ளிக்கு வந்தனர்.  மற்ற  130 மாணவர்கள் வரவில்லை.

இதையடுத்து காலை 10 மணியளவில் ஆடையூர் கிராமத்தை சேர்ந்த  50க்கும் மேற்ப்பட்ட உயர்சாதியினர்  ஒன்றாகதிரண்டு  பள்ளிக்கு  வந்து  தலைமை ஆசிரியரான முகமது  உஸ்மானிடம்,  ‘‘தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த  சதீஷ், முத்துராஜ் ஆகியோரை  எப்படி நீங்கள் பள்ளியில் சேர்க்கலாம்.  அவர்களுக்கு ஆதிதிராவிட நலப்பள்ளி  இருக்கிறதே! இந்த மாணவர்களை அந்த பள்ளியில் அவர்களை சேர்த்திருக்கலாமே’’ என  தகராறு செய்தனர்.

ஆனால் தலைமை ஆசிரியர் முகமது  உஸ்மான்  , ‘‘பள்ளியில் சேருவதற்கு ஜாதி, மதம் எதுவும் தடையில்லை.  எல்லா  பிரிவு மாணவர்களும்  சேர்ப்பதுதான் எங்களது கடமை’’ என கூறினார்.  ஆனால் அந்த கும்பல் திருப்தி அடையாமல் தொடர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டனர்.

தகவலையறிந்த தி.மலை தாலுகா போலீசார் தி.மலை கலெக்டர்  விஜய் பிங்ளேவுக்கு தெரிவிக்கப்பட்டது.  அவரது உத்தரவின் பேரில் தி.மலை தாசில்தார் ரவிச்சந்திரன் உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.  விசாரணை அறிக்கையை கலெக்டரிடம் அளிப்பதாக தாசில்தார் தெரிவித்தார். 



அங்கிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் சமச்சீர் கல்விங்குறாங்க, சரிசமங்குறாங்கசுதந்திரமடைஞ்சி இத்தனை வருசத்துல எங்கல பள்ளிக்கூடடத்துல சேரக்கூடாதுன்னு சொல்லுறது என்ன நியாயம் சாமி என்றார்கள்  ஏதுமறியாதவர்களாய்..


அப்படின்னா எங்க இருக்கு சம (ச்சீர்) கல்வி…. 


திருவண்ணாமலையிலிருந்து வெளிச்சம் மாரி   

 Summary :
 If the addition of a low caste boy in school, and high-caste parents refuse to send 130 students in Thiruvannamalai District Adaiyur Village..



Leave a Reply