எம் மீதும் இரக்கம் காட்டுங்கள்

Posted by Unknown - -


இன்று யூத மக்களின் அடிமை விலங்கை உடைத்தெரிந்து உலகத்தில்  அவமான  சின்னமாயிருந்த  சிலுவையை புனிதமாக்கிய ஏசு கிருஸ்து பிறந்த  தினம், உலகின் எல்லா மூலையிலும் கொண்டாட்டங்கள் கோலாகலமாய் அரங்கேறிக்கொண்டிருக்கிறது ஒரு பக்கம். நீங்கள் உங்கள் குடும்பத்தோடு சந்தோசமாயிருக்கும் சமயத்தில்  எல்லா பண்டிகைகளுக்கும் போல உங்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறோம்.

நாங்கள் பணமில்லாமல் கல்லூரி படிப்பை இழக்கயிருந்த முதல் தலைமுறை ஏழை மாணவர்கள், இப்போது உயர்கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம் எனும் நோக்கத்திற்க்காக ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக உழைக்கும் இயக்கம் தான் வெளிச்சம் மாணவர்கள் எனும் அமைப்பு..

மாணவர்களின் உயர்கல்விகாக 7 வருட களப்பணியில் ஒரு  மாணவனில் இருந்து துவங்கிய எமது கல்வி பயணம் இன்று 615 யை கடந்து நிற்கிறது. நிச்சயம் இது நீளுமே தவிர நின்று விடாது...

நாங்கள் படித்த (மார். 19:10)   சமூக, பொருளாதார, அரசியல் ஒடுக்குதலால் வெளிக்கு தெரியாமல் அடக்கப் பட்டிருந்தவர்களை மீட்கவே கிறிஸ்து இவ்வுலகில் பிறந்தார் என்பதாகும்.

இந்த தினத்தில் மனிதனேயமுள்ளவர்களாக எங்கள் பயணத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ள  எங்களை போன்ற மாணவர்களுக்கு உதவிடுங்கள்..

உதவி செய்ய நினைப்பவர்கள் :  https://spreadsheets.google.com/viewform?formkey=dFR0MFJtbllsNUNrRk9CTG82ZlJxOWc6MQ இந்த இணைப்பிலும் தெரிவிக்கலாம்  
அல்லது 

மின்னஞ்சல் அனுப்பலாம்.

நன்றியுடன்
கல்விக்கான களப்பணியில்
வெளிச்சம் மாணவர்கள்

Leave a Reply