சக மனிதனை மனிதனாக நேசிக்க கல்வி கொடுக்கும் வெளிச்சம். 





"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் 
ஆலயம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும் 
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல் 
அன்ன யாவினும் புண்ணியம் கோடி 
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்" 
                        என்கிற வரிகளுக்கிணங்க ஏழை மாணவர்களுக்கு இலவசமாக உயர்கல்வி கொடுக்கவும். சாதி,மதம் இனம், பால்ரீதியாக ஒடுக்கப்படும் அனைவருக்கும் இயன்ற அளவு உதவிடவும்  வெளிச்சம் அமைப்பு வெளிச்சம் செரின்  என்கிற சமூக ஆர்வலரின் முயற்சியில் துவங்கப்பட்டது, வலிகளை மட்டுமே சுமந்ததன் மூலம், முதல்முதலாக அரியலூர் மாவட்டம் பிழிச்சிகுழி எனும் கிராமத்தில் பத்தாம் வகுப்பில் நிறைய மார்க் எடுத்தும் வறுமையினால் பள்ளிப்படிப்பை இழந்து  முந்திரிகொட்டை பறித்து கொண்டிருந்த செந்தில் என்கிற மாணவனை பார்த்து  அவனை விசாரிக்கும் போது  நமக்கு அவன் நிலமை இன்னும் ஆழமாக யோசிக்க வைத்தது,  அதன்படி தமிழகத்தின் பின் தங்கிய மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர்,  தர்மபுரி போன்ற மாவட்டங்களில் நிறைய மாணவர்கள் வறுமைக்கு படிப்பை பறிகொடுப்பதும், அதனால் முந்திரிகாடுகளிலும், கோயம்பேடு மார்கெட்டுகளிலும் கூலிகளாகி கஸ்ட்டப்படும் கொடுமை அரங்கேறுவதை கண்டு துடித்தார் வெளிச்சம்  செரின்.   நாம் இதை தடுக்க  எதையாவது செய்தே ஆக வேண்டும் இல்லையேல், மிகப்பெரிய கொடுமைகள் வருங்காலத்தில் அரங்கேறக்கூடும் என்பதை உணர்ந்தோம். 


                செந்திலுக்கு கல்வி கொடுக்க ஆரமித்ததில் "வெளிச்சத்தின்" பயணம் துவங்கியது.. (செந்தில் இன்று காரைக்குடி சிக்ரி யில் கெமிக்கல் இஞ்சினியரிங்க் முடித்துவிட்டு ஓமன் நாட்டில் ஜுனியர் சயிண்டிஸ்ட் ஆக பணிபுறிகிறார் என்பது வெற்றிச்செய்தி) அழிந்து கொண்டேயிருக்கும் சக மனிதனைக்காக துடிதுடித்து போகும் கிராமத்து மனித நேயத்தை அப்படியே தக்கவைத்து கொள்வதும், சக மனிதனை மனிதனாக நேசிக்க வேண்டும் என்பதும், பணம்மில்லை என்பதால் எந்த ஒரு மாணவனும் தன்னுடைய கல்வியை இழந்துவிடக்கூடாது அதை தடுப்பதுதான் வெளிச்சத்தில் பிரதான நேக்கம்... 


515 முதல் தலைமுறை மாணவர்கள் வாழ்வை மாற்றிய வெளிச்சம்..  
                                வெளிச்சம் படிக்க வைக்கும் மாணவர்கள் அனைவரும் இந்தியா சுதந்திரமடைந்து இவ்வளவு காலங்களில் இவர்கள் குடும்பங்களில் எவரும் கல்வி சாலைகள் பக்கம்கூட திரும்பி பார்க்காத அப்பா-அம்மாக்களுக்கு பிறந்த முதல் தலைமுறை மாணவர்கள். இந்த மாணவர்களுக்கு வெளிச்சம் கல்வி கொடுப்பதோடு மட்டுமல்லாமல், இவர்களுக்கு நாம் முன்னமே சொன்ன சமூக கடமைகளையும் கூடவே போதிக்கிறோம். ஏனெனில் இவர்கள் படித்து, அவர்கள் வளர்ந்து வந்த கிராமத்துக்கும் - சமூகத்துக்கும் அவர்கள் திரும்ப செய்யவேண்டும். (Pay Back to the society).   வெளிச்சத்தினால் படிக்கும் இவர்கள் இவர்களை போல் கஸ்டப்படும் மாணவர்களுக்கு நிச்சயம் உதவுவார்கள் என்பதே நமது நம்பிக்கை. "செந்தில்" என்கிற மாணவனில் ஆரமித்த சமூக பயணம் இன்று 515 மாணவர்களில் தலை எழுத்தை மாற்றி எழுதியிருக்கிறது.. இவர்களில் 86 மாணவர்கள் பொறியியல் பயிலும் மாணவர்கள், 11 மருத்துவ மாணவர்கள் என மற்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில் பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்.. மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து வருகிறார்கள் என்பது சந்தோசமான செய்தி..




வெளிச்சம் நிதி சேகரிக்கும் வழிமுறை: 
                                       வெளிச்சம் இந்த நிமிடம் வரை கிட்டத்தட்ட ஒன்னரை கோடி ரூபாய் வரையான நிதியை நன்கொடையாளர்களிடமிருந்து மாணவர்களின் கல்லூரியின் பெயரில்                      "காசோலை"  (Demand Draft ) ஆக வாங்கி நேரடியாக கல்லூரிக்கு  அனுப்பபடுகிறது.. இதில் வெளிச்சம் எந்த வகையிலும் பணத்தினை கையில் வாங்கியதில்லை அதனால் தான்.... வெளிச்சத்தின் மூலம் இவ்வளவு தூரம் சாத்தியமாகியுள்ளது என்பது மகிழ்ச்சியான விசயம்.  அது மட்டுமில்லாமல் ஒரு கட்டத்தில் நன்கொடையாளர்கள் யாரும் வராத சூழலில் சென்னை நகரங்களின் பல்வேறு இடங்களில் வெளிச்சத்தின் முன்னால் மாணவர்கள் 40 பேர் படிக்கும் மாணவர்களுக்காக உண்டியல் குலுக்கிட முடிவெடுத்து, அதன்படி உண்டியல் குலுக்கி அதில் கிடைத்த பணத்தில் 38 மாணவர்களுக்கு கல்லூரிக்கட்டணம் கட்டினர் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்..  இச்செய்தி “தமிழக அரசியல்”,”டெக்கான் குரேனிக்கல்”,”என்.டி,டிவி” போன்ற ஊடங்கங்களிலும் வெளியானது..  அதன் பின் தான் தமிழக அரசால் முதல் தலைமுறை ஏழை மாணவர்களுக்கான இலவச உயர்கல்விக்கான அரசாணை வெளியிடப்பட்டது. நமது  பயணம் தொடர்கிறது.. அது மட்டுமில்லாமல் வெளிச்சத்திற்கான நண்பர்கள் உதவியிலும், வெளிச்சத்தின் முன்னால் மாணவிகள் சிலர் எம்ராயிடரிங்க்,  சுடிதார் தைப்பதாலும், அதிலிருந்து வரும் வருவாயில்தான் வெளிச்சத்தின் அன்றாட நகர்வுகள் மிக சிரமத்துடன் நடைபெருகிறது... 


வெளிச்சத்தின் நீண்ட கால திட்டம்: 



ஒரு மாணவனில் இருந்து துவங்கிய வெளிச்சத்தின் கல்வி பயணம் இன்று 515 யை கடந்து நிற்கிறது..நிச்சயம் இது நீளுமே தவிர நின்று விடாது.. உயர்கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம் என்கிற  நோக்கில் ஏழைகளின் உயர்கல்விக்காக தொடரும் எங்கள் பயணத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். ( நிதி உதவிக்காக மட்டுமல்ல)  நீங்களும் இணையலாம் (Form) எங்களை போன்ற மாணவர்களுக்கு உதவிடுங்கள்.. 
                                                                                                                                                                நன்றியுடன்... வெளிச்சம் மாணவர்கள்...  


வெளிச்சம் மாணவர்களின் வங்கி கணக்கு விபரம்: 


ACCOUNT NAME:               " VELICHAM STUDENTS EDUCATIONAL AND WELFARE TRUST "
ACCOUNT NO:                   31654850476,
Branch Name:                     STATE BANK OF IINDIA, PERAMBUR, CHENNAI,
IFSC Code:                          SBIN 0002256
SWIFT Code:                       SBININBB458


Email: velicham.students@gmail.com, 
Phone: STUDENTS HELP LINE -9698151515
Web;  www.velicham.org
          http://velichamstudents.blogspot.com