குழந்தையை போல பிறந்த 2012

Posted by Unknown - -


புத்தாண்டுக்கு முதல் நாளோடு நமக்குள் அவசர அவரமாக போடப்பட்ட எத்தனையோ தீர்மானங்கள்  தோற்று போயிருக்கலாம். ஆனால் தனிப்பட்ட வாழ்வில் ஒவ்வொரு நாளும் புதிய அனும்பவங்களிலிருந்துதான்  புதிய விசயங்களை கற்றுக்கொள்கிறோம்.

அன்னையின்  மடியில் தவழ்ந்த நிமிடங்கள் முதல் இப்போதுவரை ஒவ்வொரு நிமிடத்திலும் சில தவறுகளும், சறுக்கல்களும், தோல்விகளும் இல்லாமல் இல்லை இவற்றுக்கு பெயர்தான்  அனுபவம்.

இப்படியான பல அனுபவங்களில் தான் பயணமானது நம் பயணம்.
வெளிச்சம்  எத்தனையோ தோல்விகளையும், சறுக்கல்களையும் கண்டுள்ளது ஆனாலும் இந்த பொறுப்பு நமக்கு மட்டும்  என்று யோசிக்கும் போது நாம் பட்ட கஸ்டங்களை தவிர பலரின் கண்ணீரை துடைத்த  போது  அவர்கள் முகத்தில் காணப்படும் ஆயிரம் வாட்ஸ் சந்தோசத்திற்கு ஈடேதுமில்லை. அந்த நிமிடங்கள் தான் பல நேரங்களில் நொந்து கிடக்கும் நம்மை இன்னும் வேகமாக உழைக்க வைக்கிறது..

இப்படியான அனுபவங்களில் தான் ஒரு குழந்தையை போல பிறக்கிறது 2012 வருடம், பல புத்தாண்டு சந்தோசத்தில் அவரவர் விருப்பம் போல்  பட்டாசு கொளுத்தியோ, கேளிக்கை விடுதியிலோ, கொண்டாடக்கூடும் ஆனால் நாம்  நம்மை பரிசீலனை செய்து கொண்டு இன்னும் வேகமாக  இயங்குவதற்கு ஏதுவாக இந்த புத்தாண்டை கொண்டாடினோம்..

உயிரோடு நாம் இருக்கிறோம் என்பதற்கு அடையாளம் நாம் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்றே அர்த்தம்.

தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருப்போம்..



புத்தாண்டும் மாணவியின் பிறந்த நாளும்


வெளிச்சம் செரின்

வெளிச்சம் கொடு


மகிழ்ச்சி பரிமாறல்






One Response so far.

  1. uyirodu iruppathan arththam intha vaalththu... vaalththukkal

Leave a Reply